மீரா தாத்தா வயது 16 [ஆதன்-னின்]
அறிவடி- 8
நிகழ்காலம்!
துருப்ப தேச்சிக்கிட்டே பேச்சு ஆரம்பிச்சது.
"நாளையோட காலேஜிக்கி கடைசி நாளாலே"
"ஆமா மாமா" என்றான்.
"எதும் பெயில் கியில்னு வராதே"
"ஹஹ அதெல்லாம் வராது! நீதான் பி.எல் படிக்க ஸீட்ட புடிக்கனும்"
"அதெல்லாம் ஈஸியா கிடைச்சிரும்டே உன்னதான் படிப்புல மேலனு இயற்கையும் சாதில கீழனு மனுச பயலுகளுங்களும் வைச்சிருக்கானுங்களே" என்றார் சலிப்புக் கலந்த சந்தோசத்தோட மீரா…
"விடு மாமா படிப்பு போதும் எல்லாம் மாறும். நீயிருக்கப்ப எனக்கென்ன கொற" என்றான் சந்தோசு..,..
மீராவுக்கு பெருமையில, பாசத்துல மீசை துடிச்சது!
ஒரு வழியா துருப்ப தேய்ச்சி முடிச்சி பழைய ப்ரஷ் ஒன்ன மீரா எடுக்க சந்தோசு ஒரு பிரஷ எடுக்க, கருப்பன் பெய்ண்ட்ல சிமெண்ணைய்ய கலந்து லூசாக்கினான். ரெண்டு பேரும் பெயிண்ட் அடிக்க கருப்பன் பெயிண்ட் அடிச்சத ஓரங்கட்டி வைச்சான்.
ஏழு மணி வாக்குல வேலை முடிய ஜிம்முக்குனு பொருள் வைக்கற ரூம் கதவுக்கு வாங்கிட்டு வந்த ஆணியை அடிச்சி ஆடாம நல்ல ஸ்ட்ராங்கா பண்ணினார் மீரா. ஊர்ல திருட்டு பயம் கிடையாது. அதனால பிரச்சினை இல்லை
அப்டி இப்டினு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தவங்க ஒரு குளியல தொட்டியில போட்டுட்டு சோறு வைச்சி, முட்டை பொறிச்சி, கொழம்ப சூடு பண்ணி சாப்பிட உட்கார்ந்தாங்க….
"மாமா நாளைக்கு காலேஜ் கடைசி நாளு"
"அதுக்கு" என்றார்.,....
"அதனால பசங்களாம் சேர்ந்து சினிமாவுக்க போறம் ஹோட்டல்ல சாப்பாடு வீட்டுக்கு வர எட்டு மணி ஆய்டும்"
"நீ சொன்ன மாதிரினா சந்தோசம்லே ஆனா இந்த பீர், பிராந்தி, சிகரெட்டு, பொம்பளைங்க புள்ளைங்கனு இல்லாம இருந்தா சரி. செலவுக்கு எவ்வளவு வேணும்?"
"500" என்றான் சந்தோசு
" யார் அப்டி போனாலும் நான் போவ மாட்டன் மாமா"
"அது தெரியும்"ன சமாளிச்ச மீரா "செலவுக்கு ஆயிரமா தரேன் சந்தோசமா கொண்டாடிட்டு வா"னு சொல்ல கருப்பன் சாப்ட்டு முடிச்சி பாத்திரங்களை கழுவ போக சந்தோசும் கூட போக ஒரு கிங்ஸ் பில்டரை பற்ற வைத்த மீரா அவர் வைச்ச அம்மன் சிலைக்கிட்ட போய் நின்னார்……
"செல்லாயி உன் கனவா நீ சொன்னதுல உன் அண்ணன் பையன படிக்க வைச்சி முன்னேத்தி உடனும்னு, அதுல முக்கா கெணத்த தாண்டிட்டன். ஆத்தா நீ போனப்ப நானும் கூட வந்திருப்பேன். ஆனா வாழறப்பவே பல சத்தியங்களை வாங்கிட்ட உசாரா….
நம்ம பையன் மாதிரி வளத்தி இருக்கேன். அது என்னமோ தெரியல நம்ம புள்ளைங்க முகத்துல, குணத்துல நீ இல்ல. சந்தோசு முகம் குணத்துலதான் நீ இருக்க.
அவனை ஒரு வக்கீலா உருவாக்கி கல்யாணம் ஒன்ன பண்ணி வைச்சி இந்த வீட்ட அவன் பேருல எழுதிக்குடுத்துட்டு அவன் கூடயே தங்கி செத்து போய்ருவன். சரி நீ தூங்கு புள்ள"னு சொன்னபடி கட்டில்ல விழுந்து ஆகாசத்த பாத்த படி தானா சிரிச்சிக்கிட்டார்.
இந்த அம்மன் சிலைக்கு கீழத்தான் செல்லாயியை புதைச்சிருக்கார். அதுக்கும் எதிர்ப்பு இருந்தது. ஆனா காளியாத்தா மாரியாத்தா எல்லாம் வாழ்ந்து செத்து போனவங்களைத்தான் நாம சாமியா கும்பிடறோம் போங்கடானுட்டு புதைச்சி மேல சிலையை வைச்சார்.
ஆனா அம்மன் சிலையை நேரங் கிடைக்கறப்பலாம் செல்லாயி துணிகள் போட்டு அலங்கரிப்பார். கல்யாண நாள் அன்னைக்கு குடிக்காம சிலைக்கு பக்கத்திலிருக்க திண்ணையிலயே யார் கூடவும் பெருசா பேசாம அமைதியா உட்கார்ந்திருப்பார்."
மீரா பேசினதலாம் கேட்ட சந்தோசு நாம நல்ல வக்கீலா உருவாகிக் காட்டறதுதான் அத்தைக்கும் மாமனுக்கும் செய்ற கடமைனு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டவனின் கண்ணுல தண்ணி!
எல்லா வேலையும் முடிய கருப்பன் படுக்க,
செல்விக்கு சாட் பண்ண ஆரம்பிச்சான்.
"நாளைக்கு நாம தனியாத்தான படத்துக்கு போறம்"னு செல்வி கேட்க,
"யோசிப்ப்பம்"னு சந்தோசு அனுப்பினான்…..
இப்படியே சாட்டிங் வளர இறுதியாக குட்நைட் ஸ்வீட் டிரிம்ஸ் கிஸ் ஸ்மைலியென சாட்டிங் முடிந்து உறங்கினார்கள்.
விடியலுக்கு முன்னமே எழுந்து ஜிம்முக்கு போயிருந்தது மீரா….
ஜிம்முக்கு பசங்க ஒரு ஏழுபேர் வராங்க. ஏழு பேரும் வரவும். லைட்டா மீராவும் உடற்பயிற்சி செஞ்சி முடிச்சி பசங்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சது.
"லே ஜிம்ல வெளையாடறது முக்கியமில்ல நல்லதா நல்லா திங்கனும். அப்புறம் தின்னதை ஜிம்ல வெளையாண்டு கரைக்கனும்"
இதான் மீரா வழக்கமா சொல்றது பசங்களுக்கு!
சந்தோசும் ஜிம்முக்கு வந்து சேர்ந்திருத்தான். வார்ம்அப்புக்காக தண்டால் அடிச்சிட்டு பார்கம்பி ஏறி முடித்தான்
"லேய் முடிச்சிட்டியா?! என்றார் சந்தோச மீரா.
"முடிஞ்சது மாமா காலேஜ் கிளம்பனும்"
"சரி காலேஜ் கடைசி நாள் வேற வேணும்னா புல்லட்ட எடுத்துட்டு போயேன்"
"இல்ல வேணாம் மாமா"னு கறாரா மறுத்துட்டான் சந்தோசு!
ஏன்னா லோக்கல்ல செல்வியோட அவனால பைக்ல சுத்த முடியாது அதனால்தான். பசங்களோடு போய் தியேட்டர்ல தனியா செல்வியோட போயிரலாம்னு ஐடியாவுல இருந்தான்…
வீட்ல சந்தோசு தயாரா இருக்க…….
மீரா வந்து குளிக்காமக் கூட புல்லட்ட எடுத்தது
"வாடா சந்தோசு பஸ் ஸ்டாப்ல விடறன் இந்தா காசு"னு ஆயிரம் ரூவாய பாக்கெட்ல வைச்சாரு…. கருப்பனும் ஏற புல்லட் தடதடத்தது.
பஸ் ஸ்டாப்வர சந்தோசு இறங்கிக்கொள்ள செல்வி காத்திருந்தாள்…. பஸ் வர ஏறிக்கொண்டார்கள்.
வழக்கமான டீ கடை நிழல்ல வண்டிய நிறுத்திட்டு "லே மகேசா ஒரு டீ ஒரு மோர்" என்று சொல்லிட்டு பேப்பரை மேய்ந்தார் மீரா….
டீ கடைக்காரன் பொண்டாட்டி சந்திரா எடுத்து வந்த டீ ய கருப்பன் வாங்க மோரை மீரா வாங்கி ஒரே மடக்கில் குடிச்சிட்டு சந்திராக்கிட்ட உடனே கிளாசை கொடுத்தார்……
"லே மகேசு ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவிச்சிருக்காங்க"
"ஓட்டுக்கு ஆயிரம் தேறுமா மீரா"
"அட சின்னப்புத்தி பயலே. நாடு அவனுங்களால உருப்படாமா போச்சா இல்ல உங்களால நாசமா போச்சானே புரியலடே பத்து நாள்ல தேர்தல்டே" என்றார் மீரா….
"வழக்கம் போல பழனிச்சாமி ஐயா வகையறாவுல யாராவதுதான் ஊராட்சி தலைவரா வருவாங்கல மீரா?"
"அதென்னடா அந்த லுச்சா பய பழனிச்சாமிக்கு ஐயா, யோக்கியன் நான் மீராவாடே?! நல்லவனுக்கு காலம் இல்லடே" என்று மீரா பொய்யா சலிச்சிக்க…
"மீராங்கறது உரிமை மீரா" என்றான் மகேசு.
"இப்படியே நெஞ்ச தடவிவிட்டு தப்பிச்சிக்கோங்கடா" என்றார் மீரா..
"ஏன் மீரா பழனிச்சாமி வகையறா பாஸ்கர், வாசு இவங்க மேல உனக்கு எப்பவும் கோவம் ஏன்"
"பின்ன என்னடே சரியான இடதுக்கு லைட் கம்பம் இல்ல, சரியான சாக்கடை, குடிக்கற தண்ணி வசதினு எதுவுமே இல்லை ஆனா குறவன் பட்டியத் தவிர எல்லா இடத்திலயும் ஓரளவாவது இருக்கு. திருட்டு பசங்க. இவனுங்களாலதான் ஊருக்குள்ள சாதி வளருது. இவனுங்க பொழைக்க சாதியை ஊதி ஊதி நெருப்பாக்கறானுவ டே" என்று சலிப்பான கோவத்தில் கத்தாத கொறையா பேசி முடிச்சார் மீரா….
"எதிர்த்து நிக்கறவங்க யாரும் வெய்ட்டா இல்லையே மீரா?"
"இதெல்லாம் பேசி வைச்சி செய்றதுடா. மூனு பேருல ஒருத்தன்தான் ஜெயிப்பான். திருடறதுல பங்கு போட்டுக்குவானுங்க"
"இப்டி வேற இருக்கா?! என்று வாய பொளந்தான் மகேசு. இவன் பொம்மிடியில் இருந்து இங்க பொழைக்க வந்தவன் வேற்று சாதிக்காரன். ஆனா மீராக்கிட்ட கரெக்ட்டா இருப்பான். அவசரத்துக்கு கடன் வாங்குவான். சரியா திருப்பி தருவான். வட்டினு ஒன்னும் கிடையாது.
"எங்கடா போச்சு உம்பொண்டாட்டி? ஓயாம பேசுமே!"
"கொழந்தைக்கு உடம்பு சரியில்ல அதான் உள்ள இருக்குது"
"காசு ஏதாவது வேணுமாடே"
" இல்ல மீரா இருக்கு."
"தேவைப்பட்டா கேளுடே"
"சரி மீரா"
இந்த நேரத்துல குடிச்ச டீ பத்தாம கருப்பன் இன்னொரு டீ சொல்ல மீரா அவன திட்றதா அடிக்கறதானு புரியாம இருந்தாப்ல…..
காலேஜ் பஸ் ஸ்டாப்பில் பஸ்நிற்க எல்லாரும் இறங்க வழக்கம் போல பேச்சை ஆரம்பித்தார்கள்.
"என்ன படத்துக்குடா போலாம்?"
" படமா முக்கியம் உன் கூட இருக்கறதுதான முக்கியம்"
சந்தோசு பேச்சில் செல்வி நெகிழ்ந்திருந்த நேரமும் அந்த காலி வகுப்பறை வரவும் சரியா இருந்தது………
செல்வி கையை இறுகப்பிடித்து சந்தோசு நிறுத்த அவள் மலங்க மலங்க விழித்தாள்.
சட்டென கதவின் மூலைக்கு அவளை இழுத்த சந்தோசு அவள் இதழில் தன் இதழை ஒரு நொடியில் ஒற்றி எடுத்துவிட்டான். அதிர்ச்சியில் உடல் நடுங்க நின்றிருந்தாள் செல்வி. இது மாதிரி ஏற்கனவே முத்த பரிமாற்றம் நடந்திருக்கு. ஆனா இப்படி அவள் பயந்ததில்லை.
இப்ப ஏன் இப்படி என்று அவன் குழப்பத்திலிருக்க, அவள் கண்ணு போன திசையை பார்த்த சந்தோசும் அதிர்ச்சியானான்!
அங்கே அவர்கள் ஊரைச்சேர்ந்த பி.காம் முதலாமாண்டு படிக்கும் சுஜாதா இவர்களை பார்த்தப்படியே நின்றிருந்தாள்!
அறிவடி தொடரும்!...
அறிவடி- 8
நிகழ்காலம்!
துருப்ப தேச்சிக்கிட்டே பேச்சு ஆரம்பிச்சது.
"நாளையோட காலேஜிக்கி கடைசி நாளாலே"
"ஆமா மாமா" என்றான்.
"எதும் பெயில் கியில்னு வராதே"
"ஹஹ அதெல்லாம் வராது! நீதான் பி.எல் படிக்க ஸீட்ட புடிக்கனும்"
"அதெல்லாம் ஈஸியா கிடைச்சிரும்டே உன்னதான் படிப்புல மேலனு இயற்கையும் சாதில கீழனு மனுச பயலுகளுங்களும் வைச்சிருக்கானுங்களே" என்றார் சலிப்புக் கலந்த சந்தோசத்தோட மீரா…
"விடு மாமா படிப்பு போதும் எல்லாம் மாறும். நீயிருக்கப்ப எனக்கென்ன கொற" என்றான் சந்தோசு..,..
மீராவுக்கு பெருமையில, பாசத்துல மீசை துடிச்சது!
ஒரு வழியா துருப்ப தேய்ச்சி முடிச்சி பழைய ப்ரஷ் ஒன்ன மீரா எடுக்க சந்தோசு ஒரு பிரஷ எடுக்க, கருப்பன் பெய்ண்ட்ல சிமெண்ணைய்ய கலந்து லூசாக்கினான். ரெண்டு பேரும் பெயிண்ட் அடிக்க கருப்பன் பெயிண்ட் அடிச்சத ஓரங்கட்டி வைச்சான்.
ஏழு மணி வாக்குல வேலை முடிய ஜிம்முக்குனு பொருள் வைக்கற ரூம் கதவுக்கு வாங்கிட்டு வந்த ஆணியை அடிச்சி ஆடாம நல்ல ஸ்ட்ராங்கா பண்ணினார் மீரா. ஊர்ல திருட்டு பயம் கிடையாது. அதனால பிரச்சினை இல்லை
அப்டி இப்டினு ஏழரை மணிக்கு வீட்டுக்கு வந்தவங்க ஒரு குளியல தொட்டியில போட்டுட்டு சோறு வைச்சி, முட்டை பொறிச்சி, கொழம்ப சூடு பண்ணி சாப்பிட உட்கார்ந்தாங்க….
"மாமா நாளைக்கு காலேஜ் கடைசி நாளு"
"அதுக்கு" என்றார்.,....
"அதனால பசங்களாம் சேர்ந்து சினிமாவுக்க போறம் ஹோட்டல்ல சாப்பாடு வீட்டுக்கு வர எட்டு மணி ஆய்டும்"
"நீ சொன்ன மாதிரினா சந்தோசம்லே ஆனா இந்த பீர், பிராந்தி, சிகரெட்டு, பொம்பளைங்க புள்ளைங்கனு இல்லாம இருந்தா சரி. செலவுக்கு எவ்வளவு வேணும்?"
"500" என்றான் சந்தோசு
" யார் அப்டி போனாலும் நான் போவ மாட்டன் மாமா"
"அது தெரியும்"ன சமாளிச்ச மீரா "செலவுக்கு ஆயிரமா தரேன் சந்தோசமா கொண்டாடிட்டு வா"னு சொல்ல கருப்பன் சாப்ட்டு முடிச்சி பாத்திரங்களை கழுவ போக சந்தோசும் கூட போக ஒரு கிங்ஸ் பில்டரை பற்ற வைத்த மீரா அவர் வைச்ச அம்மன் சிலைக்கிட்ட போய் நின்னார்……
"செல்லாயி உன் கனவா நீ சொன்னதுல உன் அண்ணன் பையன படிக்க வைச்சி முன்னேத்தி உடனும்னு, அதுல முக்கா கெணத்த தாண்டிட்டன். ஆத்தா நீ போனப்ப நானும் கூட வந்திருப்பேன். ஆனா வாழறப்பவே பல சத்தியங்களை வாங்கிட்ட உசாரா….
நம்ம பையன் மாதிரி வளத்தி இருக்கேன். அது என்னமோ தெரியல நம்ம புள்ளைங்க முகத்துல, குணத்துல நீ இல்ல. சந்தோசு முகம் குணத்துலதான் நீ இருக்க.
அவனை ஒரு வக்கீலா உருவாக்கி கல்யாணம் ஒன்ன பண்ணி வைச்சி இந்த வீட்ட அவன் பேருல எழுதிக்குடுத்துட்டு அவன் கூடயே தங்கி செத்து போய்ருவன். சரி நீ தூங்கு புள்ள"னு சொன்னபடி கட்டில்ல விழுந்து ஆகாசத்த பாத்த படி தானா சிரிச்சிக்கிட்டார்.
இந்த அம்மன் சிலைக்கு கீழத்தான் செல்லாயியை புதைச்சிருக்கார். அதுக்கும் எதிர்ப்பு இருந்தது. ஆனா காளியாத்தா மாரியாத்தா எல்லாம் வாழ்ந்து செத்து போனவங்களைத்தான் நாம சாமியா கும்பிடறோம் போங்கடானுட்டு புதைச்சி மேல சிலையை வைச்சார்.
ஆனா அம்மன் சிலையை நேரங் கிடைக்கறப்பலாம் செல்லாயி துணிகள் போட்டு அலங்கரிப்பார். கல்யாண நாள் அன்னைக்கு குடிக்காம சிலைக்கு பக்கத்திலிருக்க திண்ணையிலயே யார் கூடவும் பெருசா பேசாம அமைதியா உட்கார்ந்திருப்பார்."
மீரா பேசினதலாம் கேட்ட சந்தோசு நாம நல்ல வக்கீலா உருவாகிக் காட்டறதுதான் அத்தைக்கும் மாமனுக்கும் செய்ற கடமைனு மனசுக்குள்ளயே சொல்லிக்கிட்டவனின் கண்ணுல தண்ணி!
எல்லா வேலையும் முடிய கருப்பன் படுக்க,
செல்விக்கு சாட் பண்ண ஆரம்பிச்சான்.
"நாளைக்கு நாம தனியாத்தான படத்துக்கு போறம்"னு செல்வி கேட்க,
"யோசிப்ப்பம்"னு சந்தோசு அனுப்பினான்…..
இப்படியே சாட்டிங் வளர இறுதியாக குட்நைட் ஸ்வீட் டிரிம்ஸ் கிஸ் ஸ்மைலியென சாட்டிங் முடிந்து உறங்கினார்கள்.
விடியலுக்கு முன்னமே எழுந்து ஜிம்முக்கு போயிருந்தது மீரா….
ஜிம்முக்கு பசங்க ஒரு ஏழுபேர் வராங்க. ஏழு பேரும் வரவும். லைட்டா மீராவும் உடற்பயிற்சி செஞ்சி முடிச்சி பசங்களுக்கு சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சது.
"லே ஜிம்ல வெளையாடறது முக்கியமில்ல நல்லதா நல்லா திங்கனும். அப்புறம் தின்னதை ஜிம்ல வெளையாண்டு கரைக்கனும்"
இதான் மீரா வழக்கமா சொல்றது பசங்களுக்கு!
சந்தோசும் ஜிம்முக்கு வந்து சேர்ந்திருத்தான். வார்ம்அப்புக்காக தண்டால் அடிச்சிட்டு பார்கம்பி ஏறி முடித்தான்
"லேய் முடிச்சிட்டியா?! என்றார் சந்தோச மீரா.
"முடிஞ்சது மாமா காலேஜ் கிளம்பனும்"
"சரி காலேஜ் கடைசி நாள் வேற வேணும்னா புல்லட்ட எடுத்துட்டு போயேன்"
"இல்ல வேணாம் மாமா"னு கறாரா மறுத்துட்டான் சந்தோசு!
ஏன்னா லோக்கல்ல செல்வியோட அவனால பைக்ல சுத்த முடியாது அதனால்தான். பசங்களோடு போய் தியேட்டர்ல தனியா செல்வியோட போயிரலாம்னு ஐடியாவுல இருந்தான்…
வீட்ல சந்தோசு தயாரா இருக்க…….
மீரா வந்து குளிக்காமக் கூட புல்லட்ட எடுத்தது
"வாடா சந்தோசு பஸ் ஸ்டாப்ல விடறன் இந்தா காசு"னு ஆயிரம் ரூவாய பாக்கெட்ல வைச்சாரு…. கருப்பனும் ஏற புல்லட் தடதடத்தது.
பஸ் ஸ்டாப்வர சந்தோசு இறங்கிக்கொள்ள செல்வி காத்திருந்தாள்…. பஸ் வர ஏறிக்கொண்டார்கள்.
வழக்கமான டீ கடை நிழல்ல வண்டிய நிறுத்திட்டு "லே மகேசா ஒரு டீ ஒரு மோர்" என்று சொல்லிட்டு பேப்பரை மேய்ந்தார் மீரா….
டீ கடைக்காரன் பொண்டாட்டி சந்திரா எடுத்து வந்த டீ ய கருப்பன் வாங்க மோரை மீரா வாங்கி ஒரே மடக்கில் குடிச்சிட்டு சந்திராக்கிட்ட உடனே கிளாசை கொடுத்தார்……
"லே மகேசு ஊராட்சிக்கு மட்டும் தேர்தல் அறிவிச்சிருக்காங்க"
"ஓட்டுக்கு ஆயிரம் தேறுமா மீரா"
"அட சின்னப்புத்தி பயலே. நாடு அவனுங்களால உருப்படாமா போச்சா இல்ல உங்களால நாசமா போச்சானே புரியலடே பத்து நாள்ல தேர்தல்டே" என்றார் மீரா….
"வழக்கம் போல பழனிச்சாமி ஐயா வகையறாவுல யாராவதுதான் ஊராட்சி தலைவரா வருவாங்கல மீரா?"
"அதென்னடா அந்த லுச்சா பய பழனிச்சாமிக்கு ஐயா, யோக்கியன் நான் மீராவாடே?! நல்லவனுக்கு காலம் இல்லடே" என்று மீரா பொய்யா சலிச்சிக்க…
"மீராங்கறது உரிமை மீரா" என்றான் மகேசு.
"இப்படியே நெஞ்ச தடவிவிட்டு தப்பிச்சிக்கோங்கடா" என்றார் மீரா..
"ஏன் மீரா பழனிச்சாமி வகையறா பாஸ்கர், வாசு இவங்க மேல உனக்கு எப்பவும் கோவம் ஏன்"
"பின்ன என்னடே சரியான இடதுக்கு லைட் கம்பம் இல்ல, சரியான சாக்கடை, குடிக்கற தண்ணி வசதினு எதுவுமே இல்லை ஆனா குறவன் பட்டியத் தவிர எல்லா இடத்திலயும் ஓரளவாவது இருக்கு. திருட்டு பசங்க. இவனுங்களாலதான் ஊருக்குள்ள சாதி வளருது. இவனுங்க பொழைக்க சாதியை ஊதி ஊதி நெருப்பாக்கறானுவ டே" என்று சலிப்பான கோவத்தில் கத்தாத கொறையா பேசி முடிச்சார் மீரா….
"எதிர்த்து நிக்கறவங்க யாரும் வெய்ட்டா இல்லையே மீரா?"
"இதெல்லாம் பேசி வைச்சி செய்றதுடா. மூனு பேருல ஒருத்தன்தான் ஜெயிப்பான். திருடறதுல பங்கு போட்டுக்குவானுங்க"
"இப்டி வேற இருக்கா?! என்று வாய பொளந்தான் மகேசு. இவன் பொம்மிடியில் இருந்து இங்க பொழைக்க வந்தவன் வேற்று சாதிக்காரன். ஆனா மீராக்கிட்ட கரெக்ட்டா இருப்பான். அவசரத்துக்கு கடன் வாங்குவான். சரியா திருப்பி தருவான். வட்டினு ஒன்னும் கிடையாது.
"எங்கடா போச்சு உம்பொண்டாட்டி? ஓயாம பேசுமே!"
"கொழந்தைக்கு உடம்பு சரியில்ல அதான் உள்ள இருக்குது"
"காசு ஏதாவது வேணுமாடே"
" இல்ல மீரா இருக்கு."
"தேவைப்பட்டா கேளுடே"
"சரி மீரா"
இந்த நேரத்துல குடிச்ச டீ பத்தாம கருப்பன் இன்னொரு டீ சொல்ல மீரா அவன திட்றதா அடிக்கறதானு புரியாம இருந்தாப்ல…..
காலேஜ் பஸ் ஸ்டாப்பில் பஸ்நிற்க எல்லாரும் இறங்க வழக்கம் போல பேச்சை ஆரம்பித்தார்கள்.
"என்ன படத்துக்குடா போலாம்?"
" படமா முக்கியம் உன் கூட இருக்கறதுதான முக்கியம்"
சந்தோசு பேச்சில் செல்வி நெகிழ்ந்திருந்த நேரமும் அந்த காலி வகுப்பறை வரவும் சரியா இருந்தது………
செல்வி கையை இறுகப்பிடித்து சந்தோசு நிறுத்த அவள் மலங்க மலங்க விழித்தாள்.
சட்டென கதவின் மூலைக்கு அவளை இழுத்த சந்தோசு அவள் இதழில் தன் இதழை ஒரு நொடியில் ஒற்றி எடுத்துவிட்டான். அதிர்ச்சியில் உடல் நடுங்க நின்றிருந்தாள் செல்வி. இது மாதிரி ஏற்கனவே முத்த பரிமாற்றம் நடந்திருக்கு. ஆனா இப்படி அவள் பயந்ததில்லை.
இப்ப ஏன் இப்படி என்று அவன் குழப்பத்திலிருக்க, அவள் கண்ணு போன திசையை பார்த்த சந்தோசும் அதிர்ச்சியானான்!
அங்கே அவர்கள் ஊரைச்சேர்ந்த பி.காம் முதலாமாண்டு படிக்கும் சுஜாதா இவர்களை பார்த்தப்படியே நின்றிருந்தாள்!
அறிவடி தொடரும்!...

No comments:
Post a Comment