மீரா தாத்தா வயசு 16 [ஆதன்-னின்]
அறிவடி- 07(நிகழ்காலம்)
பஸ்சிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்த கூட்டத்தில் சந்தோசும், செல்வியும் பின்தங்கி பேச ஆரம்பித்தார்கள்…
" எப்டிடா மீராவ சமாளிக்கிற" என்றாள் செல்வி.
"வெரி சிம்பிள் அமைதியா சிரிச்சிட்டே போயிருவன்" என்றான் சந்தோசு.
"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எப்டியாவது தனியா போயிரனும்டா"
"அப்டி ஒரு ஐடியா இருந்தா இப்பவே பழசலாம் மறந்துட்டு உன் வழிய பாத்துட்டு போயிரு. அது என் மாமன் மட்டுமில்ல என் அப்பனும் அதான். பெத்த அப்பன விட என்னைய பாத்துக்கற மனுசன்"
"என்னடா பொசுக்குனு இப்டி சொல்லிட்ட வெளையாட்டுக்கு சொன்னன்டா கேன"
" வெளையாட்டுக்கு கூட அப்டி சொல்லாத! நீ எப்டி சொன்னாலும் நான் இதத்தான் சொல்லுவன்." என்றான் சந்தோசு.
"ரொம்ப பண்றடா சின்ன விசயத்துக்கு!"
" இது உனக்கு சின்ன விசயம், ஆனா உலகத்திலயே இதான் எனக்கு பெரிய விசயம்!
ஆமா என்ன சாப்பாடு மதியத்துக்கு?"
"கீரை ரசம்"
" அந்த மனுசன் இன்னைக்கு ஜிம் பக்கமே போகல, லேட்டா எழுந்திருக்கும் போல ஆனா உப்புல பொறட்டுன நாட்டுக்கோழி பெரட்டி குடுத்துருக்கு இதான் அது பாசம்
சம்மர் லீவ்ல என்ன பண்ணுவ?!
"வீட்ல இருப்பன் பெரியப்பா அத்தை வீட்டுக்கு போவன்"என்றாள் செல்வி.
" ஆனா நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போவன் ஏன் தெரியுமா?!
"ஏன்"
"அடுத்து நான் லா படிக்கனும். ஹை கோர்ட் வக்கீலாகனும் அதுக்கு எனக்கு இங்கிலீஷ் சரளமா வரனும். அதுக்குத்தான் இங்க இங்கிலீஷ் லிட்ரேச்சர் எடுத்ததே! இதெல்லாம் சுத்தமா படிக்காத மீராவோட ஐடியா"
"எப்பா டே சாமி தெரியாம சொல்ட்டன். மீராவா எனக்கும்தான்டா புடிக்கும். இந்த வருசம் முடிஞ்சதும் மீராக்கிட்ட நம்ம லவ்வ சொல்லிருவோம்டா"
"கண்டிப்பா ஆனா கல்யாணம்லாம் பண்ணி வைக்காது. உங்க வீட்ல உன்ன படிக்க வைக்கச் சொல்லி என்னையும் படிக்க விட்டுத்தான் கல்யாணத்துக்கு சம்மதிக்கும். ஆனா ஊரே போர்க்களமா மாற போவுது"
"இந்த சாதிய கண்டுபுடிச்சவன செருப்பால அடிக்கனும்"என்றாள் செல்வி……
வகுப்பு துவங்கவே அவரவர் வேலையை அவரவர் பாத்தார்கள்.
போன வருசம் அரும்பிய காதல் இந்த வருசம் சுட்ட களிமண் பொம்மையாய் இறுகி போச்சு.
கடைசியா இதெல்லாம் மீரா தலையிலத்தான் விழும்!
டீக்கடைக்காரன் பொண்டாட்டிய வம்பிழுத்துக்கிட்டு மீரா இருக்க. கட்டிங் சேவிங்க பண்ணி தெளிவா வந்தான் கருப்பன்.
"பார்ரா மாப்பிள்ளை மாதிரி ஆய்ட்டான்" என்று கருப்பன் பக்கம் பேச்சை திருப்பிய மீரா…
"போலாமாடே கருப்பா"
"போலாம் போலாம் ஒரு டீய குடிச்சிட்டு வந்திடறன்"னு சொல்ல
"விசத்த விரும்பி குடிக்கறவன் நீதாம்டே"
"ஒரு டீ போட்டுக் குடுய்யா தம்பி" என்று மீரா சொல்ல டீ வந்தது கருப்பனுக்கு…..
டீ கடைக்காரன் மீராக்கிட்ட பேச்சை வளர்த்தான்.
"நாலு வயசு பொண் கொழந்தய ஒருத்தன் நாசம் பண்ணியிருக்கான் மீரா"
"வெறும் சவுக்காலயே மாத்தி மாத்தி அடிச்சிக் கொல்லனும்டே அவனலாம்" என்றது மீரா….
"இந்ந பம்பாய் மாதிரி இங்கையும் விபச்சாரத்த சட்டமாக்குனா இந்த மாதிரி நடக்குறதுலாம் குறையும்னு காலையில இங்க பேசிக்கிட்டாங்க. அப்டி செய்யலாமா மீரா?! என்றான் டீ கடைக்காரன்….
" சட்டமாக்கலாம் சரிதான், ஆனா தன் தேவைக்கு ஆம்பள போற மாதிரி, இதுல திருப்தி அடையாத பொண்ணுங்க போறதுக்கும் இடம் வைச்சி சட்டமாக்கறதுதான சரியான நீதியா இருக்கும்" என்று மீரா பேச டீ கடைக்காரன் மூஞ்சி சுருங்கி போச்சி ஆனா டீக்கடைக்காரன் பொண்டாட்டி முகம் மலர்ந்திருந்து மீராமேல மரியாதை கூடியிருந்தது.
கருப்பன் டீ குடிச்சி முடிக்க மீராவும் கருப்பனும் கிளம்ப டீ கடைக்காரன் நிம்மதியாக, அவன் பொண்டாட்டி மீரா இன்னும் கொஞ்ச நேரம் இங்கையே இருந்திருக்கலாம்னு நினைச்சா!
வீட்டு வாசல் நிழல்ல பைக்க நிறுத்தியது மீரா.
" மீரா வூட்டக்கு தண்ணீய ஊத்திக்கிட்டு வந்திடறன்" என்று கருப்பன் சொல்ல….
"தேவையில்ல இங்கையே குளி என் துணிய போட்டுக்க, குளிச்சிட்டு வர மொளாகா போட்டு ஒரு பருப்பு கொழம்ப வை "
"சரி சரி வைச்சிட்டா போச்சி"னு குளிக்க போனான் கருப்பன்….
அரிசிய கழுவி ஊற வைச்சி குக்கர்ல சோத்த வைச்சி, முட்டை நால வேக போட்டு. குழம்புக்கு தேவையானதை கருப்பன் வரதுக்குள்ள செஞ்சி வச்சிருச்சி மீரா ……
டே கருப்பா மூனு விசில் வந்ததும் இறக்கிடு. குழம்பு நைட்டுக்கும் வராமாதிரி வை, முட்டைய இறக்கிடுனு சொல்லிட்டு குளிக்க போச்சி மீரா….
சமைச்சி சாப்டுட்டு ஒரு முக்கால் மணி நேரம் தூங்கறது மீராவோட வழக்கம். வெளிய புங்கை மரத்தடி கட்டில்ல படுத்து கண்ண மூடிச்சி நம்ம மீரா….
ஃபேன போட்டு ஹால்ல படுத்த கருப்பன் மீரா இல்லனா தன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சபடியே படுத்திருந்தான்….
மீரா காட்டுல வெளைஞ்ச காய்கறிங்கள கொறைஞ்ச வெலைக்கி குடுத்து டவுன் மார்க்கெட்ட கடை போடவும் இடம் புடிச்சி குடுத்திருந்தாரு அப்ப. தேவைக்கு மேலயே அப்ப கருப்பனுக்கு வருமானமும் வந்துச்சி. ஒரு வருசத்துல காச நோய்ல பொண்டாட்டி விழ நிலைமை மோசமாகி அவளும் போய் சேர்ந்த பின்ன கருப்பனோட வாழ்க்கை முழுசா மாறிப்போய் கெடந்துச்சி…..
ரெண்டாங் கல்யாணத்துக்கு மீரா வற்புறுத்தியும் கருப்பன் ஒத்துக்கல. கடைசியில குடும்பத்துல ஒருத்தனாவே கருப்பன வைச்சிக்கிட்டு நல்லது கெட்டத பார்த்துக்குது நம்ம மீரா…
மீரா ஒரு மணி நேரம் போய் எழுந்து மொகத்த கழுவிக்கிட்டு வீட்டுக்குள்ள வர கருப்பன் தூங்கிக்கிட்டு இருந்தான். எழுப்ப வேணாம்னு சுக்கு டீ வைச்சிட்டு கருப்பன உசுப்பி விட்டுச்சி…….
"லே மைனரு எழுந்திரு டீயக் குடி"
கருப்பன் சரியான டீ பைத்தியம். உடனே எழுந்தான். மீரா குடுத்த சுக்கு டீய குடிச்சிட்டு எழுந்த போய் மொகம் கழுவி வந்து கண்ணாடிய பார்த்தான் மனசுக்கு ஒரு திருப்தியா இருந்துச்சி……
புங்கை மரத்தடி கட்டிலில் ரெண்டுபேரும் வறுத்த கடலைய வாய்ல போட்டபடி பேச வெயில் ஏறி இறங்கி இருந்தது……
"கருப்பா குப்பன் பெயிண்ட் கடை வரைக்கும் போய்ட்டு வந்திருவோமா"
"எதுக்கு மீரா வூடு நல்லாதான இருக்கு?!"
"லூசு பயலே பெயிண்டுனா வூட்டுக்குத்தான் அடிப்பாங்களா?!"
" பின்ன"
ஜிம்முல சாமானத்த எடுத்து வெளையாடிட்டு அங்கங்க போட்டுட்டு போயிடறானுங்க. இப்ப வைகாசி வெயிலுக்கு பூமி சூட்டைக் கிளம்ப தூறி வைக்குது. தண்ணி பட்டு சாமான்லாம் துருப்புடிக்குது அதுக்குத்தான் வா போலாம்"னு வீட்ட பூட்டிபுட்டு புல்லட்ட ஒதைச்சது மீரா….
புல்லட் மெயின் ரோட்டுக்கு வரவும் சந்தோசும் செல்வியும் பஸ்ஸ விட்டு இறங்கவும் சரியா இருந்துச்சி. யாரோ எவரோ போல நடந்தார்கள்….,
"ஆத்தா செல்வி"னு மீரா கூப்ட..
"பொண்ணுக்கேட்க எப்ப வரட்டும்"னு கேட்கறியா மீரானு சொன்ன செல்வி சந்தோச பார்க்க அதில் அர்த்தம் இருந்தது….,
" பார்ரா நீ வேணா சந்தோச கட்டிக்கோ பொண்ணு கேட்டு வரன்"னு சொல்ல….
ரெண்டு பேரும் அதிர்ச்சியாக செல்வி விடு விடு போயா மீரானுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டா…..
"டே சந்தோசு இங்கையே இரு குப்பன் கடை வரை போய்ட்டு வந்திடறன். வேணும்னா மோர் வாங்கி குடி"னு சொன்ன மீரா குப்பன் கடைங்கற ரமேஷ் ஹார்டுவேர் & பெயிண்ட் கடைல நின்னது. இந்த கடைய வைச்சது ரமேசோட அப்பன் குப்பன். அதனால குப்பன் கடைனு ஆகிபோனது.
" லே ரமேசு பச்சைபெயிண்ட் ஒரு அரை லிட்டர் , ஒரு சின்ன மட்டமான பிரசு, துருப்பு எடுக்க உப்பு அட்டை ஒரு அஞ்சு, நாலைஞ்சி ரெண்டு இன்ஞ் ஆணி குடு"னு வாங்கிட்டு பணத்தக் குடுத்துட்டு புல்லட்ட கிளப்பி சந்தோசையும் ஏத்திக்கிட்டு வீட்டுக்கு விட்டார் வண்டிய…..
"லே சந்தோசு சிமெண்ண பாட்டில இருக்கு முன்னால எடுத்துக்கிட்டு வா"னு சொல்ல சந்தோசு எடுத்துட்டு வந்து கருப்பன் கையில் குடுத்தான்!
" சரி லே மொகம் கை கால கழுவிக்கிட்டு துணிய மாத்திக்கிட்டு வெரசா ஜிம்முக்கு வந்துரு சேரு"னு சொல்லிட்டு ஜிம்முக்கு புல்லட்ட விட்டார். ஜிம் வீட்டுக்கு பக்கத்துலயேதான்….
ஜிம்முல 150 கிலோ இரும்பு பிளேட்டுகள் 5, 10, என எடை அளவில் இருந்தது. தம்புல்சுகள் 2, 4, 6 , 8 என இரண்டு ஜோடிகளாக ரெண்டு செட் இருந்தது. இதில்லாம பார் கம்பி, தண்டால் கட்டை, கர்லா கட்டை என இருந்தது….
சந்தோசு வர துருவ உப்பு பேப்பரால துடைக்கற வேலை ஆரம்பிச்சது!
அறிவடி தொடரும்!
அறிவடி- 07(நிகழ்காலம்)
பஸ்சிலிருந்து இறங்கி நடக்க ஆரம்பித்த கூட்டத்தில் சந்தோசும், செல்வியும் பின்தங்கி பேச ஆரம்பித்தார்கள்…
" எப்டிடா மீராவ சமாளிக்கிற" என்றாள் செல்வி.
"வெரி சிம்பிள் அமைதியா சிரிச்சிட்டே போயிருவன்" என்றான் சந்தோசு.
"நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் எப்டியாவது தனியா போயிரனும்டா"
"அப்டி ஒரு ஐடியா இருந்தா இப்பவே பழசலாம் மறந்துட்டு உன் வழிய பாத்துட்டு போயிரு. அது என் மாமன் மட்டுமில்ல என் அப்பனும் அதான். பெத்த அப்பன விட என்னைய பாத்துக்கற மனுசன்"
"என்னடா பொசுக்குனு இப்டி சொல்லிட்ட வெளையாட்டுக்கு சொன்னன்டா கேன"
" வெளையாட்டுக்கு கூட அப்டி சொல்லாத! நீ எப்டி சொன்னாலும் நான் இதத்தான் சொல்லுவன்." என்றான் சந்தோசு.
"ரொம்ப பண்றடா சின்ன விசயத்துக்கு!"
" இது உனக்கு சின்ன விசயம், ஆனா உலகத்திலயே இதான் எனக்கு பெரிய விசயம்!
ஆமா என்ன சாப்பாடு மதியத்துக்கு?"
"கீரை ரசம்"
" அந்த மனுசன் இன்னைக்கு ஜிம் பக்கமே போகல, லேட்டா எழுந்திருக்கும் போல ஆனா உப்புல பொறட்டுன நாட்டுக்கோழி பெரட்டி குடுத்துருக்கு இதான் அது பாசம்
சம்மர் லீவ்ல என்ன பண்ணுவ?!
"வீட்ல இருப்பன் பெரியப்பா அத்தை வீட்டுக்கு போவன்"என்றாள் செல்வி.
" ஆனா நான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாசுக்கு போவன் ஏன் தெரியுமா?!
"ஏன்"
"அடுத்து நான் லா படிக்கனும். ஹை கோர்ட் வக்கீலாகனும் அதுக்கு எனக்கு இங்கிலீஷ் சரளமா வரனும். அதுக்குத்தான் இங்க இங்கிலீஷ் லிட்ரேச்சர் எடுத்ததே! இதெல்லாம் சுத்தமா படிக்காத மீராவோட ஐடியா"
"எப்பா டே சாமி தெரியாம சொல்ட்டன். மீராவா எனக்கும்தான்டா புடிக்கும். இந்த வருசம் முடிஞ்சதும் மீராக்கிட்ட நம்ம லவ்வ சொல்லிருவோம்டா"
"கண்டிப்பா ஆனா கல்யாணம்லாம் பண்ணி வைக்காது. உங்க வீட்ல உன்ன படிக்க வைக்கச் சொல்லி என்னையும் படிக்க விட்டுத்தான் கல்யாணத்துக்கு சம்மதிக்கும். ஆனா ஊரே போர்க்களமா மாற போவுது"
"இந்த சாதிய கண்டுபுடிச்சவன செருப்பால அடிக்கனும்"என்றாள் செல்வி……
வகுப்பு துவங்கவே அவரவர் வேலையை அவரவர் பாத்தார்கள்.
போன வருசம் அரும்பிய காதல் இந்த வருசம் சுட்ட களிமண் பொம்மையாய் இறுகி போச்சு.
கடைசியா இதெல்லாம் மீரா தலையிலத்தான் விழும்!
டீக்கடைக்காரன் பொண்டாட்டிய வம்பிழுத்துக்கிட்டு மீரா இருக்க. கட்டிங் சேவிங்க பண்ணி தெளிவா வந்தான் கருப்பன்.
"பார்ரா மாப்பிள்ளை மாதிரி ஆய்ட்டான்" என்று கருப்பன் பக்கம் பேச்சை திருப்பிய மீரா…
"போலாமாடே கருப்பா"
"போலாம் போலாம் ஒரு டீய குடிச்சிட்டு வந்திடறன்"னு சொல்ல
"விசத்த விரும்பி குடிக்கறவன் நீதாம்டே"
"ஒரு டீ போட்டுக் குடுய்யா தம்பி" என்று மீரா சொல்ல டீ வந்தது கருப்பனுக்கு…..
டீ கடைக்காரன் மீராக்கிட்ட பேச்சை வளர்த்தான்.
"நாலு வயசு பொண் கொழந்தய ஒருத்தன் நாசம் பண்ணியிருக்கான் மீரா"
"வெறும் சவுக்காலயே மாத்தி மாத்தி அடிச்சிக் கொல்லனும்டே அவனலாம்" என்றது மீரா….
"இந்ந பம்பாய் மாதிரி இங்கையும் விபச்சாரத்த சட்டமாக்குனா இந்த மாதிரி நடக்குறதுலாம் குறையும்னு காலையில இங்க பேசிக்கிட்டாங்க. அப்டி செய்யலாமா மீரா?! என்றான் டீ கடைக்காரன்….
" சட்டமாக்கலாம் சரிதான், ஆனா தன் தேவைக்கு ஆம்பள போற மாதிரி, இதுல திருப்தி அடையாத பொண்ணுங்க போறதுக்கும் இடம் வைச்சி சட்டமாக்கறதுதான சரியான நீதியா இருக்கும்" என்று மீரா பேச டீ கடைக்காரன் மூஞ்சி சுருங்கி போச்சி ஆனா டீக்கடைக்காரன் பொண்டாட்டி முகம் மலர்ந்திருந்து மீராமேல மரியாதை கூடியிருந்தது.
கருப்பன் டீ குடிச்சி முடிக்க மீராவும் கருப்பனும் கிளம்ப டீ கடைக்காரன் நிம்மதியாக, அவன் பொண்டாட்டி மீரா இன்னும் கொஞ்ச நேரம் இங்கையே இருந்திருக்கலாம்னு நினைச்சா!
வீட்டு வாசல் நிழல்ல பைக்க நிறுத்தியது மீரா.
" மீரா வூட்டக்கு தண்ணீய ஊத்திக்கிட்டு வந்திடறன்" என்று கருப்பன் சொல்ல….
"தேவையில்ல இங்கையே குளி என் துணிய போட்டுக்க, குளிச்சிட்டு வர மொளாகா போட்டு ஒரு பருப்பு கொழம்ப வை "
"சரி சரி வைச்சிட்டா போச்சி"னு குளிக்க போனான் கருப்பன்….
அரிசிய கழுவி ஊற வைச்சி குக்கர்ல சோத்த வைச்சி, முட்டை நால வேக போட்டு. குழம்புக்கு தேவையானதை கருப்பன் வரதுக்குள்ள செஞ்சி வச்சிருச்சி மீரா ……
டே கருப்பா மூனு விசில் வந்ததும் இறக்கிடு. குழம்பு நைட்டுக்கும் வராமாதிரி வை, முட்டைய இறக்கிடுனு சொல்லிட்டு குளிக்க போச்சி மீரா….
சமைச்சி சாப்டுட்டு ஒரு முக்கால் மணி நேரம் தூங்கறது மீராவோட வழக்கம். வெளிய புங்கை மரத்தடி கட்டில்ல படுத்து கண்ண மூடிச்சி நம்ம மீரா….
ஃபேன போட்டு ஹால்ல படுத்த கருப்பன் மீரா இல்லனா தன் வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்னு யோசிச்சபடியே படுத்திருந்தான்….
மீரா காட்டுல வெளைஞ்ச காய்கறிங்கள கொறைஞ்ச வெலைக்கி குடுத்து டவுன் மார்க்கெட்ட கடை போடவும் இடம் புடிச்சி குடுத்திருந்தாரு அப்ப. தேவைக்கு மேலயே அப்ப கருப்பனுக்கு வருமானமும் வந்துச்சி. ஒரு வருசத்துல காச நோய்ல பொண்டாட்டி விழ நிலைமை மோசமாகி அவளும் போய் சேர்ந்த பின்ன கருப்பனோட வாழ்க்கை முழுசா மாறிப்போய் கெடந்துச்சி…..
ரெண்டாங் கல்யாணத்துக்கு மீரா வற்புறுத்தியும் கருப்பன் ஒத்துக்கல. கடைசியில குடும்பத்துல ஒருத்தனாவே கருப்பன வைச்சிக்கிட்டு நல்லது கெட்டத பார்த்துக்குது நம்ம மீரா…
மீரா ஒரு மணி நேரம் போய் எழுந்து மொகத்த கழுவிக்கிட்டு வீட்டுக்குள்ள வர கருப்பன் தூங்கிக்கிட்டு இருந்தான். எழுப்ப வேணாம்னு சுக்கு டீ வைச்சிட்டு கருப்பன உசுப்பி விட்டுச்சி…….
"லே மைனரு எழுந்திரு டீயக் குடி"
கருப்பன் சரியான டீ பைத்தியம். உடனே எழுந்தான். மீரா குடுத்த சுக்கு டீய குடிச்சிட்டு எழுந்த போய் மொகம் கழுவி வந்து கண்ணாடிய பார்த்தான் மனசுக்கு ஒரு திருப்தியா இருந்துச்சி……
புங்கை மரத்தடி கட்டிலில் ரெண்டுபேரும் வறுத்த கடலைய வாய்ல போட்டபடி பேச வெயில் ஏறி இறங்கி இருந்தது……
"கருப்பா குப்பன் பெயிண்ட் கடை வரைக்கும் போய்ட்டு வந்திருவோமா"
"எதுக்கு மீரா வூடு நல்லாதான இருக்கு?!"
"லூசு பயலே பெயிண்டுனா வூட்டுக்குத்தான் அடிப்பாங்களா?!"
" பின்ன"
ஜிம்முல சாமானத்த எடுத்து வெளையாடிட்டு அங்கங்க போட்டுட்டு போயிடறானுங்க. இப்ப வைகாசி வெயிலுக்கு பூமி சூட்டைக் கிளம்ப தூறி வைக்குது. தண்ணி பட்டு சாமான்லாம் துருப்புடிக்குது அதுக்குத்தான் வா போலாம்"னு வீட்ட பூட்டிபுட்டு புல்லட்ட ஒதைச்சது மீரா….
புல்லட் மெயின் ரோட்டுக்கு வரவும் சந்தோசும் செல்வியும் பஸ்ஸ விட்டு இறங்கவும் சரியா இருந்துச்சி. யாரோ எவரோ போல நடந்தார்கள்….,
"ஆத்தா செல்வி"னு மீரா கூப்ட..
"பொண்ணுக்கேட்க எப்ப வரட்டும்"னு கேட்கறியா மீரானு சொன்ன செல்வி சந்தோச பார்க்க அதில் அர்த்தம் இருந்தது….,
" பார்ரா நீ வேணா சந்தோச கட்டிக்கோ பொண்ணு கேட்டு வரன்"னு சொல்ல….
ரெண்டு பேரும் அதிர்ச்சியாக செல்வி விடு விடு போயா மீரானுட்டு நடக்க ஆரம்பிச்சுட்டா…..
"டே சந்தோசு இங்கையே இரு குப்பன் கடை வரை போய்ட்டு வந்திடறன். வேணும்னா மோர் வாங்கி குடி"னு சொன்ன மீரா குப்பன் கடைங்கற ரமேஷ் ஹார்டுவேர் & பெயிண்ட் கடைல நின்னது. இந்த கடைய வைச்சது ரமேசோட அப்பன் குப்பன். அதனால குப்பன் கடைனு ஆகிபோனது.
" லே ரமேசு பச்சைபெயிண்ட் ஒரு அரை லிட்டர் , ஒரு சின்ன மட்டமான பிரசு, துருப்பு எடுக்க உப்பு அட்டை ஒரு அஞ்சு, நாலைஞ்சி ரெண்டு இன்ஞ் ஆணி குடு"னு வாங்கிட்டு பணத்தக் குடுத்துட்டு புல்லட்ட கிளப்பி சந்தோசையும் ஏத்திக்கிட்டு வீட்டுக்கு விட்டார் வண்டிய…..
"லே சந்தோசு சிமெண்ண பாட்டில இருக்கு முன்னால எடுத்துக்கிட்டு வா"னு சொல்ல சந்தோசு எடுத்துட்டு வந்து கருப்பன் கையில் குடுத்தான்!
" சரி லே மொகம் கை கால கழுவிக்கிட்டு துணிய மாத்திக்கிட்டு வெரசா ஜிம்முக்கு வந்துரு சேரு"னு சொல்லிட்டு ஜிம்முக்கு புல்லட்ட விட்டார். ஜிம் வீட்டுக்கு பக்கத்துலயேதான்….
ஜிம்முல 150 கிலோ இரும்பு பிளேட்டுகள் 5, 10, என எடை அளவில் இருந்தது. தம்புல்சுகள் 2, 4, 6 , 8 என இரண்டு ஜோடிகளாக ரெண்டு செட் இருந்தது. இதில்லாம பார் கம்பி, தண்டால் கட்டை, கர்லா கட்டை என இருந்தது….
சந்தோசு வர துருவ உப்பு பேப்பரால துடைக்கற வேலை ஆரம்பிச்சது!
அறிவடி தொடரும்!

No comments:
Post a Comment