anti - piracy

Post Page Advertisement [Top]


மீரா தாத்தா வயசு 16 !(ஆதன்-னின்)
அடாவடி- 04 
                                                                                 

பிளாஷ்பேக்!

திருவிழா நடத்தறுக்காக கூட்டப்பட்டக் கூட்டம் பொன்னுச்சாமி, மீராவால பெரிய உரிமைப் பிரச்சினையா மாறி நிற்க, பொன்னுச்சாமி பேச ஆரம்பிச்சார்….

" என் தங்கச்சி மவன் ராசப்பன் சொன்னதுல எங்களுக்கு சம்மதம், இனிமே முடிவ ஊர் பஞ்சாயத்துதான் சொல்லனும்"

ஊர் பஞ்சாயத்துல முக்கியமான ஆளுங்கள்ல முக்காவாசி பேரு வெளிய இருந்து இங்க வந்தவங்கதான். எந்த முடிவ எடுத்தாலும் அது நட்டமாத்தான் போவும்னு பஞ்சாயத்து இழுக்க ஆரம்பிச்சது…….

" இது ஒன்னும் சரிப்பட்டு வர மாதிரி தெரியல மாமா, நாம நாளைக்கு கூட்டத்த கூட்டி பேசிக்குவோம் நான் இப்ப கிளம்பறேன்"னு மீரா பொன்னுச்சாமிக்கிட்ட சொல்லி வேணும்னே அவசரம் காட்ட……

" அட இரு மருமவனே என்னனு பாத்துட்டு ஜோடியாவே கெளம்பிருவம்"னு பொன்னுச்சாமி சொல்ல, மீரா தரையில உட்கார்ந்தார்.

ஒருவழியா வரப்போற பாதிப்ப குறைச்சிக்கற யோசனையில பஞ்சாயத்து ஆளு முடிவா பேச ஆரம்பிச்சான்……

" ராசப்பனோட பூட்டனுங்க பண்ண "சில" நல்ல காரியங்களுக்காக நாம ராசப்பனை பாக்க வேண்டியிருக்கு".............. டக்குனு இடையில் வந்தார் மீரா…….

" யோவ் அதென்ன சில?! என் பூட்டனுங்க உங்களுக்கு செஞ்சதுதான் இன்னைக்கு உங்க மொத்தமே! அதென்ன நீ எனக்கு பாவம் பார்க்கறது?! ஒழுங்கா வார்த்தைய அளந்து வுட்டனா நாளைக்கு தனிக்கூட்டம் நடக்காது இல்லனா அடக்கி வைச்சதலாம் காட்ட வேண்டியதா இருக்கும்" னு மீரா சீற,

" அட நீ உட்காரப்ப முடிவு பண்ணத வேற யாராவது ஒருத்தர் பேசட்டும்"னு பஞ்சாயத்துல வேற ஒருத்தனை பேச வுட்டாங்க…..

" ஊரோட ராசப்பனும், ராசப்பனோட ஊரும் பொழங்கலாம்,
கோயில் நிர்வாகம் பழைய படியே தொடரும்.
பூர்வீகம், வந்தவங்கனு ஒரே ஊருக்குள்ள, சாதிக்குள்ள பிரிஞ்சா அது மத்த பயலுகளுக்கு கொண்டாட்டமா போயிரும். அவ்வளவுதான்!"

இந்த முடிவு மீராவுக்கு திருப்திதான் ஆனா இவனுங்கள விடக்கூடாதுனு……
" எல்லாம் சரி ஆனா இனி எல்லா திருவிழாவுலயும் எங்க பூட்டன் மூக்கையன் வகையறாவுக்கு தனி பூசை நடக்கும், நடத்துவோம்.

ஏன்னா ஆள் யார்னு ஊரு மறந்து போனதாலதான் இங்க நான் தனியா நிக்கிறன். நாளைக்கு எங்க வகையறாவுல யாருக்கும் இந்த நெலமை வரக்கூடாதுனா இந்த மாதிரி தனி பூசை அது இதுனு தேவ! என்ன மாமா நான் சொல்றது?!

" ரொம்ப சரிதான் மருமவனே, பூட்டன் மூக்கையன் பேர்ல தனி பூசை நடக்கனும்!"

" மாமா இந்த பூசைய நீங்க முன்ன நின்னு நடத்தறது பொருத்தமாவும் சரியாவும் இருக்கும். அடுத்து இத யார் ஏத்துக்கிட்டாலும் ஏக்கலனாலும் பூசை நடக்கும். இது என்ன பெத்தவங்க மேல சத்தியம்"னு பேசி முடிக்க, ஒருவழியா சமாதானமா கூட்டம் முடிஞ்சு மக்க களைய, மீரா பொன்னுச்சாமிய வூட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்துச்சி…..

" ஏ செல்லா இது நம்ம பொன்னுச்சாமி மாமன்"னு ராசப்பன் சொல்ல, செல்லா சந்தோசமா மரியாதையா தலைய ஆட்டி தண்ணி கொண்டுவந்து குடுத்தா…….

" டே மருமவனே என் தங்கச்சி போனாலும் அவள மாதிரியே உனக்கு  ஒருத்தி கிடைச்சுட்டா வுட்றாத"

" எங்க மாமா வுட, முந்தானையில முடிஞ்சிருந்தாலும் பரவாயில்ல, செல்லா மடியில இல்ல பெத்த புள்ளையா வைச்சிருக்கா என்னைய"னு மீரா சொல்ல, டக்குனு கண்ல தண்ணி கரைக்கட்ட அத காட்டிக்காம வூட்டுக்குள்ள போனா செல்லாயி!

மீரா வூட்டு முன்னால பெரிய வாசலோட, வேம்பு, புங்கைனு மரம் நெறஞ்சி அவ்வளவு காத்தோட்டமா வெக்கையிலும் கொஞ்சம் சிலுசிலுனு, எப்பவும் ரெண்டு கட்டிலோட காட்சி இருக்கும்.

கட்டில்ல உட்கார்ந்திருந்த பொன்னுச்சாமிக்கிட்ட ராவு சோறு சாப்ட்டுட்டுதான் போகனும்னு மீரா வெடக்கோழி ஒன்ன புடிக்க, பஞ்சாயத்துல புழங்கலாம்னு தீர்ப்பு கிடைச்சதால இதுவராத வராத ஊர்க்கார கூட்டாளிங்க மூனுபேர் வந்தானுங்க…. சரினு வந்தவங்கள கூப்ட்டு வாசல் கட்டில்ல உட்காரச் சொல்லி, செல்லாய தண்ணிக் குடுக்கச் சொல்லிட்டு, இன்னொரு வெடக் கோழிய சேர்த்தி புடிச்சாரு மீரா…….

" டே வந்த மூனுபேரும் அங்கையே ஒக்காரமா இங்க வாங்க, அப்புடியே கோழிய பொசுக்கி, வெட்டனும்னா ஆளுக்கொரு வாயா சீக்கிரம் சாப்டலாம்"னு மீரா தோஸ்த்துக்கள கூப்பிட மூனு பேரும் குசியா வந்தாங்க….. இத்தன நாள் தள்ளியிருந்தும் மீரா நம்மள கோவிச்சிக்கல, பழைய மாதிரியே பேசறானேங்கறதுதான் மூனு பேர் சந்தோசத்துக்கும் காரணம்!

"ஏன்டா மாப்ள காட்டுல இப்புடி கோழிக்கறியாக்கி, நாட்டுச் சாராயம்னு நாக்குல தீண்டி ஒரு வருசம் இருக்குமுல"னு கருப்பன் மீராக்கிட்ட கேட்க……

" விடுடே விடுடே இன்னைக்கு வூட்ல வைச்சி தீண்டுடிருவோம்"னு மீரா சொல்ல, முத்தான், பாண்டியன், கருப்பனுக்கு குசியோ குசி…..

அப்புடியே கடந்த கால பேச்சோட கோழிய டக் டக்னு சுத்தம் பண்ணி வெட்டி முடிச்சாங்க நாலு பேரும்…… செல்லாயிக்கிட்ட கறிய குடுக்க வூட்டுக்குள்ள போனாரு மீரா……

" செல்லா போனது எல்லாம் நல்லபடியா முடிஞ்சது…… இனிமே ஆடு மாடு மாதிரி இருக்க வேணாம். சந்தோசமா இந்த கறிய ஆக்கு….. ரொம்ப நாள் கழிச்சி வூட்டு வாசல்ல ஊர்க்காரங்க, தோஸ்த்துங்க வந்துருக்காங்க வயிறார போட்டு அனுப்புவம்"

" நீ இனிமே சாராயத்த குடிச்சுப்புட்டு நடுராத்திரியில ஊர்நடுவுல ஒத்தையா நின்னு கத்தமாட்டங்கற சந்தோசம்தான் எனக்கு ,மத்த ஒன்னும் இல்ல. ஏன்னா இங்க யாரு எங்கூட பேசலனாலும் பேசுனாலும் அது எனக்கு பெருசில்ல…. நீ இருக்க, உம்மனசுல நானிருக்கன் அதுபோதும். ஊரு, உலகம்லாம் எனக்கு ஒன்னுமே இல்ல"னு செல்லாயி சொல்ல, மீரா இதயத்துக்குள்ள இருந்த மொத்தக் காதலையும் திரட்டி, செல்லாயி உதட்ட இழுத்து முத்தமொன்ன குடுத்துட்டு வெளிய போனார்…… உண்மையாவே செல்லாயிக்கு சந்தோசமே எப்படிலாம் வெளையாட்டு, பொண்ணுங்கனு சுத்துன மனுசன் இன்னைக்கு தான் மட்டுமேனு இருக்கறதுலதான்!

5 லிட்டர் கேன் ஒன்ன கொண்டாந்து ரெண்டு கட்டிலுக்கும் நடுவுல மீரா வைக்க பொன்னுச்சாமி தவிர மத்தவங்களுக்கு புரிஞ்சது, சுத்தமான நாட்டுச் சாராயத்த குடிக்க போறம்னு! ஏன்னா ஆள கவுத்தாத போதை, அளவில்லாத பசியையும், செரிமானத்தையும் தரது நாட்டுச் சாராயம்! செல்லாயி கூட்டி வைச்ச கோழிக்கறி கொழம்பு வாசம், வாசல்ல 5 பேரு நாக்குல தண்ணி ஊற வைச்சது!

" மாமோய் உன் வாழ்நாள்ல இப்புடி ஒரு நல்ல சாராயத்த குடிச்சிருக்க மாட்ட. இன்னைக்கு குடிச்சி பார்த்து சொல்லு"னு மீரா பெரிய டம்ளார்ல பாதி ஊத்தி குடுக்க, எடுத்து குடிச்ச பொன்னுச்சாமிக்கு நடுமுடி நட்டுக்க ஊறுகாய்ல விரல வைச்சார்…….

அப்புறம் அவங்கவங்க தேவைக்கு ஊத்திக்க, பெரியத் தட்டுல வெந்த கறிய போட்டுக் கொண்டாந்து வைச்ச செல்லாயி அளவா குடிங்க சாப்டாம போயிரக்கூடாதுனு சொல்லி சோறு வைக்க போனா…….

பழைய கதை, குடும்பக் கதை, ஊர்க் கதைனு சாராயத்தோட ஓட ,ஒருவழியா பசி வந்து ஆட்டவும் சாப்பிட தயாராச்சு உழைக்கும் வர்க்கம்!

எல்லாம் பெரிய பெரிய தட்டுங்க, மீரா அம்மா வாங்கி வைச்சது மீரா சாப்டறதுக்கு. வயிறு நெறய நெறய பரிமாறினா செல்லா. சாப்ட்டு முடிச்சி வந்தவங்க கிளம்ப கருப்பன் மட்டும் நின்னான்……

" ஏன்டா மாப்ள பொண்டாட்டி தொறத்தி எதாவது உட்ருச்சா இல்ல மூனுநாளா"னு மீரா லந்து பேச செல்லாயி தலையில குட்டி வைச்சா….

" இல்ல மாப்ள ஒன்னு கேட்கனும், ஆனா கேட்டா திட்டுவியோனு பயமா இருக்கு"

" அட பயப்படாத அதுலாம் பழைய ராசப்பன் இப்ப செல்லாயி ராசப்பன் கேளு கேளு"னு மீரா சொல்ல செல்லாயி பேசலானாள்…..

" அண்ணா எதா இருந்தாலும் சொல்லுங்க அது ஒன்னும் திட்டாது"னு செல்லாயி தைரியம் குடுக்க,

" அதுவந்து மாப்ள தங்கச்சிக்கு ஜாக்கெட்டு எங்க தைக்கற"னு தயங்கி தயங்கி கேட்டு முடிச்சான் கருப்பன். மீராவும் செல்லாயிம் வந்த சிரிப்ப அடக்க முடியாம பொரையேற சிரிச்சாங்க…..

" அட குள்ள பயலே இதுக்காடா இவ்ளோ இழுவை, டவுன்லதான்டா! சரி இதக்கேட்டு என்ன பண்ண போற"

" மாப்ள நீ விதவிதமா துணி, நகை நட்டுனு வாங்கிக் குடுக்கற, புல்லட்ல தங்கச்சிய கூட்டிட்டு போயிடற, அத பாக்கற இவளுங்க வூட்ல போட்டு பாடா படுத்தறாளுங்கடா"

" ஹஹஹஹ கேட்கவே காது குளிருதுடா மாப்ள மேல சொல்லு"

" டே மாப்ள இந்த ஜாக்கெட் பிரச்சினையால வந்த சண்டையால அவ பக்கத்துல படுத்து ஏழெட்டு நாள் ஆவுது. இந்த வாரத்துல தங்கச்சிக்கூட அனுப்பி வைக்கலாம்னுதான் கேட்டன்"

" ஹஹஹ சரிடா மாப்ள அனுப்பி வைப்போம்"னு இன்னமும் சிரிப்ப நிறுத்தாம மீரா சொல்ல கருப்பன் நிம்மதியா கிளம்பி போக அப்படியே வானத்துல நிலாவை பாத்த படி கட்டில்ல மீரா மல்லாற………

" ம்க்கும் வூட்ல ரெண்டு பேரா ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தரு பாத்துக்கிட்டு இருக்கோமே மூனாவதா ஒன்ன கொண்டு வரலாம்னு இல்லாம நிலாவ பாத்துக்கிட்டு"னு செல்லாயி பொய்கோபத்துல பேச, மீரா பொண்டாட்டினா இந்த வாய்கூட இல்லனா எப்புடினு குடிசைக்குள்ள போனது அந்த காதலின் சின்னங்கள்!

வான்நிலா காய, பெண் நிலவொன்று சூரியனைச் சுட்டது முத்தங்களால்!

 Episode 03                                               ---தொடரும்---
                                                                       Episode 05


No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib