விழியோரத் தேடல் நீ (தீபாஸ்)
தேடல் – 7
வீட்டிற்கு வந்ததும் கவிழையாவிற்கு
ஹோட்டலில் நடந்த எதுவும் கண்ணைவிட்டு அகலாமல் அவளை பாடாய்படுத்தியது. மஹிந்தனின் நடவடிக்கை தன்னை விபரீதமான நிலைக்குத் தள்ளுவதை
புரிந்துகொண்டாள்.
‘ஏதாவது செய்து
அவனிடம் இருந்து தப்பித்துவிட வேண்டுமே.... ஆனால் என்ன செய்ய...?’ என்று ஒன்றும் புரியாமல்
மறுநாள் தனது தோழி வனித்தாவை சந்தித்து பேசி தெளிவாக ஏதாவது செய்ய திட்டமிட நினைத்தாள்
மறுநாள் பூங்காவில் வனித்தாவுடன்
அமர்ந்திருந்தாள் கவிழையா. “என்னடி கவி பக்கத்துத் தெருவில் இருக்கிற என்னைய கூப்பிட
காரில் வந்திருக்கிற...?! சரி காரில் எங்கோயோ என்னைய கூப்பிட்டுப்போகப் போறேன்னு பார்த்தா... என்வீட்டுப்பக்கதில் இருக்கிற பூங்காவுக்கு கூட்டிட்டு வந்துருக்க...!?.
காரில வச்சு டிரைவர் இருக்காரு
எதுவும் பேசவேண்டாம் போனதும் பேசலாம் சொல்லி ரகசியமா பேசுன....,
இப்போ இங்கு
வந்தாலும் கவலையோடு உக்கார்ந்திருக்க, என்னடீ விஷயம்...?”, என்றாள்
வனித்தா.
வனித்தா கேட்டதும் தன்னை அடக்க முடியாமம்ல் விம்மி அழுத கவி தான் வேலையில்
சேர்ந்தது முதல் நேற்று ஹோட்டலில் நடந்ததுவரை அனைத்தையும் அவளிடம் கூறினாள்
அவள் கூறியதைக் கேட்ட வனித்தா,
“அந்த வில்லன் மஹிந்தன்,
உன்ன வச்சுக்கவும் அந்த
ஐஸ்வர்யாவை கட்டிக்கவும் நினைக்கிறான் போல..., நீ
சொல்றதப்பார்த்தா அவன் பணபலமும் ஆள்பலமும் இருக்குறவனா தெரியுறான் எப்படி அவன்கிட்ட
இருந்து தப்பிக்கப்
போற கவி...?”.
“அதுதான் வனி
இப்போ எனக்கு பெரிய யோசனையா இருக்குது!. அவன் கொடுத்த
ஒரு மாசத்துக்குள்ள இதிலயிருந்து எப்படியாவது தப்பிச்சிடணும்னு நினைக்கிறேன். ஆனா எப்படி
தப்பிக்க வனித்தா....? இன்னைக்கு ஞாயித்துக் கிழமை ஆபீஸ் இல்லை.... அதனால என்மனதில உள்ள பாரத்தை உன்கிட்ட இறக்கிவச்சுட்டு ஏதாவது
யோசனை உன்கிட்ட கேட்கலாம்னு நினைத்தேன்ப்பா...
அதுக்காக நான் என் ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணி உன் வீட்டுக்கு
வரணும்னு கிளம்போனேனா.... அப்போ எங்கிருந்துதான்
அந்த மஹிந்தனின் ஆட்கள் வந்தார்களோ
தெரியலை, என் ஸ்கூட்டிக்கு வழிவிடாமல் மறைச்சு நின்னுட்டாங்கடீ....
நான் அவங்ககிட்ட எதற்கு வழிய மறைக்கறீங்கனு கேட்டால்,
மேடம், நீங்கள் எங்கே போகணும் என்றாலும் காரில்தான் கூட்டிகிட்டுப்
போகணும்னு பாஸ் சொல்லியிருக்காங்க” அப்படின்னு
அவிங்க சொல்லி முடிக்கறதுக்குள்ள கார் என் வீட்டு வாசலுக்கு வந்துருச்சு...
என் ஸ்கூட்டியை வழிமறிச்சதும் அவிங்க பேசுவதை பார்த்ததுமே என் குடும்பமே வெளியே வந்துருச்சு.... எங்கப்பா
எனக்கு முன்ன வந்து நின்னு ”யாரு நீங்க...? என்
மகள் கூட எதுக்கு தகராறு செய்றீங்க...?” அப்படின்னு
கேட்டாரா...
அதுக்கு அந்த மஹிந்தனோட ஆட்களில் ஒருத்தன் எங்க அப்பாக்கிட்ட
‘மஹிந்தன் சாப்ட்வேரின் செக்ரட்டரி போஸ்டில் உள்ள உங்கமகள் கவழையா மேடத்திற்கு பாதுகாப்பு
கொடுக்கறதுக்கு பாஸ் எங்கள அனுப்பியிருக்காங்க.... அவங்க
ஸ்கூட்டியில் போறது சேப் கிடையாது.... அதனால எங்க மேடம் எங்க போகறதா இருந்தாலும் காரில்
கூட்டிட்டுப் போகச் சொல்லியிருக்காங்க எம்.டீ அப்படின்னு
சொல்லிட்டான் டீ....
அப்பவே அம்மா அப்பாவிடம் எல்லாத்தையும்
சொல்லணும்னு நினைச்சேன். அவன் என்னைய அப்படி கூப்பிடுறான்னு தெரிஞ்சா ரொம்ப
பயந்துடுவாங்க வனி.....
அதனாத்தான் உன்கிட்ட பேசிட்டு
எப்படியாவது பணம் குடுக்காம அவன்கிட்ட இருந்து மீளமுடியுமானு யோசனை கேக்கலாம். அப்படி
யோசனை எதுவும் வராட்டாலும் அம்மா அப்பாவிடம் கொஞ்சம் பதட்டம் இல்லாமல் என் நிலையை சொல்ல
கொஞ்சம் என்னை ரிலாக்ஸ் செஞ்சுகிட்டு போகலாம்னு நினைத்தேன் வனி....
வீட்டில உள்ளவங்ககிட்ட நான் வனித்தாவை
பார்த்துட்டு வந்த பிறகு உங்களிடம் பேசுறேன்னு சொல்லிட்டு காரில் ஏறி உன்னைய பார்க்க
கிளம்பி வந்துவிட்டேன்” என்றாள் கவிழையா.
மூணு வருஷ காண்ட்ராக்டில நான்
வேலைக்குச் சேர்ந்திருக்கிறேனு சொன்னதையே அம்மா அப்பாவால ஜீரணிக்க முடியல, அதில் நானாகவே
வேலையைவிட்டா ஐம்பதுலட்சம் கொடுப்பதற்கு ஒத்துக்கிட்டு கையெழுத்திட்டு போட்டுட்டேன்னு சொன்னதை கேட்டே ஏற்கனவே
பயந்து போயிருக்காங்க.
இதில் மஹிந்தன் என்னைய அடைய நினைக்கிறான்னு
தெரிஞ்சா உயிரையே விட்டுடுவாங்க.... எனக்கு என்ன செய்யன்னு ஒண்ணுமே புரியலையே!”
என்று கண்ணீருடன் கூறினாள்.
அவர்கள் அவ்வாறு பேசிக்கொண்டு
இருக்கும் போது அவர்களைத்தேடி அங்கேயே ஈஸ்வரன் வந்துவிட்டார்.
“கவி…”
என்று அழைப்பதை பார்த்து திரும்பிய கவிழையா “அப்பா
உங்களுக்கு எப்படி நாங்கள் இங்கு இருகோம்னு தெரிந்தது...?” என்று
கேட்டாள்.
அதற்கு ஈஸ்வரன்
“உன்னைய தேடிவருற வழியில் பூங்கா வாசலில நீ வந்தகாரை பார்த்து உள்ளே வந்தேன்...”,
என்றவர் “என்ன பிரச்சனை...?” என்று நேராக விசயத்துக்கே வந்துட்டார்..
தன் தந்தையிடம் தான் மஹிந்தனை
சந்தித்தது முதல் நேற்று நடந்ததுவரை அனைத்தையும் கூறினாள் கவி. மகள்
கூறியதைக் கேட்ட ஈஸ்வரன் இடிந்துபோய் அமர்ந்துவிட்டார். பின்
தன்னை சிறிது திடப்படுத்திக்கொண்டு நம்மால அவன்கிட்ட மோதி தப்பிக்குற அளவு ஆள் பலமும்,
பண பலமும் இல்லை. ஆனா இது என்னோட மகள் பத்திய விபரம் இதை நான் வெளியில் சொன்னால்
உனக்கு நல்ல வாழ்க்கை அமையறதிலும் பிரச்சனை வரும்.... அதனால்
நம்மால் இதை வெளியில் சொல்லவும் முடியாது....
அவன் சொல்லி இருக்கிறதுபோல இந்த ஒரு மாதத்தில் எப்படியாவது இதில் இருந்து தப்பிக்க
வழி கண்டு பிடிக்கிறேன். உனக்கு எதுவென்றாலும் இந்த அப்பா துணைக்கு இருக்கிறேன்
கவி...” என்றார்.
“ஆனா இப்பவே உன் அம்மாவிடம் இதை நீ சொல்ல வேண்டாம் கவி.
நான் நேரம் பார்த்து உன் அம்மாக்கிட்ட சொல்லிக் கொள்கிறேன். இது தெரிஞ்சா
அவள் ரொம்ப பயந்துடுவா...” என்றார்
“இனி ஒரு
தடவை உன்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ண டிரை பண்ணினா உடனே நீ வேலையை விட்டு வந்துடு கவி.... நான் ஒரு மாதத்திற்குள்ள என் தலையை அடமானம் வைத்தாவது ஐம்பது இலட்சம் ரூபாய்க்கு
ஏற்பாடு செய்துடுவேன்...” என்றார்.
அவர் சோர்வுடன் எழுந்து,
“நீங்கள் இருவரும் பத்திரமாக வாங்க நான் முன்னாடிப் போறேன்...” என்றார். சோர்வுடன்
நடந்து போகும் தன அப்பாவை பார்த்த போது கவிழையாவின் துக்கம் அதிகரித்தது.
*******
கதிர் மஹிந்தனுடன் அவனுடைய ரிசார்டில்
உள்ள கடல் பார்த்து அமைந்திருந்த மேற்கூரை மட்டும் உள்ள டீ டேபிளில் எதிர் எதிரில்
உள்ள இருக்கைகளில் உட்கார்ந்திருந்தனர். கதிர் குழப்பத்தில் இருந்தான்
ஆனால் மஹிந்தன் கனவுகள் சுமந்த மலர்ந்த முகத்துடன் இருந்தான்.
மஹிந்தன் கதிரிடம்
“இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி
உட்கார்ந்துட்டு இருக்கிற?” என்று கேட்டான் .
அதற்கு கதிர்
“இங்க பாரு மஹிந்தன், நான் உனக்காகவும் உன் பிசினஸ்காகவும் எதுனாலும் செய்றேன்.
ஆனால் இனி உன் மேரேஜ் விசயத்தில் குறிப்பா கவிழையா விசயத்தில் என்ன எதுவும் செய்ய சொல்லாத...”
என்றான்.
அதற்கு மஹிந்தன்
“ஐஸ்வர்யா என்னுடைய தவறுதலாக
செலக்சன்... ஆனால் என் ழையா குட் செலைக்ஷன்.. எனக்கு அவளை அடையாளம் காட்டியவன் நீ தானே கதிர்...” என்றான்.
“நீ சொன்னது
போல் ஐஸ்வர்யா உன்னுடைய தவறான முடிவுன்னு தெரிஞ்சும் நீ ஏன் ஐஸ்வர்யாகூட உன்னுடைய கல்யாணத்தை நிறுத்த முயற்சி செய்யலை மஹிந்தன்...?”,
என கேட்டான் .
அதற்கு மஹிந்தன் சொன்னான்
“நான் ஐஸ்வர்யாவுக்கும் எனக்கும் நடக்க இருக்கிற கல்யாணத்தை நிறுத்தினால் என்
குடும்பத்தின் முதல் அடையாளமான எஸ்.வி.என் மோட்டார் கம்பெனி என் குடுப்பத்தைவிட்டு வேறு ஒரு
குடும்பத்திற்கு போயிடும்....
உனக்கே தெரியும் கதிர், இப்போது
எனக்குப் பல தொழில்கள் இருந்தாலும் என்னைய அடையாளம் சொல்றவங்க எஸ்.வி.என்
மோட்டார் கம்பெனியின் வாரிசு அப்படித்தான் சொல்லுவாங்க...” என்றான்.
அதற்கு கதிர்
“நீ சொல்றது சரிதான், உன் குடும்பத்தின் அடையாளம் அது.
ஆனால் அன்னைக்கு ஐஸ்வர்யா அந்த அஜய் கூட என்று ‘முதல் நான் ஹோட்டல் சோழாவில்
நடந்த அத்தனையும் கூறினான்’ .என்னால் ஐஸ்வர்யாவை தடுத்து அவங்களோட வீட்டிற்கு அனுப்ப
முடியலை...” என்றான்.
அந்த அஜய் உன் பியான்சியை
அவன் வீட்டுக்கு கூட்டிட்டுப் போனது நல்லதில்ல.
இதுபோல கல்யாணத்திற்கு பிறகும் தொடர்ந்து செய்தால் உன் குடும்ப கௌரவம் தான்
பாதிக்கும்” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட மஹிந்தன்
“என்னால் ஐஸ்வர்யாவை எப்பொழுதுமே
மனைவியாக ஏத்துக்க முடியாது கதிர்.
அவளுக்குத் தேவை ஒரு மல்டி மில்லினியரின்
மனைவி என்ற அந்தஸ்து. எனக்குத்தேவை என் குடும்ப அடையாளமான எஸ்.வி.எம்
தட்ஸ் ஆல்...” என்றான்.
“எனக்கு ஊர்
அறிய கல்யாணம் முடியிரது ஐஸ்வர்யா கூடத்தான். ஆனால்
அதுக்கு முன்னாடியே ஊருக்கு தெரியாமல் எனக்கு அடுத்தமாதம் கவிழையாகூட கல்யாணம் முடியப்போகுது...
அதனால் எனக்கு முதல் வொய்ஃப் கவிழையா தான்” என்றான்.
அவன் கூறியதை கேட்ட கதிர்
“இதுக்கு கவிழையா ஒத்துக்கொள்ளணுமே...! எனக்கு
என்னவோ கவி கல்யாணத்துக்கு சம்மதிப்பாள்ன்ற நம்பிக்கையில்ல...”
என்றான்,
நேத்து நான் கவிழையா வீட்டுக்கு அருகில் உள்ள பூங்கா என்றன்சில்
உன் கார் நிக்கிற இன்பர்மேஷன் நம்ம ஆட்களிடம் இருந்து கிடைச்சதும் என்ன இங்கு நடக்கிறதுன்னு டீடைல் கேட்டேன்.
நம் ஆட்கள் கவிழையாவை பூங்காவிற்கு
உன் காரில் கூட்டிவந்த விபரத்தை என்ட்ட சொன்னாங்க.
நானும் கிளம்பி உடனே பூனகாவுக்கு வந்துட்டேன். கவிழையாவின் அப்பா பூங்கா வந்தார்.
அவர் வருவதைப்பார்த்து நான்,
எதற்கு இங்க வந்துருக்கார்னு தெருஞ்சுக்க உள்ளே போனப்போ அவங்க ஒரு மரத்தின் அடியில் உட்கார்ந்து
இருந்தாங்க..... நான் சட்டுன்னு அந்த மரத்தின் பின்னாடி போய் மறைந்து
நின்று அவர்கள் பேசியதைக் கேட்டேன்....” என்று அவர்கள் பேசியதை கூறினான்.
“உன்கிட்ட ஐம்பதுலட்சம் பணத்தை
ஒரு மாதத்தில் புரட்டி கொடுத்து கவிழையாவை வேலையில் இருந்து நிறுத்த போவதாக அவளின்
அப்பா கூறினார்” என்றான்.
அவன் கூறியதை கேட்ட மஹிந்தன்
சத்தமாக சிரித்து “என் பேபியை என்கிட்ட இருந்து பிரிக்க வெறும் ஐம்பது
லட்சம் கொடுக்க பார்க்கிறார் என் மாமனார்.
ழையா இஸ் மை லைப்,
அவள் என்னுடைய புதையல்... யாருக்காகவும் எதற்காகவும் அவளை மிஸ் பண்ண மாட்டேன்”.
என்று ஆழ்ந்த குரலில் கூறினான் மஹிந்தன்.
கடந்த ஒரு வாரமாக கவிழையாவிற்கு
ஆபிசில் புது ப்ராஜெக்ட் காரணமாக வேலை தொடர்ந்து இருந்தது மஹிந்தன் வேறு ஒரு அலுவலில் பிசியாக
இருந்ததால், புது ப்ராஜெக்ட்டின் முழு பொறுப்பும் கவிழையாவின் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.
அவன் மதியம் முக்கால் மணி நேரம்
மட்டும் அங்குவந்து அன்றைய வேலைகளை மேற்பார்வை செய்துவிட்டு செல்வான்.
அவ்வாறு அவன் வரும் நேரத்தில்
கவிழையாவிற்கு முள்ளின் மேல் இருப்பது போல் இருக்கும்.
அவன் வரும் போது உமாவின் வணக்கத்திற்கு
பதிலாக தலையை அசைப்பவனின் வாய் “ழையா வா...“ என்று கூறிக்கொண்டு
நேராக அவனின் ரூமிற்குள் செல்வான் .
முதல் நாள் அவன் அவ்வாறு கூப்பிட்டுச்
செல்லும் போது அங்கு போக தயங்கி நின்றவளை திரும்பிப்பார்த்து “ஏன்
வராம அங்கேயே நிக்கிற...?” என்று கேட்டான்.
அதற்கு கவி கூறினாள்
“பாஸ் உங்க
பெர்சனல் ரூமிற்குள் வர எனக்கு இஷ்டம் இல்லை.. என்னுடைய
ஆபீஸ் வேலையை இங்கயே செய்து கொடுக்க முடியும்...” என்றாள்.
அதற்கு மஹிந்தன்
“நீ இப்படி சொல்பேச்சு கேட்காம என்னைய கோபப்படுத்தினால் நான் உனக்கு கொடுத்திருக்குற
ஒரு மாத நேரத்தை வாபஸ் வாங்கவேண்டியது வரும்னு நினைக்கிறேன்....”. என்றவன்
சிறிது யோசிப்பது போல் பாவனைசெய்து
“உன் அப்பா உங்க வீட்டை விலை பேச ப்ரோக்கரை இன்னைக்கு காலைல பார்த்து பேசியிருக்கார்.”
என்று கூறியவன்.
கவிழையாவின் அருகில் வந்து
“நான் நினைத்தால் உன் வீட்டை விற்க முடியாமல் செய்ய முடியும்”
என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கூறினான்.
அவளுக்கு அப்பா வீட்டை விலை பேசுகிறார்
என்று அவன் கூறியது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. மேலும்
அவள் அது பற்றி பேச நினைக்கையில் அவன் திரும்பவும் “‘ம்’
வா...” என்று கூறி அறையை நோக்கிச் சென்றான் .
கவிழையாவிற்கு ஏனோ அவள் அப்பாவையும்
வீட்டையும் பற்றி அவன் பேசியதும் பயம் அடிவயிற்றில் இருந்து கிளம்பியது..
அவளுக்கு எந்த பாதிப்பு என்றாலும் எதிர்த்து நிற்கும் தைரியம் இருந்தது. ஆனால்
அவள் குடும்பத்துக்கும், வசிக்கும் வீட்டிற்கும் ஏதாவது பாதிப்பு என்றால்!
அதை அவளால் நினைத்துக்
கூட பார்க்க முடியவில்லை .
எனவே அதிர்ச்சியை கண்களில் பிரதிபலித்தபடி
அவன் பின்னால் சென்றாள். உள்ளே சென்றதும் கவிழையாவிடம் மஹிந்தன் கூறினான்
“ஏற்கனவே நான் சொன்னதுபோல் என்னை எதிர்த்து நிற்பதும் பேசுவதும் உனக்கு நல்லதல்ல
பேபி. உன் அப்பாவை எனக்கு பணம் கொடுக்குற நினைப்பிலிருந்து
மாறச் சொல் ழையா. நீ என்னைய விட்டு விலகிப்போக நான் விடுவதாய் இல்லை....” என்றான்.
அவன் கூறியதைகேட்ட கவிழையா,
“நீங்க நினைக்கிறது நடக்காது சார்... அப்படி என்னைய நிர்பந்தத்தில் நிறுத்தினால்,
என் உயிரை விடுவேனேத் தவிர உன்னுடைய நினைப்புக்கு எப்போதும் பலிக்கவிடமாட்டேன்”
என்றாள் .
அதற்கு மஹிந்தன் கண்களில் சீற்றத்துடன்,
சிட் என்று கூறி மேஜையில் தன் கைகளால் பலமாக ஒரு குத்துக்குத்தினான்.
பின் “நீ
ஏன் என்னைய புரிஞ்சுக்க மாட்டேன்கிற ழையா...? நான்
இதுவரை யாரிடமும் இது போல் பொறுமையாக பேசியது இல்ல....“ என்றவன்.
அவளுடைய கண்களைப் பார்த்தான்
அதில் பயம், கோபம், இரண்டும் மாறிமாறி பிரதிபலிப்பதைப் பர்த்தவன் அக்கண்கள் தன்னை
காதலுடனும் ஆசையுடனும் பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் கொண்டான். தன்னை
சிறிது நிதானப்படுத்திக்கொண்டு “ஓ.கே.பேபி நீயா? நானா?
பார்த்துடலாம்” என்றவன்
“லெட்ஸ் கோ
டு டூ அவர் வொர்க்” என்றதும் அன்றைய வேலைபற்றி கேட்டு அறிந்துகொண்டான். மறுநாள்
என்னென்ன வேலைகளை முடிக்க வேண்டும் என்று கூறி அவர்களின் வேலைபற்றிய விசயத்தில் இருவரும்
கவனம் செலுத்தினர்.
இன்றும் அதே போல் கவிழையாவுடன்
அவன் ரூமிற்குள் வந்தவன், “ழையா! ஒன் கப் காஃபி”
என்று கூறியவன் அவள் காஃபி தயாரித்துக்கொண்டு இருக்கும்போது கபோர்டில் இருந்த
கவரை எடுத்தான்
அதில் புது உடுப்பு இருந்தது..
அவனிடம் காஃபியை கொடுக்க வந்தவளிடம்
“நீ போய் அந்த ரெஸ்ட்ரூமில் இந்த டிரஸ்ஸை மாத்திட்டுவா...,
நாம வெளியில் கிளம்பணும்...” என்று கூறினான்.
அவள் அசையாது நிற்பதை பொருட்படுத்தாமல்
அவள் முன்னேயே அவன் உடுத்தியிருந்த பார்மல் உடையை அவிழ்த்துவிட்டு வேறு உடைக்கு மாறினான்.
அவனின் செயலில்
“செய்” என்ற வார்த்தையை உதிர்த்து திரும்பி நின்றவளை கண்டு
மஹிந்தன் சிரித்துக்கொண்டு “உன் டார்லிங்கின் சிக்ஸ்பேக் பாடியை பார்க்க வெட்கமா
பேபி...!”. என் கனவுப் படி பார்த்தால் நமக்கு உன்னைப்போல் ஒரு
பெண் குழந்தையே இருக்கு...” என்றான்.
அவன் கூறுவதைக் கேட்க பிடிக்காமல்
தன் காதுகளை மூடினாள், உடனே மஹிந்தன் அவள் காதில் “உன் அப்பா
நமக்காக காத்துக்கொண்டு இருக்கிறார் வேகமாக கிளம்பு...” என்றவன்.
அவள் நம்பாத பார்வையைப் பார்த்து
தன் ஐ போனில் அவளின் தந்தைக்கு டையல் செய்து “மிஸ்டர்
ஈஸ்வரன் உங்கள் டாட்டரை என்னுடன் கிளம்பி வரச் சொல்லுங்கள்” என்றான்.
அதனை வாங்கி செவி கொடுத்ததும்
அதில் ஈஸ்வரனின் குரல் வந்தது “கவி நீ அவரோடு கிளம்பி வா...!” என்று
கூறி தொடர்பை துண்டித்துவிட்டார் .
தன் அப்பா,
வா! என்று கூப்பிட்டதும் என்ன ஏது என்று புரியாவிட்டாலும்
தனது அப்பாவை எதிலோ ஒன்றில் மஹிந்தன் சிக்க வைத்திருகிறான் என்பதை மட்டும் புரிந்துக்கொண்டாள்
எனவே அவள் புரிந்த விசயத்தில்
தந்தைக்கான பதட்டத்துடன் “பாஸ் வாங்கள் போலாம்...” என்று
கவிழையா அவசரப்படுத்தினாள்.
அவள் கூப்பிட்டதும் மஹிந்தனுக்கு
அன்று ழையா அவனுடைய ரெஸ்ட்ரூமை பயன்படுத்த மறுத்தது நினைவு வந்தது.
மனதிற்குள் சிரித்துக்கொண்டே
அவன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து ரிலாக்ஸ் ஆவதைபோல் பாவனைசெய்தான்.
கவிழையா பொறுமைகாக்க முடியாமல்
“பாஸ் அப்பா காத்திருப்பார்” என்று மறுபடியும் அவனைப் பார்த்து கூறினாள்.
அவள் அவ்வாறு கூறவும் மஹிந்தன்
“நான் உன்னை கூட்டிகிட்டுப் போறேன் ஆனால் நீ என் ரெஸ்ட் ரூமைப் பயன்படுத்தி இந்த
டிரஸ்ஸை மாத்திக்கிட்டு வரணும்"
என்று கூறினான்.
அவன் அவ்வாறு கூறவும் திரும்பவும்
அவள் தயங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்தவன் திரும்ப ஈஸ்வரனுக்க்கு போன் செய்தான்.
“மிஸ்டர் ஈஸ்வரன்
உங்கமகள் என்கூட வர யோசிக்கிறாங்க. என்ன செய்ய...? நம்
டீலிங்கை கேன்சல் பண்ணிடலாமா...?” என்று கேட்டான். பின்பு
போனில் ஸ்பீக்கரை ஆன் செய்தான் .
ஈஸ்வரனோ “என் மகக்கிட்ட நான் சொல்கிறேன்...”,
என்றவர் “கவி உடனே கிளம்பி வாம்மா இங்க நான் மிகவும் நெருக்கடியான
நிலைமையில் இருக்கேன்...” என்று கூறினார் .
அவர் அவ்வாறு கூறவும்
“அப்பா உங்களுக்கு எதுவும் பிரச்சனையா?” என்று
கேட்டவளிடம் “நீ
முதலில் கிளம்பிவா” என்றார்.
உடனே “சரிப்பா
நான் இதோ கிளம்பி வருறேன்” என்று கூறி தொடர்பை துண்டித்தாள்.
மஹிந்தனைப் பார்த்தாள்,
அவன் கிளம்பும் எண்ணம் இல்லாமல் ரிலாக்சாக உட்கார்ந்துகொண்டு இருந்தான்
.
வேறு வழியில்லாமல் கவிழையா அவன்
எடுத்துவைத்திருந்த கவரை எடுத்துக்கொண்டு ரெஸ்ட்ரூம் சென்றாள்.
புடவையுடுத்தி வெளியில் வந்த
கவிழையாவை இமைக்க மறந்து பார்த்தான் மஹிந்தன். அந்த
மெரூன் கலர் டிசைனர் புடவையில் முகத்துக்குச் சற்றும் மேக்கப் இல்லாமல் இவ்வளவு அழகாக
இருக்கமுடியுமா என்று அவன் மெய் மறந்து பார்த்தான் .
வெளியில் வந்த கவிழையா
“போகலாமா பாஸ்” என்று அப்பாவை பார்க்கும் பரபரப்புடன் கேட்டாள்.
அவள் அருகில் சென்றவன்
“போகலாம் பேபி,” அதற்கு முன் என்று அவள் கைப்பிடித்து கூட்டிவந்து ட்ரெஸ்ஸிங்
டேபிளின் முன்னாள் இருந்த இருக்கையில் அவளை அமரவைத்தான் .
அவன் கைப்பற்றியதும் சட்டென உதறப்போனவளின்
கையை இறுக்கிப்பிடித்த மஹிந்தன் “உன் அப்பாக்கிட்ட வேகமாக போகணும்னா நான் சொல்வதையும்,
செய்வதையும் அப்படியே ஏத்துக்கணும்”, என்று குழைந்த குரலில் கூறியபடி அவளை உட்காரவைத்தவன் அவள் கழுத்தில் அந்த
புடவைக்கு பொருத்தமான கழுத்தாரமும், ஓர் டாலருடன் கூடிய மெல்லிய சங்கிலியும்,
காதில் ஜிமிக்கியையும் அவனே போட்டுவிட்டான்.
அவனின் இச்செயலை தடுக்க முடியாமல்
அவள் அப்பாவின் நிலையால் அவள் கண்களில் கோபத்தின் காரணமாகவும் இயலாமையின் காரணமாகவும்
கண்ணீர் அருவி போல வழிந்தது .
அவள் கண்ணில் கண்ணீரை பார்த்ததும்
மஹிந்தனுக்கு கோபம் வந்தது உடனே தன் கையை அகற்றிவிட்டு அவளிடம் கண்ணீரை துடைக்கச்சொல்லி அவளுடன் அவ்வறையை விட்டு வெளியில் செல்ல முயன்றான்.
அதற்கு கவிழையா
“பாஸ் ஒரு நிமிடம்” என்றவளை நிமிர்ந்து பார்த்தவன்,
“என்ன?” என்று கேட்டான்.
கவிழையாவோ
“இந்த ரூம்க்கு பின் வாசல் இருகுதுல்ல அந்த வழியாக வெளியில போகலாமா....?”
என்று தயக்கமுடன் கூறியனாள்.
அதற்கு “ஏன்...?”
என்று கேட்டவனிடம்
“நாம ரெண்டுபேரும்
இப்படி காஸ்டியூமில் வெளியில் போனால் எல்லோரும் என்னைய தப்பா நினைப்பாங்களே..”
என்று கண்ணீருடன் கூறினாள்.
அவ்வாறு அவள் கூறியதும்,
“இந்த நிமிடம் முதல் உன்னைய தப்பான பார்வை பார்க்கக்கூட எவனுக்கும் தைரியம் வராது.
இப்படி நாம் போவதால் நீ என்னுடையவள்னு உன்னைய மரியாதையாகத்தான் பார்ப்பாங்க....” என்று
கூறி, அவள் கைப்பிடித்து தரதர வென்று இழுத்துக்கொண்டு அவ்வறையை
விட்டு வெளியில் வந்தவன் அவள் கையை விடாமல் பிடித்தவண்ணம் தன் காருக்குள் போய் ஏறிக்கொண்டான்.
இருவரும் காரைவிட்டு இறங்கியதும் கவிழையா தன் அப்பாவை பார்த்து ஓடிச் சென்று
கைகளைப் பிடித்தவள், “அப்பா என்னப்பா எதற்கு என்னைய வரச்சொன்னீங்க?”
என்று கேட்டாள்.
அவ்விடத்தை பார்த்தவள் அது பத்திரம்
பதியும் அலுவலகமாக இருந்தது., அங்கு அவள் அப்பா மற்றும் அவருடன் இன்னும் இரண்டு பேர்
அமர்ந்திருந்தனர் .அவர் பக்கத்தில் இருந்த நபரிடம்
“என் மகள் கவிழையா...“ என்று அறிமுகப்படுத்தினார்
அந்த நபரின் அருகில் இருந்தவன்
கதிர் ஈஸ்வரனிடம் “சார் இவர் தான் உங்க வீட்டை வாங்கப்போகிறவர்...”.
என்று மஹிந்தனை ஈஸ்வரனுக்கு அறிமுகப்படுத்தினான்.
ஈஸ்வரன் மஹிந்தனனை நேரில் பார்ப்பது
அதுவே முதல் தடவை. மேலும் அவன் தன் மகளுடன் வந்து காரில் இறங்கிய விதமும்
அவள் அருகில் நின்றிருந்த உடல் மொழியும் தன் மகள் கவிழையாவை அவனுடையவள் என்று பறை சாற்றும்
விதமாக இருந்ததை அவர் சுத்தமாக விரும்பவில்லை.
எனவே, ‘’கவி
இந்தப்பக்கம் வா” என்று கூறி அவளை தன் மறுபக்கம் நகர்த்தப் பார்த்தார். ஆனால்
மஹிந்தனுக்கு அவரின் உரிமையான செயல் மிகவும் பொறாமைப் படுத்தியது. அப்பொழுது மனதுக்குள்
அவள் அப்பா என்றாலும் நான் இருக்கும் போது ழையாவிடம் உரிமையாக பேசக்கூடாது என்ற கோபம்
ஏற்பட்டது .
அதனால் “மிஸ்டர்
ஈஸ்வரன், ழையா இப்ப என்கூட வந்திருக்காள்.
அதோட உங்க வீட்டை எங்கள் ரெண்டு பேரிலும் ஜாய்ன்டாக எழுதிகொடுக்கப் போறீங்க...
அதற்கு சைன்பண்ண என்னுடன் ழையா இருக்கணும்” என்று கூறி
அவள் கைப்பிடித்து ரெஜிஸ்டாரிடம் கூட்டிச்சென்றான்.
அவன் கூறியதைக் கேட்ட கவிழையா,
“அப்பா என்னப்பா நடக்குது இங்க?” என்று மஹிந்தனுடன்
போய் கொண்டே கேட்டாள்.
ஈஸ்வரனுக்கு மகளிடம் அந்த இடத்தில்
நடந்ததை பேசமுடியாது அமைதியாகிவிட்டார்.. தன் மகளைத் தானே அவனிடம் கொண்டுசெல்லும்
நிலைமையில் விட்டுவிட்டோமே என்று நொந்து போய் அவர்களின் பின்னால் நடந்தார்.
கவிழையாவிற்கு தன் அப்பா தன்னை
இயலாமையுடன் பார்ப்பதைப் பார்த்தவள் அவரும் ஏதோ ஒரு வகையில் மஹிந்தனின் சூழ்ச்சியில்
மாட்டியிருப்பதை புரிந்துகொண்டு
மஹிந்தனுடன் நடந்தாள்.
ரெஜிஸ்டார் மஹிந்தனைப் பார்த்ததும்
எழுந்து “வாங்க… வாங்க…”
என்று கூறி பின்னால் இருந்த இரண்டு மாலையை எடுத்து கொடுக்க கைகளில் பெற்றுக்கொண்டவன் ழையாவிடம் “இதை
வைத்திரு” என்று கூறினான்.
அவன் கொடுத்த மாலையை கையில் வாங்கும்
போது கவிழையாவிற்கு தன் மீது பிளாஸ் அடித்ததுபோல் தோன்றியது.
அதன் பின் மஹிந்தன்,
கவிழையா இருவரும் பத்திரத்திலும் அலுவலக கோப்புகளில் சில இடங்களிலும் கையெழுத்து
போட்டனர் . கவிழையாவிற்கு அங்கு என்ன நடக்க்கிறது என்றே யோசிக்க
மூளை வேலை செய்யமுடியாத அளவில் குழப்பமான மனநிலை இருந்தது.
கையெழுத்து போட்டபின் மஹிந்தன்
மிகவும் சந்தோசமாக “ஐம்பது லட்சம் பணத்திற்கான காசோலையை ஈஸ்வரனிடம் கொடுத்தவன்
சிரித்தபடியே
“அங்கிள்,
அந்த சுப்ரமணி வாங்கிய இரண்டுகோடி லோன் பணத்திற்கு நீங்கள் கவலைப்பட வேண்டாம்....
அவரின் மில்லை நான் வாங்கிகிட்டேன். அதனால பேங்க் லோனை முழுவதுமாகய் கட்டிவிட்டேன்... இனி உங்களுக்கு
பேங்கில் எந்த பிரச்சனைகளும் இருக்காது...” என்று கூறினான்.
அவருக்கு தன் மகளை நிமிர்ந்து
பார்க்க முடியாத வகையில் குற்ற உணர்வு தாக்கியது.
அப்பொழுது மஹிந்தனுடைய போன் மணி
அழைத்தது. அதனை எடுத்து பார்த்தவன் “சொல்
மதுரா” என்றான் மதுரா கூறியதை கேட்டவன்.
மதுராவிடம்
“இப்பொழுதே வீட்டிற்கு வான்னு கூப்பிட்டால் எப்படி என்னால் வர முடியும்...?
நான் என்ன வேலை வெட்டி இல்லாத ஆளா...?” என்று
கோபமாக கூறினான்,
பின்பு “சரி
நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்க இருப்பேன்...” என்றவன்
தொடர்பை துண்டித்தான்.
அவனுக்கு ழையாவை அப்பொழுது அவள்
அப்பாவிடம் விட்டு போக மனம் இல்லை. எனவே ஈஸ்வரனிடம் “நான்
ழையாவை கூப்பிட்டுட்டு ஆபிஸ் போறேன்... கொஞ்சம் வேலை இருக்குது”
என்று கூட்டிக்கொண்டுச் சென்றான்.
ஈஸ்வரனுக்கு தன் இயலாமையை நினைத்து
தன் மேலேயே வெறுப்பு தோன்றியது. அவர் தளர்ந்த நடையுடன் தனது காரை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு
வந்தார்.
மஹிந்தன்,
தன் காரின் டிரைவர் மூர்த்தியிடம் கார் கீயை வாங்கியவன் ஆபீசுக்கு பஸ்ஸில் வந்து சேர்
நான் முன்னால் போகிறேன் என்று கூறினான். பின்பு ழையாவுக்கு காரின் முன்பக்க
கதவை திறந்து “உட்கார்...” என்று கூறினான் .
கவிழையா தன் தந்தையின் சோர்ந்த
நடையை பார்த்தவண்ணம் காரில் ஏறிக்கொண்டாள். அவள் மனதிற்குள் புயல் அடித்துக்கொண்டிருந்தது
அவளுக்கு நடக்கும் எல்லாவற்றுக்குமான கேள்வி... ஏன்? எதற்கு?
என்று காரணம் முழுமையாக தெரியாவிட்டாலும் தானும் தன் குடும்பமும் மஹிந்தனால்
பெரிய சுழலில் சிக்கியதைப் போல் உணர்ந்தாள்.
அவளுக்கு எதிர்ப்பதமான மனநிலையில்
இருந்தான் மஹிந்தன் அவன் வாய் தானாக
“புது மாப்பிளைக்கு
ரப்பப்பரி நல்லயோகமாட ரப்பப்பரி
அந்த மணமகள்
தான் வந்த நேரமடா..”
” “
என்று பாட்டை பாடியதும்.
எரிச்சலுடன் அவனை ஏறிட்ட கவிழையாவைப் பார்த்து “என்னம்மா
பொண்டாட்டி புது மாப்பிள்ளையை ஆசையாக பார்க்காமல் இப்படி முறைத்து பார்த்தாள் என்ன
அர்த்தம்?” என்றான்.
உடனே கவிழையா கூறினாள்
“யாருக்கு யார் மாப்பிள்ளை?, நீங்கள் பணத்தில் பெரிய கொம்பனாக இருக்கலாம், ஆனால் நான் என்றுமே உங்களை போன்று அடுத்தவர்களை துன்புறுத்தி
ரசிக்கும் ஒருவனுக்கு பொண்டாட்டியாக மாட்டேன்”
என்றாள்.
அவள் அவ்வாறு கூறவும் சத்தமாக
சிரித்த மஹிந்தன் என்ன சொன்ன பொண்டாட்டியாக மாட்டேன்னா சொன்ன...?
உனக்கு ஒரு விஷயம் தெரியுமா....?
நீ இப்போ சட்டப்படி என் மனைவி....
கொஞ்ச நேரம் முன்னாடி நீ கையெழுத்து போட்டயே எதுக்கு தெரியுமா...?
நம் கல்யாணத்தை சட்டப்படி பதிவு செய்ததுக்காக! நம்
கல்யாணத்திற்குச் சாட்சிக் கையெழுத்து போட்டது உன் அப்பா” என்றான்.
அவன் கூறியதைகேட்டு தன் கண்களில்
கண்ணீர் வடிய “நீங்கள் சொல்றதை நான் நம்ப மாட்டேன்...” என்றாள். .
உடனே தன் போனில் கதிரை தொடர்புகொண்டு
“கதிர் இப்பொழுது எடுத்த போட்டோ மற்றும் கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணியதற்கான டாக்குமென்டின்
போட்டோகாப்பி எல்லாம் என் போனிற்கு அனுப்பு”
என்று கூறி வைத்தான்.
கார் நிற்பதைகூட உணராமல் அதிர்ச்சியில்
இருந்தவளை,” ழையா” என்று கூறி
தன் காரின் ட்டேஸ் போர்டில் இருந்த டிஸ்யு பேப்பரை எடுத்து அவளுடைய முகத்தில் ஏசி காரிலும்
வேர்த்து இருந்ததை ஒத்தி எடுத்தான். அதில் தன்னிலை அடைந்தவள் அவனுடைய கையை தட்டி விட்டாள்
உடனே கோபத்துடன்,
“என்னடீ ரொம்பவும் துள்ளுற? உள்ள வா போட்டோ காட்டறேன். அப்போத்தான்
நான் மட்டும் உன்னையத் தொட முடியும்றதை புரிஞ்சுப்ப" என்றவன்
காரில் இருந்து இறங்கி கோபத்துடன் உள்ளே சென்றான் .
கவிழையாவும் அவன் பின்னால் ஆபீஸில்
நுழைந்தாள். தன்னுடைய மேஜையில் தன் ஹேண்ட்பேக்கை வைத்தவள்,
மனச்சோர்வின் காரணமாக ஓய்ந்த தோற்றத்துடன் அப்படியே உட்கார்ந்துவிட்டாள்.
உள்ளே வந்த மஹிந்தன் உமாவிடம்
அன்றைய அலுவலகத்தின் பணிகளை கேட்டு அறிந்தவன் அடுத்து செய்ய வேண்டிய அலுவலக பணிகளை
அவளிடம் கூறிவிட்டு திரும்பி கவிழையாவைப் பார்த்தான் .
அவளின் ஓய்ந்த தோற்றத்தைப் பார்த்தவன்
“என்னைய புருசன்னு
ஏத்துக்க அவ்வளவு
கஷ்டமாகவா இருக்குது இவளுக்கு...?. என்கூட ஒரு நாள்பொழுதை செலவழிக்க போட்டிப்போட்டு எத்தனை பேர் காத்திருக்காங்க!. இவள்
என்னடான்னா தெ கிரேட் பிஸ்னஸ் கிங் மஹிந்தனின் வொய்ப் ஆனதுக்கு இப்படி முகத்தைத் தூக்கிக்கிட்டு உட்கார்ந்திருக்கிறாள்...? இவளுக்கு என்னை பார்த்தாள் எப்படி
இருக்கிறது?” என்று கோபமாக வந்தது.
ஆனால் தான் அவளை சந்தித்த விதமும்,
அவளை மிரட்டியதும் அவள் அனுமதில்லாமல் அவளை வலுக்கட்டாயமாக அவளுக்கேத் தெரியாமல்
ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யத தனது செயல்களால் அவளின் மனம் புண்பட்டு இருப்பதையும் மஹிந்தன்
உணராமல் போனான்.
மஹிந்தன் அவள் மேஜைக்கு அருகில்
வருவதைப்பார்த்த கவிழையா கலவரம் ஆனாள்.
ஏனெனில் மஹிந்தன் அவளை கோபமாக
“என்ன இங்கேயே உட்கார்ந்திட்ட, வா ரூமுக்கு போகலாம்” என்று
கூறி அவளின் கையை பிடித்து கூட்டிச்செல்லும் நோக்குடன் ஒரு கையை நீட்டிக்கொண்டு வருவதைப்பார்த்து கவிழையா வேகமாக எழுந்து தள்ளி நின்றாள்.
அவளின் விலகல் மஹிந்தனை அவமானப்படுத்துவதாக
நினைத்து அவனின் கோபத்தை
மேலும் அதிகரித்தது. எனவே அவன் அவளை கோபமாக முறைத்துக்கொண்டே கதவைத்திறந்தான்.
அப்பொழுது அவன் தொலைபேசி சத்தம்
கொடுத்ததால் எடுத்து காதிற்கு கொடுத்தவன் தன் தங்கை பேசவதை கேட்டு
“ஆமாம் ஒரு மணி நேரத்தில் வருவதாய் சொன்னேன் இப்பொழுது லேட் ஆகிடுச்சு அதற்கென்ன?”
என்று கோபமாக பேசியவன் தன் தங்கையிடம் “யாராக
இருந்தாலும் நான் வரும் வரை காத்திருக்கட்டும்” என்றவன்
தொடர்பைத் துண்டித்தான்
பின் ழையாவின் கைப்பிடித்து உள்
இழுத்து சென்று, ஒருகையால் அவளை சுற்றிப்பிடித்து சேரில் அவளை தன் மடியில் அவள் திமிர...
திமிர... ஒற்றைக் கையாலேயே அழுத்தி உட்காரவைத்துக்
கொண்டவன் தன் போனில் கதிர் அனுப்பிய போட்டோவையும் ஆவணங்களையும் அவளிடம் காண்பித்து
“இப்போ நீ என் பொண்டாட்டி டீ” என்றான்.
கவிழையா அவனிடன் இருந்து தன்னை
விடுவித்துக்கொள்ள போராடிப் பார்த்தாள் ஆனால் அவனின் பிடி இரும்பாக இருந்ததால் அவளால்
முயற்சி செய்ய மட்டும் தான் முடிந்தது.
மேலும் அவன் கூறிய கல்யாணம் முடிந்துவிட்டது.
அதுவும் உன் அப்பா சாட்சி கையெழுத்துடன் அவனின் மனைவியாகத் தான் ஆகியதை கூறிய விதம் அவளைப் பலவீனமாக்கியிருந்தது
எனவே அவளால் தன் பற்களையும் நகங்களையும்
ஆயுதமாக்கி அவனைத் தாக்கத் தயக்கம் ஏற்பட்டிருந்தது.
மஹிந்தன் தன் மடியில் அமர்த்திய
ழையாவிடம் தன் போனில் இருந்த கல்யாணத்திற்கான ஆதாரத்தை காண்பித்தான்.
அவற்றைப்பார்த்த கவிழையா கோபத்துடன்
“ஒரு பொண்ணுக்கிட்ட சம்மதம் இல்லாம.... அவளறியாம.... கல்யாணம் பண்ண உங்களுக்கு
வெட்கமாக இல்லையா.... என்னால் உங்களை என் கணவனாக ஏத்துக்க முடியாது”
என்றாள் அத்துடன் இல்லாமல்...
“ஒரு நல்ல
ஆண்பிள்ளை இதுபோல எல்லாம் செய்யமாட்டான்
நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?” என்று கோபத்தில் வார்த்தைளை விட்டாள்.
அவளின் வார்த்தைகளைக் கேட்டு,
“என்ன கேட்ட? நான் ஆண்பிள்ளையான்னு தானே கேட்ட.!
ஒரு புருஷனைபார்த்து எந்த பொண்டாட்டியும் கேட்கக்கூடாத கேள்வியை அதுவும் கல்யாணம்
முடிஞ்ச அன்னைக்கே நீ கேட்டுட்ட, என்னைய ஆண்பிள்ளைன்னு உன்னை உணரவைக்கிறேன்.”
என்று கூறி அவளை ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.
அவள் தப்பிக்கும் வழி தெரியாமல்
தோற்றுக்கொண்டிருக்கும் போது, மஹிந்தனின் போன் திரும்பத்திரும்ப ஒலிக்கும் ஓசைகேட்டு
தன்னிலையடைந்த மஹிந்தன் தன்செயலைப் பார்த்து தானே ஒரு நிமிடம் குற்ற உணர்வில் தவித்தான்.
பின் “போ...” என்று கூறி அவளை
உதறி “ஏன்..., ஏன்டீ... என்னை
மிருகமாக்குற” என்றவன் “விருப்பமில்லாத யாரையும் இதுவரை பார்வையாலக்
கூட தொட்டதில்லயே... ஆனா, உன் பேச்சாலயும், உன்
செயலாலயும், அழகாலயும், நான்...........
என்று கூறி நிறுத்தியவன்,
மேலும் சலிப்புடன் கூறினான் “ஆனால்
ஒன்னு மட்டும் தெரிஞ்சுக்கோ இந்த ஜென்மத்தில் நீ எனக்குமட்டும் தான் சொந்தமானவள். உனக்கு
என்னைய பிடிக்காமல் கூட இருக்கலாம். அதுக்காக எல்லாம் நீ என்னுடையவள் என்பதில எந்த
மாற்றமும் இல்ல....” என்று கூறிக்கொண்டு இருக்கும் போது மீண்டும் அவன் போன் ஒலித்தது
.
அதனை எடுத்து பார்த்தவன் உமாவின்
ஏழு மிஸ்டு காலை பார்த்து போனை
எடுத்து என்ன விஷயம் என்று கேட்டான்
அதற்கு “பாஸ்
கவிழையாவின் போனில் அவளின் அப்பாவின் போனில் இருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு மிஸ்ட்
கால் வந்துக்கிட்டே இருந்தது, நான் முக்கியமான அவசரமா இருக்குமோனு நினைத்து அட்டன் பண்ணினேன்.
கவிழையாவின் அப்பாவை சீரியஸாக
ஹாஸ்பிட்டலில் அட்மிட் பண்ணியிருப்பதாக அவளின் தம்பி தகவல் சொன்னான்.
கவிழையா மேடம் போனை மேஜையில் வச்சிட்டு உங்ககூட வந்திருக்காங்கள்”
என்றாள்.
அதனைக்கேட்ட மஹிந்தன்
“சரி நான் பார்த்துக்கிறேன்” என்றவன் கவிழையாவை பார்த்தான்
.
கவிழையா கசங்கிய கலைந்திருந்த
உடையுடனும் கலைந்த முடியுடனும் இருந்தாள். தன் உடையை
சரிசெய்ய முயன்ற அவள் கையின் நடுக்கத்திலும் உடலின் சோர்வாலும் முடியாமல் ஓய்ந்து போன நிலையில் இருந்தாள்.
அவளை பார்த்த மஹிந்தனுக்கு குற்ற
உணர்வில் மனம் கனத்தது. அவளின் கண்களை பார்த்தவன் அக்கண்ணில் எப்போதும் இருக்கும்
துறுதுறுப்பு இப்பொழுது மங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்தவன் அக்கண்களைப் பழையபடி பார்க்க ஆசைப்பட்டான். ஆனால்,
இப்பொழுது அவள் தந்தையின் நிலையை கூறினாள் அவள் தாங்கும் நிலையில் இல்லை என்பதை
உணர்ந்தான். எனவே மஹிந்தன் அவள் அருகில் வந்து அவளுக்கு உதவ நினைத்தான்
.அவன் அருகில் வர முயல்வதைப் பார்த்த கவிழையா பயத்துடன் பின்னால் சென்றாள்.
அவள் தன்னைப்பார்த்து பயப்படுவதை
மஹிந்தனால் தாங்கிக்கொள்ள முடியாவில்லை. எனவே
“ழையா..” எனறு தன் குரலில் அவள் பெயரை
மென்மையாக அழைத்தான்.
“நீ காலையில்
போட்டிருந்த டிரஸ் ரெஸ்ட்ரூமில் இருக்கும் மெதுவா போய் மாத்திட்டு வா...,
உன் அப்பாக்கிட்ட உன்னைய கூட்டிப்போய் விடுறேன்” என்றான்,
அப்பா என்ற வார்த்தையை கேட்டதும்,
“நான் அப்பாவிடம் போகணும்” என்று சொல்லிக்கொண்டு தடுமாற்றத்துடன் எழுந்து ரெஸ்ட்ரூம்
சென்றாள்.
உள்ளே சென்றவள்,
கதறியழுது பின் தன் முகத்தில் நீரையடித்துக் கழுவி தன்னை சிறிது திடப்படுத்திக்கொண்டாள்.
பின்பு உடை மாற்றும்போதுதான் அவள் கவனித்தாள் அவன் ரெஜிஸ்டர் ஆபீஸ் போகும்முன் தன் கழுத்தில் நெக்லஸ்மட்டும்
அணியவில்லை, மெல்லிய
நீளமான செயினும் போட்டுவிட்டான் அதில் மாங்கல்யம் இருந்ததை இப்போதுதான் கவனித்தாள்
.முதலில் அவள் அது வெறும் டாலர் செயின் என்று தான் நினைத்தாள்
அவள் ரெஸ்ட்ரூம் சென்றதும் அவள்
அப்பாவின் போனிற்கு தொடர்புகொண்டான் மஹிந்தன். ழையாவின்
தம்பி எடுத்தான். வருணிடம் தான் மஹிந்தன் ஸாப்ட்வேரின் எம்.டி
என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான் பின் அவர்களின் தந்தைக்கு என்னானது என்பதை விசாரித்தான்.
தேடல்
– 8
ஈஸ்வரன் காரில் இருந்து இறங்கி
தன் வீட்டினுள் தளர்ந்த நடையுடன் வந்தவர் “பார்வதி தண்ணீர்”
என்று குரல்கொடுத்தார். அவரின் குரல் கேட்டவள்
“இதோ எடுத்துட்டுவர்றேங்க”
என்று தண்ணீர் செம்புடன் முன்
அறைக்கு வந்தாள். அப்பொழுது ஈஸ்வரனின் நிலையைப்பார்த்து அதிர்ந்து
“என்னங்க ஆச்சு” என்று பதற்றத்துடன் கேட்டபடி பார்க்க....
ஈஸ்வரன் உடை முழுவதுவும் வியர்வையால்
நனைந்திருந்தது. தன் மார்பில் கைவைத்து கண் சொறுகிச் சரிந்து கொண்டிருந்தார்....
அன்று கவிழையாவின் தம்பி வருண் வீட்டில் இருந்ததால் தன் அம்மாவின் அலறலில் வேகமாக
வந்தவன் தன் தந்தையின் நிலைமையைப் பார்த்து ஆம்புலன்சிற்கு போன் செய்து
வரவழைத்தான். நகரின் பெரிய மருத்துவமைக்கு கூட்டிக் கொண்டுவந்து சேர்த்தான்...
இவ்வாறாக அவன் கூறிய அத்தனையும்
கேட்ட மஹிந்தன், ஹாஸ்பிட்டலின் பெயரைக்கேட்டுவிட்டு, தான் கவிழையாவை அழைத்துவருவதாகச்
சொல்லி போனை வைத்தான்.
அதன் பின் மஹிந்தன், கதிருக்கு
தொடர்பு கொண்டு, ஈஸ்வரனை அட்மிட் செய்திருந்த ஹாஸ்பிட்டலின் பெயரைச்சொல்லி “நான் ழையாவைக் கூட்டிக்கொண்டு
ஹாஸ்பிட்டல் போவதற்குள் நீ ஹாஸ்பிட்டல் போய் அவரின் ஹெல்த் பற்றி டாக்டரிடம் விசாரித்துவிட்டு,
அவருக்கு தேவையான டிரீட்மென்டை உடனே ஆரம்பிக்கச்சொல். தேவையான ஸ்பெசலிஸ்ட்
வரவைத்து ஸ்பெசல் கேர் எடுத்துக் கவனிக்கத் தேவையான ஏற்பாட்டைச்செய்”
என்று சொல்லிப் போனை வைத்தான்.
அவன் போனை வைப்பதற்கும் ழையா
உடைமாற்றி வெளியில் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது.
வெளியில் வந்தவள் அவள் போகும்
முன் உடுத்தியிருந்த டிரஸ்சை அங்கிருந்த மேஜைமேல் வைத்துவிட்டு டிரஸ்சிங்டேபிளின் மேல்
இருந்த அவளின் தோடைப் போட்டுக்கொண்டு அவன் அவளுக்குப் போட்டுவிட்ட மற்ற நகைகளைக் கலட்டும்
போது அவள் கழுத்தில் உள்ள தாலிச்செயினையும் கழட்டலாமா என்று யோசனை செய்தவள் அதைமட்டும்
கழட்டாமல் தன் கழுத்தில் போட்டிருப்பது வெளியில் தெரியாதமாதிரி தன் உடையினுள் அதை மறைத்துப்
போட்டுக்கொண்டாள்.
அவளின் ஒவ்வொரு செயலையும் அசைவையும்
பார்த்தபடியிருந்த மஹிந்தனுக்கு அவள் தாலிக்கொடியை கழட்டாததைக் கண்டதும் மனதில் இதம்
பரவியது.
பின் சிறிது அலுவலக வேலைகளை சரிபார்த்துவிட்டு
ழையாவை கூட்டிக்கொண்டு காரில் ஹாஸ்பிட்டல் வந்தான். கார்
ஹாஸ்பிட்டலில் நிற்பதைப்பார்த்தவள் “இங்க எதுக்காக கூட்டிக்கிட்டு வந்தீங்க...?” என்றவாளின்
குரலில் ஒரு தற்றம் இருந்தது.
இனி மறைக்க முடியாது என்பதால்
“உன் அப்பாவ இங்க அட்மிட் பண்ணியிருக்கிறதா உன் தம்பி போன் பண்ணிச் சொன்னான்.
அதனாலத் தான் உன்னைய
ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு வந்தேன்....” என்றான்.
மஹிந்தன் கூறியதைக்கேட்ட கவிழையா
கோபத்துடன் அவன் சட்டையைப்பிடித்து “என் அப்பாவை என்ன பண்ணின...? உன்னால
அவருக்கு ஏதாவது ஆச்சு... உன்னைய என்னால மன்னிக்கவே முடியாது...”
என்று கூறி கதறினாள். அவள் அழுவதை தாங்கமுடியாத மஹிந்தன் அவள் தன் சட்டையை
பிடித்திருப்பதை பார்த்தான் .
பின் “ழையா”
என்ற அழைப்புடன் அவளின் தலையை தன் நெஞ்சோடு அணைத்துப்பிடித்து “அவருக்கு எதுவும்
ஆகாது..., ஆகவும் நான் விடமாட்டேன். நீ அழுறத என்னால பார்க்க
முடியவில்லை, ப்ளீஸ்... அழாத...!” என்று
கூறியபடி அவள் தலையைத் தடவிக்கொடுத்தான்.
அவளுக்கு அதிர்ச்சி சற்று மட்டுப்பட்டதும்
தான் இருக்கும் நிலை உணர்ந்த கவிழையா தன்னை மீட்டுக்கொண்டு தன் அப்பாவைப் பார்க்க ஹாஸ்பிட்டலினுள்
நுழைந்தாள்.
அவள் பின்னால் வேகமாக வந்த மஹிந்தன்
ரிசப்சனில் ஈஸ்வரனின் பெயரைச்சொல்லி எந்த ரூமில் உள்ளார் என்று கேட்டான். அவர்
ஐசியு ரூமில் இருப்பதைக் கூறியதும் அங்கு இருவரும் வேகமாகச் சென்றனர்.
அவளின் அப்பா அட்மிட் செய்திருந்த
ரூம் வாசலில் பார்வதி அழுதுகொண்டு அமர்ந்திருந்தாள். கவிழையா
அம்மாவைப் பார்த்ததும் ஓடிப்போய் தன் அம்மாவிற்கு தோள்கொடுத்து தேற்றியவள்
“அப்பாவிற்கு
எதுவும் ஆகாதும்மா... நீங்க தைரியமாக இருந்தால் தானே நானும் தைரியமாக இருக்கமுடியும்...”
என்று பார்வதியிடம் சொல்லியவளின் கண்களில் ஆறாக கண்ணீர் வடிந்தது.
மஹிந்தன் மருத்துவமனை வந்துவிட்டதை
அறிந்த கதிர் ஷ்பெசல் டாக்டர் குழுவுடன் ஐசியு யூனிட்டிற்குள் வந்தான் அங்கிருந்த மஹிந்தனிடம்
ஈஸ்வரனின் உடல்நிலைப் பற்றி விளக்கம் அளித்த டாக்டர் “அஞ்சியோ
மூலம் இதயத்தின் அடைப்பைப்பற்றி தெரிந்துகொண்டு, மற்றதைப்
பற்றி பேசலாம்” என்றார்.
மேலும் சரியான நேரத்திற்கு ஹாஸ்பிட்டல்
கொண்டு வந்துவிட்டதால் அவரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் கூறினார்
. டாக்டர்குழுவைப்
பார்த்ததும் கவிழையா தன் அப்பாவின் உடல்நிலை அறிய வந்தவள் மஹிந்தனிடம் அவர்கள் பேசியதைக்
கேட்டாள்,
அதில் தன் அப்பாவைப்பற்றிய கவலை
சற்று குறைந்தது. ஆனால் தொடர்ந்து அதிர்ச்சியை சந்தித்ததின் விளைவாக நின்ற
இடத்திலேயே மயங்கிச் சரிந்தாள்.
அவள் மயங்கிச் சரிவதைத் தற்செயலாக
திரும்பி பார்த்த மஹிந்தன் பதறிக்கொண்டு ஒரு எட்டில் அவளைத் தாங்கி பிடித்துக்கொண்டான்.
வருண் ஏ.டி.எம்மில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வந்தவன் தன்
அக்கா மயங்கிச் சரிவதைப் பார்த்தவன் அவளை தாங்கிபிடித்த மஹிந்தனைக் கண்டான்
.
அதன் பின்,
மருத்துவர்கள் “ழையா அதிர்ச்சியில் மயங்கிருப்பதாக தெருவித்தனர்.
தற்பொழுது தூக்கத்திற்கு ஊசி போட்டிருப்பதாகவும் தூங்கி எழுந்தாள் சரியாகிவிடுவார்கள்”
என்று தெருவித்தனர் .
கதிர் மஹிந்தனை “நீ வீட்டிற்கு
கிளம்பு, நான் இங்கு பார்த்துக்கிறேன் என்றான்.
அவன் சொல்வதை காதில் வாங்காமல் இருக்கமுடன் மஹிந்தன் அங்கேயே
நின்றுகொண்டிருந்தான்.
மஹிந்தன் பிடிவாதமாக இருப்பதைப்
பார்த்தவன் “நீ இங்கு இருக்கிறது மற்றவங்ளுக்குத் தெரியறதுக்குள்ள இடத்தை காலிசெய்...
அப்படி இல்லைன்னா கவிழையாவிற்குத்தான் பிரச்சனை....” என்று கூறி அவனை ஹாஸ்பிட்டலில்
இருந்து அனுப்புவதற்கு முயற்சி செய்துக்கொண்டிருந்தான் .
அப்பொழுது அங்கு வந்த வருண்,
மஹிந்தனிடம் “உங்க உதவிக்கு ரொம்ப தாங்க்ஸ் சார்”
என்றவன் சற்று
தயங்கி...
“நாங்கச் சாதாரனமானவங்கதான்
ஆனால் அக்காவையும், அப்பாவையும் இங்க வச்சு பார்த்துக்குற அளவுக்கு எங்களுக்கு வசதி இருக்குது சார்..., உங்களோட அதிகப்படியான அக்கறையைப் பார்க்குறப்போ என் அக்காவின்
வாழ்க்கையைப் பத்திய பயம் எனக்கு அதிகமாகுது...” என்று
கூறினான்.
அவன் பேசவும் கூர்ந்து அவனை
கவனித்த மஹிந்தனிடம், “நீங்க எவ்வளவு பெரிய வி.ஐ.பி...!
எங்களுக்காக நீங்க இங்க
இருப்பது சரியில்ல... அதனால அவர் சொல்றதுபோல எங்களுக்கு பிரச்சனை வருறதுகுள்ள நீங்க
கிளம்பிடுங்க...” என்று கதிரை காண்பித்துச் சொன்னான்.
கவிழையாவின் எம்.டி.மஹிந்தன்
தன் அக்காவை ஹாஸ்பிட்டல் கூப்பிட்டுக்கொண்டு வருவதாக போனில் சொல்லியபோதே இந்தியாவின்
பலராலும் வியந்து பார்க்கும் நிலையில் உள்ள மிகப்பெரிய பிஸ்னெஸ்மேன் தன் அக்காவுடன்
வருவதாக கூறியது வருணுக்கு மஹிந்தன் மேல் சற்று சந்தேகத்தை கிளப்பியது
.
ஏற்கனவே அவனுக்கு கல்யாணம் நிச்சயமாகி
இருப்பதை நியூஸ் பேப்பரிலும், நியூஸ்சேனல்களிலும் கண்டு அறிந்திருந்தான்.
மேலும் கவி அவளின் செக்ரெட்டரி
போஸ்ட்டுக்காக கட்டாயமாய் தனது வீட்டு வாசலில் வைத்து காரில்மட்டும் செல்லவேண்டும்
என்று எம்.டிசொன்னதாக அன்று அவனின் ஆட்கள் கூறியது வருணுக்கு
நெருடலாக இருந்தது.
மேலும் தன் அக்கா மயங்கிச்சரியும்
போது மஹிந்தன் பதறியதைப் பார்த்தவன் கவிழையாவின் மேல் அவனுடைய அதிகப்படியான ஈடுபாட்டையும்
கண்டான், இந்த அதிகப்படியான அக்கறை தன் அக்காவின் பெயருக்கு
களங்கத்தை ஏற்படுத்தும் என்ற பயத்தை அவனுக்குக் கொடுத்தது.
எனவே வருன்,
மஹிந்தனை அவ்விடத்தைவிட்டு அகற்றவும் அவனின் உதவியை மறுக்கவும் எண்ணினான்.
வருணின் ஆராய்ச்சிப் பார்வையையும்,
அறிவையும் கண்ட மஹிந்தனுக்கு சபாஷ் போடத்தோன்றியது. எனவே
மஹிந்தன் அவன் தோளின் மேல் கைபோட்டு பக்கத்தில் உட்காரவைத்து பேசினான்.
கதிருக்கு மஹிந்தனின் செயல் ஆச்சரியத்தைக்
கொடுத்தது இதுவரை யாரிடமும் இவ்வளவு நெருக்கமாக அவன் பேசியதில்லை.
அவன் தங்களிடம் பேசுவதையே
பிசினெஸ் உலகத்தினர் மற்றவர்களிடம் பெருமையாக சொல்லிக்கொள்வர் அப்படிப்பட்ட இடத்தில்
உள்ளவனின் செயல் பார்த்து வருணின் மேல் கதிருக்கும் மதிப்பு கூடியது
.
மஹிந்தன் வருணிடம் கூறினான்,
“நீ நினைக்கிறது போல் உன் அக்கா எனக்கு ஸ்பெஷல் தான்...,
ஆனால் இப்போதைக்கு அதை வெளியில் சொல்ல முடியாது, என்
ழையாவை பார்த்துக்கோன்னு பொறுப்பை நான் உன்னிடம் கொடுக்கிறேன்...”
என்று கூறி தன் பர்சனல் போன் நம்பரை அவனிடம் கொடுத்தான்.
“எது பேசணும்
என்றாலும் இந்த நம்பரில் என்னைக் காண்டாக்ட் செய்” என்றான். அவன்
கூறியதைக் கேட்ட வருண் அவன் கொடுத்த நம்பரை பெற்றுக்கொண்டு “என்
அக்காவை பார்த்துக்கொள்ள யாரும் எனக்குச் சொல்ல வேண்டாம், உங்களால்
அவளுக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தால் அதுவே எனக்கு போதும்...”
என்று அவனைப் பார்த்தபடி கூறினான்.
அவன் கூறியதைகேட்டு உதட்டில்
புன்னகையுடன் எழுந்துகொண்ட மஹிந்தன் .”நான் உன் அப்பாவின் டிரீட்மென்ட் பொறுப்பையும்,
உன் அக்காவை என்
பொறுப்பிலும் எடுத்துக்கிட்டேன் என்னை உன்னால் தடுக்க முடியாது...”
என்று கூறினான்.
பின்பு நட்புடன் வருணைப்பார்த்து
புன்னகைத்துக்கொண்டு “நான் இப்போ போறேன்... ஆனா மீண்டும் வருவேன்...”
என்று கூறிச்சென்றான்.
மஹிந்தன் வீட்டிற்கு வருவதற்கு
இரவு ஆகிவிட்டது. அவனின் வரவை எதிர்பார்த்து தங்கை மதுரா மற்றும் அவனது
பெற்றோர் விஸ்வநாதன்- சுபத்ரா ஆகியோர் உடன் ஐஸ்வர்யா மற்றும் அவளது அம்மா
விஜியும் நடு ஹாலில் உட்கார்ந்து இருந்தனர்.
மஹிந்தன் உள்ளே வந்ததும் மதுரா,
“அண்ணா! நீ ஒரு மணி நேரத்தில் வருறதா சொன்ன...? ஆனா, நாலு ஒருமணிநேரம்
கழிச்சு வந்திருக்கிற...!” என்று குற்றம் கூறுவதைப் போல் சொன்னாள்.
அவள் அவ்வாறு கூறியதும்,
மஹிந்தனுக்கு அன்று நடந்த செயல்களின்
அழுத்தத்தின் விளைவால் எப்பொழுதும் இல்லாத வழக்கமாக தன் தங்கையிடம் கடிந்து பேசினான்
.
“மதுரா, நான்
யாருக்கும் இன்று என்னைய மீட்பண்ண அப்பாய்ண்மென்ட் கொடுக்கலை...,
என்னோட பிஸியான டைம் ஷெட்யூல் தெரிந்திருந்தும் இந்த இன்பார்மும் இல்லாமல் வந்து
காத்திருந்தால் அதற்கு நான் எப்படி பொறுப்பாகுறது...?” என்று கோபத்தில் சத்தமாகக் கூறினான்
அவன் கூறியதைகேட்ட மதுரா அதிர்ந்து
அவனைப் பார்த்தாள். தன் தங்கையின் அதிர்ச்சியைப் பார்த்தவன் தன் கோபத்தை
கட்டுப்படுத்தி மதுராவின் அருகில் வந்து, “ஸாரி... ஏதோ
டென்ஷனில் கத்திட்டேன்” என்று கூறி தன் தங்கையின் கையை ஆதரவாக பிடித்துக்கொண்டு அவள் அருகில்
அமர்ந்தவன் புன்னகைத்துக்கொண்டே
“இப்பொழுது
சொல் எதுக்காக எல்லாரும் எனக்காக காத்திருக்கீங்க?” என்று
மதுராவிடம் கேட்டான்.
அவன் அவ்வாறு கேட்டவுடன் சுபத்ரா
மஹிந்தனிடன் “யார் கவிழையா...? அவளோடன்
நீ ஏன் சுத்துற....?” என்று கேட்டாள்.
மஹிந்தனின் அம்மா அவ்வாறு கேட்டதும்
அவனுக்கு மறுபடியும் கோபத்தில் வார்த்தைகள் வெளிவர துடித்தது. மூச்சை
இழுத்து தன் கோபத்தை அடக்கிய மஹிந்தன்
“மாம் நான்
என் பெர்சனல் லைப்பற்றி யாருக்கும் விளக்கம் கொடுத்ததில்லை இனிமேலும் கொடுக்கப்போறதில்லை....
இனி இது போல் யாரும் பேசி என் கோபத்தை கூட்டவேணாம்...” என்று கூறினான்.
அவன் கூறுவதைக்கேட்ட மஹிந்தனின்
அப்பா விஸ்வநாதன் கூறினார், “மஹி இதுவரைக்கும் உன்னைய யாரும் கேட்டதில்ல. ஆனா...
இனி அப்படி கேட்காமல் இருக்க முடியாது. உனக்குனு ஐஸ்வர்யாவை முடிவு செய்தாச்சு... அவளுக்கு
நீ பதில் சொல்லித்தான் ஆகணும்”
என்று கூறி கவிழையாவுடன் மஹிந்தன்
காரில் ஏறுவதுபோல், மற்றும் ஹோட்டலில் அவள் கைப்பிடித்து செல்வதுபோல்,
இன்றுகாலை கவிழையாவுடன் கைபிடித்து காரிலிருந்து இறங்குவதுபோன்ற போட்டோக்களை
அவனின் முன் இருந்த டீபாயின் மேல் பரப்பினார்.
அவற்றைப் பார்த்த மஹிந்தன்
“இது எதையும் நான் இல்லைன்னு சொல்லப்போறதில்லை, நானும்
ஐஸ்வர்யாவும் காதலுடன் கல்யாணம் முடிக்க சம்மதிக்கல..., அவளுக்குத்தேவை
என்னைய போல மல்டி மில்லினியர் மாப்பிள்ளை. எனக்குத்தேவை என் தாத்தாவின் கம்பெனி
‘சோ’ இந்த கல்யாணம் முடிவாகிருச்சு...” என்றான்.
“அதுவும் ஐஸ்வர்யாவுக்கு என்னையக்
கட்டுப்படுத்த எந்த தகுதியும் இல்லை. அவள் உங்கக்கிட்ட என்னையப்பத்திய போட்டோவைத் தானே காட்டினாள், இதோ
இதில் ஐஸ்வர்யா அவளுடைய பாய்பிரண்ட் அஜய்யுடன் போடும் ஆட்டத்தை வீடியோவாகவும்,
போட்டோக்களையும் பாருங்கள....”
என்று கூறி தன் ஐ போனில் அஜய்யுடன்
ஐஸ்வர்யா இருந்த போட்டோக்களையும் அவனுடன் நெருக்கமாக இருக்கும் சில வீடியோ காட்ச்சிகளையும்
தன் தங்கை மதுராவிடம் காண்பித்தான் .
அவ்வளவு நேரம் அவர்கள் முன் சோககீதம்
வாசித்துக்கொண்டிருந்த ஐஸ்வர்யா, மஹிந்தன் தன்னைப்பற்றிய வண்டவாளங்களை படம் போட்டு காட்டவும்
. டக்கென்று தன் நடிப்பை மாற்றிக்கொண்டாள்.
“என்ன மஹிந்தன்
இது! எல்லாம் நம்மைப்போன்ற ஹய்சொசைட்டி ப்யூபில்ஸ் வாழ்க்கையில்
நடப்பதுதானே...?” என்று குழைந்த குரலில் கூறியபடி
“நான் ஒன்றும் இதையெல்லாம் பெரிதாக நினைக்கமாட்டேன்” என்று
சொல்லிக்கொண்டு மஹிந்தனின் அருகில் நெருங்கி உட்கார முயன்றாள்.
உடனே தன் மேல் அவளின் உடல் படுவதை
விரும்பாத மஹிந்தன் டக்கென்று எழுந்து நகர்ந்து போய் ஐஸ்வர்யாவைப் பார்த்து “இதுபோல் சீன்
கிரியேட் பண்ணினால் இனி இக்கல்யாணம் நடக்காது” என்று
கூறினான்,
“என் குடும்ப
அடையாளமான எஸ்.வி.என் மோட்டார்சை வேறு வழியில என்கிட்ட எப்படி கொண்டுவரனும்றது
எனக்குத்தெரியும்” என்று கூறியவன் விருட்டென்று மாடியேறி தன் அறையினுள்
சென்றவன் கதவை டமார் என்ற சத்தத்துடன் அறைந்து மூடினான்.
ஐஸ்வர்யாவிற்கு மஹிந்தன் அவ்வாறு
தன்னை தவிர்த்தது முகத்திலரைந்தது போல் இருந்தது. அவளுக்கு
மஹிந்தன் மேல் வண்மம் வலுத்தது.
அவ்வளவு நேரம் மதுராவிற்கு அவன்
அண்ணன் மேல் இருந்த வருத்தம் ஐஸ்வர்யாவின் உண்மையான முகத்தைப் பார்த்ததும் கவலையாக
மாறியது. இப்படிப்பட்ட குணமும் நடத்தையும் உள்ள ஒருத்தி தன்
அண்ணனுக்கு மனைவியாக வருவதை நினைக்கையில் கசப்பாக இருந்தது.
மஹிந்தன் தன் அறைக்குள்ளே கோபம்
அடங்காமல் உள்ளம் கொதிப்போடு உடைகூட மாற்றாமல் தன் படுக்கையில் விழுந்தான். அவனுக்கு
ஐஸ்வர்யாவின் செயலை மன்னிக்க முடியவில்லை, என் மீது
வீட்டில் கம்ப்ளைன்ட் சொல்ல இவளுக்கு எவ்வளவு தைரியம்.
தன் பெற்றோருக்கு கவிழையா பற்றி
இப்பொழுது தெரிவதில் அவனுக்கு விருப்பம்
இல்லை. ஏனெனில் தன் தந்தையும் தாயும் ஐஸ்வர்யாவுடனான இக்கல்யாணம் தான் தங்கள் கம்பெனியை
மீட்டுத்தரும் என்பதை நம்பினார்கள்.
அவர்களுக்கு தன் மகனின் இச்செயலால்
எஸ்.வி.என்.மோட்டார்ஸ் தங்களின் கைவிட்டுச்செல்வதை விரும்பமாட்டார்கள். எனவே
கவிழையாவை மஹிந்தனின் வாழ்வில் இருந்து அகற்ற முடிவெடுத்து அவளுக்குப் பிரச்சனையை கொடுக்கப்
பார்ப்பார்கள் என்பதை மஹிந்தன் அறிந்திருந்தான்.
எனவே சிறிது யோசனைக்குச் சென்றவன்
கதிரை போனில் தொடர்புகொண்டான், கதிர் போனை எடுத்ததும் “ஐஸ்வர்யாவினால் கவிழையா பற்றிய
விபரம் வீட்டிற்கு
தெரிந்துவிட்டதைச் சொன்னான். அதனால் கவிழையாவிற்கு தன் வீட்டவரால் ஆபத்து எதுவும் ஏற்படாது
பார்த்துக்கொள்ளும்படி கூறினான். இப்பொழுது அவளுக்கு மயக்கம் தெளிந்துவிட்டதா...?” என்று
கேட்டான்.
அவன் கூறியதைக்கேட்ட கதிர் மயக்கம்
தெளிந்து மருந்தின் உதவியால் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக டாக்டர் கூறியிருக்கிறார்
என்றவன், நான் இங்கே பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி தொடர்பைத்
துண்டித்தான்.
மஹிந்தனுக்கு என்ன முயன்றும்
இமைமூடி தூக்கத்தை வரவழைக்க முடியவில்லை கவிழையாவிடம் மதியம் தான் நடந்துகொண்டவிதத்தினால்
அவள் தன்னைப்பார்த்து பயந்து பின்னால் நகர்ந்ததும், காரில்
தன் சட்டையைப்பிடித்து கதறியதும் ,மருத்துவமனையில் மயங்கிச்சரிந்ததும் திரும்பத்திரும்ப
நினைவில் வந்து அவனைப் படுத்தியது,
ஒரு பெண்ணிற்காக தான் இந்த அளவு
தவிப்பதை நினைத்து அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஆனால் ஒன்றை மட்டும் அவன் உறுதியாக
நம்பினான் தன்னால் கவிழையாவை மறக்கவும், யாருக்காகவும்
விட்டுக்கொடுக்கவும் முடியாது என்பதையும் அவன் புரிந்துகொண்டான்.
எவ்வளவு சீக்கிரம் அவளை தன் பக்கத்தில்
நிரந்தரமாக வைத்துக்கொள்ள முடியுமோ அதற்கான வேலைகளை உடனே செயல்படுத்த முடிவுசெய்தான். இனி
அவளை தனியாக விட்டுவைப்பதால் தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் ழையாவிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு கிடைத்துவிடுமோ என அஞ்சினான்.
*********
ஐஸ்வர்யாவை அவளின் வீட்டில் அவள்
அம்மா வசவு உரித்துக்கொண்டு இருந்தாள். “உன் பேச்சைக்
கேட்டு நான் சம்மந்தி வீட்டுக்கோ போனது... உங்கள் பையனின் லட்சனத்தைப்பாருங்கள்னு சுபத்ராவின்
முன்னாடி மாப்பிளையை மட்டம் தட்ட பார்த்தேன்.
அன்னைக்கு நிச்சயத்தப்போ சுபத்ரா
கோவைசரளாவின் பாணியில் என் மஹிந்தனுக்கு இரண்டு மில்லைக் கொடுத்து பெண்கொடுப்பதாக கூறினார்கள்.
கப்பல்கொடுத்துப் பெண்கொடுப்பதாக கூறினார்கள், பெரியகம்பெனி
கொடுத்து பெண்கொடுப்பதாக் கூறினார்கள் ஆனால் என் நேரம் இங்கதான் பெண் எடுக்கும் படி
ஆகிவிட்டது என்று அலட்டிக்கொண்டாள்.
அந்த நேரத்தில் நான் ஏதாவது சொன்னா....
நிச்சயதார்த்தம் நின்னு போயிடுமோனு பயந்து பேசலை.... இது போன்ற பரம்பரை கோடீஸ்வர வீட்டுச்சம்பந்தம்
நமக்குக் கிடைப்பதைப் பார்த்து பொறாமைப் பட்டவங்களுக்கு முன்ன உன் கல்யாணம் நல்லபடி
முடியம் வரை அடக்கி வாசிக்கணும்னு முடிவெடுத்தேன்...” என்றாள்.
“அதனால் நீ
இந்த போட்டோக்களை காட்டியதும் அந்த சுபத்ராவிடம் போட்டோக்களை காண்ட்டி.... ‘பார்... உன் மகனின் லட்சனத்தை’ என்று மட்டம் தட்டிவிட்டு உன் மகனைத் திருந்தியிருக்கச்சொல்லு... இந்த ஒருதடவை
அவன் செய்த தப்பை பெருசுபண்ணாம திருமணத்திற்கு சம்மதிக்கிறோம்னு சொல்லி அவளை மட்டம்
தட்டலாம்னு அங்க போனேன். ஆனால் என் கிரகம் வழியப்போய் உன்னால் திரும்பவும் அவமானப்படும்படி
ஆகிப்போச்சு...” என்றவள், கோபத்துடன்.
“ஏன்டீ இப்படி
அந்த செம்பட்டை முடி அஜய்கூட சுத்தாத... சுத்ததனு சொன்னால் கேட்க மாட்டயா...?” என்று
ஐஸ்வர்யாவின் மேல் கோபம் கொண்டாள் அவள் அம்மா .
“அம்மா அவன்
எவ்வளவு செலவு செய்து அவன் முடிக்கு கலரிங் பண்ணியிருக்கிறான் நீ அதைப்போய் செம்பட்டைமுடி
என்று பேசுறயே” என்று கூறினாள் .
அவள் கூறியதை கேட்ட அவள் அம்மா,
“ஏன்டி நான் இம்புட்டு நேரம் உன் கல்யாணத்தைப்பத்தி கவலைப்பட்டு பேசியப்போ...
சும்மா இருந்துட்டு, அந்த அஜய்யை நான் குறைபேசியதற்கு மட்டும் பதில் பேசுற...?
அடியே...! ஐஸ்வர்யா...
அதென்னடி அவனுடன் போட்டாவில் கட்டிபிடிப்பது, முத்தம் கொடுப்பதுனு புருஷன் பொண்டாட்டி
போல நிற்கிற...?! வேறெதுவும் அத்துமீறி அவன்கூட கூத்தடிச்சு கல்யாணத்துக்முன்ன
வயித்தில வாங்காமல் இருந்தால் சரி....” என்றாள் அவளின்
அம்மா.
அம்மா அவ்வாறு சொல்லவும் ஒரு
முறை மனதுக்குள் திடுக்கென்றது ஐஸ்வர்யாவிற்கு எதற்கும் டாக்டரிடம் போய் ஒரு தடவை டெஸ்ட்
பண்ணிடனும் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் ஐஸ்வர்யா. ஆனால்
வெளியே “அப்படியெல்லாம் வந்து உன்னிடம் நிற்க மாட்டேன்.
நீ கொஞ்சம் சத்தம் போடாமல் என்னை நிம்மதியாக டி.வி
பார்க்கவிடு” என்று கூறியபடி தன் கால் நகத்திற்கு வண்ணம் பூசிக்கொண்டு
இருந்தால் ஐஸ்வர்யா .
அதற்கு அவள் அம்மா,
“ஆமா நீ பாட்டுக்கு உட்கார்ந்துட்டு இரு..., அந்த கவிழையா பாட்டுக்கு அந்த மஹிந்தனை தட்டிக்கிட்டு
போயிடப்போறாள் யாரு டீ அவ...? தொடச்சு வச்ச குத்துவிளக்காட்டம் எவ்வளவு அழகாக இருக்கிறா...?”
என்று கேட்டாள்.
அவளை தன் முன்னால்,
அழகு என்று தன் அம்மா சொல்லவும் கோபத்தில் ஐஸ்வர்யா தான் காலை தூக்கி வைத்துக்கொண்டு
நெயில்பாலிஸ் போட்டுக்கொண்டிருந்த காலால். டீபாயினை
உதைத்து தள்ளிவிட்டாள் பின் சத்தமாக
“அம்மா அந்த மிட்டில் கிளாஸ் பொண்ணை என்முன்னாடியே எப்படி
அழகாக இருக்கிறாள்னு எப்படிச் சொல்லலாம்...?, எனக்கு எதிரில்
நிற்கவே தகுதியில்லாதவ அவள்..., எனக்கு போட்டியாக என் வாழ்க்கையில நுழைய பார்ப்பதற்கு
எப்படியெல்லாம் அனுபவிக்கப்போறாள் பாருங்க....!” என்றாள்
ஐஸ்வர்யா.
No comments:
Post a Comment