Post Page Advertisement [Top]

 

------------பூகம்பத்தைப் பூட்டியப் பூவை (1) (தீபாஸ்)------ 

அத்தியாயம்- 23 & 24

 அங்கு நடந்து கொண்டிருக்கும் அனைத்தையும் லைவாக தனது அறையில் ஓடிக்கொண்டிருந்த டிவியில் பார்த்துக்கொண்டிருந்தான் மிதுனன். அவனின் மனம் இப்பொழுது சந்தியாவின் புறம் சாய்ந்தாலும் தீரனுடன் யாழிசையின் இந்த நெருக்கத்தை அங்கு நடந்த நிகழ்வுகளை டிவியில் பார்த்தவனுக்கு எதிர்ப்பே தெரிவிக்காமல் யாழிசை விரும்பியே அவனை ஏற்றது போல் இருந்ததை அவன் விரும்பவில்லை.

 

ஏனெனில் அங்கு நிலவும் சூழலும் அந்த இடம், ஆயுதம் தாங்கிய வேற்று நாட்டின் மனிதர்கள் சூழ்ந்த, ஒரு பயங்கரவாதிகள் இடம்போலவும் அதன் தலைவன் போன்று இருந்த தீரனுடன் மென்மையான பூப்போன்ற யாழிசையின் திருமணம் நல்லதல்ல என்று தோன்றியது.

 

தீரனின் உண்மையான முகம் அறியாமல் யாழிசை அவனுடன் இணக்கமாக இருக்கிறாள் என்று நினைத்தான். எப்படியாவது வெளியில் அந்த என்கேஜ்மென்ட் நடக்கும் ஹாலுக்கு சென்று அவளை இதில் இருந்து காக்கவேண்டும் என்று வெளியில் செல்ல கதவை திறக்க முயன்றான் ஆனால் அது பூட்டப்பட்டிருந்தது.

 

எனவே கதவை தட்டி திறக்கச்சொல்லி கத்த நினைத்து அதை செயல் படுத்த ஒருமுறை தட்டிவிட்டு அடுத்தஒலி எழுப்புவதற்குள் கிளிக் என்ற சத்தத்துடன் கதவு திறந்தது.

 

கையில் துப்பாக்கி ஏந்திய ஒருவன் அதிரடியாக உள்ளே நுழைந்து அவனின் துப்பாக்கியை மிதுனனின் நெற்றிப்பொட்டில் வைத்து,

 

“இனி ஒருதரம் இதுபோன்று ரகளை செய்ய முயன்றால் சுட்டு தள்ளிவிடுவேன்” என்று மிரட்டி சென்றான்.

 

அவனின் மிரட்டலை மீறுவது புத்திசாலித்தனமில்லை என்று அவனுக்கு புரிந்தது. இங்குள்ளவர்களிடம் ஹீரோயிசம் காண்பித்து தான் நினைத்ததை சாதிக்க நினைப்பது தற்கொலைக்கு சமமானதாக தோன்றியதால் படுக்கையில் அமர்ந்துவிட்டான்.

 

அதன்பின்னும் டிவியில் லைவ் ரிலே ஆகிக்கொண்டிருந்த வெளியில் நடக்கும் நிகழ்ச்சியையும் அங்கு அமர்ந்திருந்தவர்களையும் டிவியில் பார்த்துகொண்டிருந்த மிதுனனுக்கு அவனின் பெரியப்பாவும் ஆசானுமாகிய சத்தியமூர்த்தி அமர்ந்திருப்பதை பார்த்தவன் பரபரப்படைந்தான். இவர் எப்படி இங்கே?! என்ற கேள்வி மற்றும் குழப்பத்தில் ஆழ்ந்தபடி அமர்ந்துகொண்டிருந்தான்.

 

வெளியில் நடந்துக்கொண்டிருக்கும் பார்டியில் ஹீரோவும் ஹீரோயினியுமான தீரனும் யாழிசையும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்.

 

அதனை தொடர்ந்து யாழிசையை கையோடு கூட்டிக்கொண்டு சத்தியமூர்த்தியை அணுகிய தீரன் தன்னை அவரிடம் வானவராயரின் மகன் என்று அறிமுகப்படுத்திகொண்டான். அவன் அவ்வாறு கூறவும் குழப்பத்துடன் அவனை பார்த்த சத்தியமூர்த்தியிடம்எல்லாம் உங்கள் விருப்பபடியே நடக்கும் என்று பூடகமான வார்த்தையை உபயோகித்தான்.

 

அதன் பின் அனைவருக்கும் பருக குளிர்பானம் மற்றும் வொயின் டிரே ஏந்திய பணியாளர்கள் வர ஆரம்பித்ததும் இமாமி பார்ட்டியை கலகலப்பாக்கும் முயற்சியை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தான். மாதவன் வந்திருந்தவர்களை விருந்து ஏற்பாடு செய்திருந்த இடத்திற்கு கூப்பிட்டு கொண்டு போனான்.

 

தீரனோ அங்கு இருந்தவர்களுடன் “ஃப்ரெண்ட்ஸ் என்ஜாய் தெ பார்டி” என்று கூறிவிட்டு யாழிசையின் கரம் பிடித்து சத்தியமூர்த்தியையும் அழைத்துகொண்டு மிதுனன் இருந்த அறைக்குள் நுழைந்தான்.

 

சத்தியமூர்த்தியிடம் நான் வானவராயரின் மகன் என்று தீரன் தன்னை அறிமுகப்படுத்தியதுமே அவனின் தோற்றம் வானவராயரை பெருமளவு ஒத்துபோவதை அவர் ஆராய்ந்தார். ஏனெனில் அவனை பார்த்ததுமே மிகவும் அறிந்த தோற்றமுடன் அவன் இருப்பதாக அவருக்கு தோன்றியது. ‘யாரடா. இது? என்று யோசனையுடன் இருந்தார்.

 

அவனின் உடை மற்றும் ஆங்கில மொழியில் அவன் உரையாடிய விதமும் தன்னிடம் தமிழை ஆங்கிலம்போல் உச்சரித்து பேசிய விதத்தையும் கண்டவரால் வெள்ளை வேஷ்டி சட்டையும் தெளிவான ஆங்கிலக் கலப்பில்லாமல் அழகாக கம்பீரமாக பேசும் வானவராயரின் உருவத்துடன் அவனை ஒப்பிட்டு பார்க்க மறந்துவிட்டவர்,

 

தீரன் தன்னை வானவராயர் மகன் என்று கூறிய பின்பே இருவருக்கும் உள்ள உருவ ஒற்றுமை அவரது கண்களுக்கு பளிச்சென தெரிந்தது. சிறுவயதில் இருந்து தனது உற்ற தோழனான வானவராயரின் வாழ்கையில் நடந்த அனைத்தையும் உடன் இருந்து பார்த்தவர் அவர்.

 

அப்படிப்பட்டவரிடமே தீரன் தன்னை வானவராயரின் மகன் என்று கூறியதும் ஒருநிமிடம் குழம்பி போனவர் ‘அப்படியும் இருக்குமோ?’ என்ற எண்ணம் தோன்றவும் அதை அவனிடம் கேட்டு தெளிவு படுத்துவதில் ஆர்வமானதால், தீரன் அவனுடன் அவரை வாங்க என்று கூப்பிட்டதும் வேகமாக எழுந்து வந்தவர், ஒரு அறையின் கதவை திறந்து நுழைந்ததும் பின்னால் நுழைந்தவர் அங்கு தனது பாசமிகு மிதுனன் இருப்பதை கூட கவனிக்காமல் “உன் அம்மா பேர் என்னப்பா?” என்ற கேள்வியைத்தான் அவனிடம் வைத்தார்.

 

தீரனின் பின் தனது பெரியப்பா சத்தியமூர்த்தி நுழைவதை பார்த்து “அப்பா” என்று மிதுனன் கூறுவதைக் கூட கருத்தில் கொள்ளாமல் அவர் தீரனிடம் உன் அம்மா பெயர் என்ன? என்று கேட்டார்.

 

அவர் அவ்வாறு கேட்டதை பார்த்ததும் யோசனையுடன் சத்தியமூர்த்தி பின்னால் வந்த யாழிசை மிதுனனை அங்கு தலையில் கட்டுடன் கண்ட அதிர்ச்சி கூட சற்று விலகியது.

 

அவர் தீரனிடம் உன் அம்மாவின் பெயர் என்று கேட்கவும் தன்னிலை மறந்து தனக்கு ஏற்கனவே தீரனின் மேல் இருந்த அவனின் பிறப்பின் ரகசியம் அறிய ஆர்வமுடன் அவனின் பதிலையும் அதற்கு சத்தியமூர்த்தியின் ரியாக்சனையும் காணும் ஆர்வமடைந்தாள்.

 

சத்தியமூர்த்தியை சிலநேரங்களில் தனது வானவராயர் ஐயா வீட்டில் யாழிசை பாத்திருந்தாள். அந்த காரணத்தால் அவரின் முன் நடந்த தீரனுக்கும் தனக்குமான இந்த நிச்சயதாரத்தைப் பார்த்தவரும் தன்னை அடையளம் கண்டிருந்தால் தான் வீட்டை விட்டு ஒருவனுடன் வந்துவிட்டேன் என்று அவர் செய்தியை கேள்விபடிருந்தால், ‘பெற்றவரை தவிக்கவிட்டு வந்த பாதகி என்று முடிவெடுத்துவிடுவாரோ! என்று பலவாறு யோசித்துக்கொண்டே வந்தவள், அதனை விட்டு,

 

தீரனிடம் அந்த பெரியவர் அவனின் தாயின் பெயரை கேட்டதும், ‘இவர் எதுக்கு இவனின் அம்மாவின் பெயரை கேட்கிறார்?! அப்போ இவருக்கு அவன் அம்மாமைத் தெரியுமோ! என்று பார்த்தாள்.

 

தீரனும் இவருக்கு என் அம்மாவை தெரிந்திருந்தால் எனக்கும் என் டாட்க்கும் இடையில் நடக்கவிருக்கும் பேச்சுவார்த்தையை இவரின் மூலம் செய்வது எளிதாகிவிடும் என்ற எண்ணத்தில் அவரிடம் “பத்மினி” என்று கூறினான்.

 

அவன் அவ்வாறு கூறியதும் சத்தியமூர்த்தி வருத்தமான குரலில் “இப்போ கூட உன் அம்மாவிற்கு வந்து உன் அப்பாவை சந்திக்கணும்னு தோணலை உன்னைய மட்டும் அனுப்பியிருகிறார்களே!. தனது மனைவி எப்படியும் தன்னை தேடி வந்துவிடுவாள் என்று நம்பிக்கையுடன் இருந்த மனிதரின் எதிர்பார்ப்பை பொய்யாக்கி, செய்யாத தவறுக்கு குற்ற உணர்ச்சியில் இத்தனை வருடம் தவிக்க விட்டுவிட்டாரே உன் அம்மா.

 

அதுவும் வானவராயரின் குழந்தையை வயிற்றில் சுமந்துக்கொண்டு போனதை கூட தெரியாமல், தனது மனைவிக்காகவே புழுவாக துடித்த மனிதர் இப்போ மகனான உன்னையும் உடன் பத்மினி வராததும் தெரிந்தால் என்னமா துடிப்பாரோ?!” என்று கவலையுடன் பேசினார்.

 

“தன் அம்மாவும் அப்பாவும் பிரிந்ததற்குபின் எதுவோ கதை ஒன்று இருக்குது போல என்று நினைத்தவன் அதை ஏதும் அறிந்திராததால் “என் அம்மாவால் இனி எப்போதும் உங்க வானவராயர் ஐயாவை அதுதான் என் அப்பாவை பார்க்கமுடியாது அங்கிள்”

 

ஏன்?’ என்ற கேள்வியை தாங்கிய அவரின் முகத்தை பார்த்தவன், “ஷி இஸ் நாட் அலைவ்” என்று சொல்லும் போது அவனது குரலில் அத்தனை வலி தெரிந்தது.

 

மறுநிமிடமே அது பொய்யோ என யோசிக்கும் அளவு உணர்ச்சிகளை மறைத்துவிட்டான் தீரன். மேலும் அவன் அவரிடம் ஆனால் நான் இங்கு வந்ததுக்கு முக்கிய காரணம் என் மாம் தான் அவங்க என் டாட் வானவராயரை சந்தித்து சில பொருட்களை அவரிடம் ஹேன்ட்டோவர் செய்யச்சொல்லி என்னிடம் கொடுத்தார்கள். மேலும் அவர் என்னை மகன் என்று அவராக ஏற்காமல் நானாக அவரிடம் அந்த உறவை ஏற்படுத்திக்கொள்ள முயலக்கூடாது என்று கூறினார்கள்.

 

ஆனால் சூழ்நிலையோ நான் அவரை தேடிபோய் பார்க்கக்கூட முடியாத வகையில் என்னை நிறுத்திவிட்டது. எனவே என் மாம் ஒப்படைக்கச் சொன்ன பொருட்களை இப்போது உங்களின் மூலம் அவரிடம் கொடுக்க ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்திருக்கு.

 

“அது என்னப்பா சூழ்நிலை? பெத்த அப்பாவைக் கூட பார்க்க முடியாத பொல்லாத சூழ்நிலை? என்று கூறியபடியே மிதுனனின் அருகில் வந்தவர் அவனின் காயத்தை தடவிப்பார்த்தபடி கேட்டார்.

 

“நான் அவரை வந்து பார்த்தால் என்னை இங்கு அனுப்பிய கார்ப்பரேட் கிரிமினல்களின் கொலைப்பார்வை அவர்மீதும் இப்பொழுது இருக்கும் அவரின் குடும்பத்தின் மீதும் விழ வாய்ப்பு ஏற்பட்டுவிடும்”

 

அவன் அவ்வாறு கூறியதும் தனது உயிர் நண்பன் வானவராயரின் மகன் என்று அவ்வளவு நேரம் அவனின் மீது உண்டாகி இருந்த ஒரு பாசம் சட்டென்று மாயமாக மறைந்து, அந்த இடத்தில் அவன் தன் மண்ணுக்கு ஊறுவிளைவிக்கும் எதிரி என்ற வெறுப்பு உண்டானது. அதன் காரணமாக,

 

“ஓகோ! அப்பான்ற பாசத்த காட்டி அந்த சி.என்.ஜி போடும் பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு உன் பூர்வீகம் குடியிருக்கும் பூமியை பொத்தல் போட்டு சுடுகாடாக மாத்துறதுக்கும் உன் அநியாயத்துக்கு ஐயாவ எதிராக இல்லாம பார்த்துக்க நினைக்கிறயா?

 

அவரின் பேச்சு தீரனுக்கு அலுப்பை கொடுத்தது. அவ்வளவு நேரம் தனது அம்மாவின் நினைவில் சற்று நெகிழ்ந்திருந்தவன் சி.என்.ஜி பற்றிய பேச்சை அவர் எடுத்ததுமே அவனின் உச்சிமுதல் உள்ளங்கால்வரை விறைப்பானது.

 

நிகழும் சம்பவங்களை மாற்றி அமைக்க அவன் போடும் திட்டங்களை செயல்படுத்த ஆயத்தமான போர்த் தலைவனாய் விறைத்து நின்றான். அதன் பின் அவனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் சிங்கத்தின் கர்ஜனையாக எதிரில் இருப்பவர்கள் அசரவைக்கும் பாங்கு இருந்தது.

 

“லுக் மிஸ்டர் சத்தியமூர்த்தி நான் இந்த இடத்தை நீங்க சொன்னமாதிரி சுடுகாடாக மாத்தணும்னு நினைத்து செயல்பட ஆரம்பிச்சா அதை யாராலும் தடுக்க முடியாது. ஆனா சி.என்.ஜிக்கு எதிராக நான் நிக்கிறேன். அதை தடுக்க என்னையப்போல மைன்ட் செட் இருக்கிறவுங்களை என்கூட ஜாய்ன் பண்ண வைக்க நினைக்கிறேன்.

 

உங்களால நான் இல்லாம சி.என்.ஜிக்கு எதிரா ஒரு சின்ன ஸ்டேப் கூட வைக்க முடியாது. நீங்கள் நினைப்பதுபோல் இதை அவ்வளவு எளிதாக நிறுத்த முடியாது. என்னுடைய உதவி இல்லாமல் அந்த சி.என்.ஜி ஊன்றும் ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க என்ன தொட்டுக் கூட பார்க்க முடியாது.

 

அதையும் மீறி ஏதாவது அதுக்கு எதிரா பண்ணினா நிறைய மனித உயிர்களை இழப்பீர்கள். அதாவது உங்களை நம்பி உங்களின் பின் திரளும் பெரும் மக்கள் கூட்டத்தினை பிணக்குவியலாக மாற்றிவிடுவார்கள்.

 

அதற்கு யார் துணையாக நிற்பார்கள் தெரியுமா? உங்கள் அரசாங்கமும் அரசியல்வாதிகளின் கைக்கூலியாக செயல்படும் சில காவல்துறை அதிகாரிகளுமே. அவர்கள் மூலமே அந்த அராஜகம் அரங்கேற்றப்படும்.

 

சி.என்.ஜி இந்த ப்ராஜெட்டுக்கு பலிகொடுக்க தேர்ந்தெடுத்துள்ள முதல் உயிர்பலி என்று மிதுனனை கைகாட்டியவன், அவன் இனி வெளியில் நடமாடினால் அடுத்தநிமிடம் அவன் பிணம்தான். நான் இருக்கும் இடம் மட்டுமே இப்போ அவனுக்கு பாதுகாப்பு.

 

அவன் பேசிய தோரணையிலேயே மூவரும் அசந்துவிட்டனர். அனுபவசாலியான சத்தியமூர்த்தியே தனது நண்பன் வானவராயரின் ஆளுமைத்திறன் போன்று பத்துமடங்கு அவனிடம் அதிகமாக உள்ளதை உணர்ந்துகொண்டார்.

 

அவனின் பேச்சு அவன் நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்ட செயல் வீரன் என்ற நிதர்சனத்தை அவருக்கு உணர்த்தியது. இருந்தாலும் அதை வெளிபடுத்தாமல் அவனின் அருகில் நின்ற யாழிசையிடம் படிந்த அவரின் பார்வை,

 

“நீ வானவராயரின் கணக்குபிள்ளையின் மகள் தானே? உன் அப்பாவுக்கும் உன்னை வளர்த்த வானவராயர் ஐயாவுக்கும் நல்ல பேர் வாங்கிக்கொடுத்திட்டமா நீ!”

 

“அங்கிள்” என்று கதறலுடன் தீரனின் பக்கம் திரும்பியவள் “உன்னாலதான் எல்லாம் உன்னாலதான். ஏன் இப்படி பண்ணுனீங்க?”, என்று அவன் சட்டையை பிடித்து கேள்விக்கேட்டாள்.

 

“என்னைய கடத்திக்கிட்டு வந்ததுமில்லாமல், நானே உன் கூடவந்ததுபோல பரப்பிவிட்டு என்னால ஜென்மத்துக்கும் அவங்க முகத்தில் முழிக்க முடியாதபடி ஆக்கிட்டீங்களேஎன்று கதறினாள்.

 

தீரனுக்கு அவளின் கதறல் மனதிற்குள் வருத்தத்தை கொடுத்தாலும், அதை வெளியே காண்பிக்காத வகையில் அவளின் கைகளை தனது சட்டையில் இருந்து பிரித்து அவள் திமிற திமிற தன்னுடன் இழுத்து பிடித்தபடி “ஸ் ரிலாக்ஸ் பேபி” என்று கூறியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.

 

“இதுதான் நீ ஆட்களை கடத்துவது, கஸ்டடியில் எடுத்து மிரட்டுவது நினைத்ததை சாதிக்க எதுவும் செய்யலாம்ன்ற மனசு உனக்கு. ஆனால் என் நண்பன் வானவராயர் நேர்மையானவன். எதையும் நேர்வழியிலேயே சாதிக்க தெரிந்தவன் ஆனால் நீ அப்படிபட்டவன் அல்ல. அதனால உனக்கும் எங்களுக்கும் ஒத்துப்போகாது” என்றார்.

 

“எதையும் நேரில் சந்தித்து எதிர்கொள்ளும் தைரியமிருக்கு. உன்னைய போல் மறைந்திருந்து தாக்க நாங்கள் ஒன்றும் நரியில்ல புலிகள்”

 

“ஹாஹாஹா…” என்று சத்தமாக சிரித்தவன், “யாரு நான் உங்களுக்கு நரியா? தைரியமில்லாதவனா? என் தைரியத்தில் அளவு தெரியுமா? உலகமே பார்த்து பயப்படும் பிஸ்னஸ் உலகின் டெவில் மார்க்ஸ் ரூபன்சிர்க்கே என்னை தொட தைரியமில்லை.

 

அதுவும் அவன் இன்வஸ்ட் செய்த இந்த சி.என்.ஜி ப்ரொஜெக்டின் மொத்த ஸ்பான்சர் அமெளண்ட் எவ்வளவு தெரியுமா? $70.5 பில்லியன் அதில் பாதிக்கும்மேல் மார்க்ஸ் ஸ்பான்சர் செய்தது.

 

உங்களுக்கு ஒரு ரகசியம் நான் சொல்றேன். அந்த பணம் முழுவதும் இப்போ சி.என்.ஜி ப்ராஜெக்ட் அக்கெளண்டில் இருந்து ஹேக் செய்து கொள்ளையடிக்கப்பட்டு என்கையில் உள்ளது.

 

கொள்ளையடித்தது யார் தெரியுமா? மை பேபி யாழிசை அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருகிறார்கள். என் கண்காணிப்பை விட்டு வெளியில் சென்றால் மறுநிமிடம் இவளையும் தூக்கிவிடுவார்கள்.

 

இவள் மட்டுமல்ல, மிதுனனும் அவர்களின் டார்கெட். என்னால் எப்படி இவர்களை காப்பாற்றுவது சாத்தியம் என்று பார்கிறீர்களா? எல்லாம் பணம். என்னிடம் உள்ள நினைத்துப்பார்க்க முடியாத பணமும் என்னிடம் உள்ள அபரிமிதமான மூளைத்திரனுமே சி.என்.ஜியை தடுக்க முடியும்.

 

இந்த பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கும் கனிமவளங்கள் யாரின் கண்களின் படக்கூடாதோ அவர்களின் கண்களில் பட்டுவிட்டது. இத்தனை நாள் நானும் அவர்களின் கை பாவையாகத்தான் இருந்தேன். உலகமெங்கும் ஒரு காலத்தில் இரும்பு, வெள்ளி, தங்கம், தாமிரம் போன்ற உலோகங்கள் நிறைய கிடைத்தன. அதில் முக்கியமானது தோரியம்.

 

தோரியம் என்ற உலோகம் இன்றைய அளவில் மிக அரிதான மற்றும் விலை அதிகமான அதே சமயத்தில் எடைக்குறைவான தனிமம். ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தேசங்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றன.

 

சில அரபு நாடுகளும் இந்தியாவும் கூட இவற்றை வைத்திருப்பதாக உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகைத் தங்களின் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் கார்பரேட்காரர்கள் அவற்றை எல்லாம் மொத்தமாக சுரண்டி விட்டார்கள். கோடிகளில் குவித்து விட்டார்கள். தற்போது குண்டு மணி அளவுக்கு கூட உலகில் எங்கும் இத்தனிமங்கள் இல்லை எனவே, அவற்றை வேறு இடங்களில் தேடும் கட்டாயத்திற்கு வளர்ந்து வரும் நாடுகள் தள்ளப்பட்டது.

 

அவ்வாறு தள்ளப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எண்ணற்ற செயற்கை கோள்களை அனுப்பிக் கொண்டேயிருக்க இதுவும் ஒரு காரணம். இந்த கோள்கள் இந்தியாவின் மண்ணை தொலைவில் இருந்து உற்று நோக்கிய படி தரவுகளை அனுப்பி வருகின்றன. அம்மாவாசை இரவுகளில் வானத்தை உற்று பாருங்கள் இந்த செயற்கை கோள்களில் உள்ள கேமராக்களின் பிளாஷ் வெளிச்சம் மின்னிக் கொண்டே இருப்பதை காணமுடியும்.

 

ஒரு நாள் தமிழ்நாட்டின் மேலே நிறுத்தப்பட்டிருந்த செயற்கை கோளில் இருந்து வந்த செய்திதான் இந்திய ஆராய்ச்சி மையத்தை துள்ளிக் குதிக்க செய்தது. ஆமாம், ஆயிரக்கணக்கான டன் தோரியம் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்த கிடந்த விஷயத்தை அந்த செயற்கை கோள் அறிவித்தது. தலைமைப் பொறுப்பில் இருந்த அந்த விஞ்ஞானியும் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார்.

 

அவர் யார் தெரியுமா! கொஞ்சம் பொறுங்க அவரை இங்கு வரவழைக்கிறேன். அவரை பார்த்தப்பின் நீங்களே அது யார் என்று தெரிந்து கொள்வீர்கள். மீதத்தை அவரே உங்களுக்கு சொல்லட்டும் என்றவன், வயர்லெசில் இமாமியை தொடர்புகொண்டு “நம்ம சையன்டிஸ்டை இங்கே கூட்டிக்கொண்டு வா. கூடவே மகேஷ் மல்கோத்ரா அவர்களையும் அழைத்து வா” என்று ஆங்கிலத்தில் உத்தரவை பிறப்பித்தான்.

 

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்களின் அறைக்குள் இமாமி மற்றும் மகேஷ் மல்கோத்ரா ஆகியோருடன் வந்தவரை கண்டதும் யாழிசை, மிதுனன் மற்றும் சத்தியமூர்த்தி மூவரும் வியப்பின் உச்சிக்கே சென்றனர்.

 

அவர்தான் டாக்டர் தன்வந்திரி, இந்திய சைன்டிஸ்டுகளின் முன்னோடி என்று புகழாரம் சூட்டப்பட்டு தமிழகம் மட்டுமில்லாது இந்திய மாணவர்களுக்கெல்லாம் இவரைபோல் அறிவாளியாக நீங்களும் வரவேண்டும் என்று உதாரணம் காட்டப்பட்டவர்.

 

கடந்த ஆண்டு இந்திய வானியல் ஆராய்ச்சி மையத்தில் தலைமை பொறுப்பில் இருந்த அவருக்கு திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டதென்ற செய்தி காட்டு தீ போல் பரவி அவரின் பைதியக்காரதனமானப் பேச்சு செய்கைகளை மீடியாக்கள் படம் பிடித்து அதற்கு காரணம் ஸ்ட்ரெஸ் என்று ஒருதரப்பினரும். இல்லை அவரின் அறிவுத்திறனை பாப்புலாரிடியை பொறுத்துக் கொள்ளமுடியாத தீய சக்திகளின் விளையாட்டு என்றும் டிவிகளில் டிபேட் நடத்தப்பட்டு அதன்பின் இந்த ஒருவருடமாக அதை வேறு நியூஸ் போட்டு மறக்கடிக்கப்பட்டு இருந்தது.

 

ஆனால் அந்த தன்வந்திரியை சிரித்த சாந்தமான அறிவு சொட்டும் முகத்துடனும் தெளிந்த மனநிலையில் கண்டவர்கள் சைன்டிஸ்ட் தன்வந்திரி என்று ஒரே நேரத்தில் கூறினர்.

 

“எஸ் தன்வந்தரியே தான். இவர் பைத்தியமாக இல்லாமல் நார்மலாக இருக்கிறார்னு பார்க்கிறீர்களா? நான் பைத்தியமாக ஆகலை பைத்தியம்போல நடிச்சேன். ஏன் என்றால்” என்று அன்று நடந்ததை விளக்கிச் சொல்ல ஆரம்பித்தார்.

 

தலைமைப் பொறுப்பில் இருந்த அந்த விஞ்ஞானியாகிய நான் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்கு தகவலாக பகிர்ந்துவிட்டேன் ஆனால், அதே சமயத்தில் பூமிக்கடியில் உள்ள பொக்கிசத்தை எடுத்தபின், ஒரு வேளைச் சோற்றுக்கு, வழியின்றி திரியும் தமிழினத்தின் பட்டினி முகம் அவர் நினைவில் ஒரு கணம் தோன்றி மறைந்தது.

 

உடனே தோரியம் கிடைக்கும் இடங்களை காட்டும் குறியீட்டு வரைபடத்தை அழித்துவிட்டார். இந்திய அரசின் இந்திபேசும் அதிகாரிகள் அந்த மேப்பை கேட்டு விஞ்ஞானியை கொடூர சித்திரவதைகளை செய்தார்கள்.

 

தனது உயிர் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்று கருதிய அவர் பைத்தியம் போல நடிக்க தொடங்கினார்.

 

தமிழ்நாட்டில் எங்கே தோரியம் கிடைக்கும் என்பதை தெளிவாக அறியாத கார்பரேட் கம்பெனிகள் தமிழ்நாடு முழுக்க தேடுதல் வேட்டையை நடத்த முடிவெடுத்தார்கள்.

 

வெளிப்படையாக செய்தால் மாட்டிக்கொள்வோம் என்று நினைத்த அவர்கள் மறைமுகமாக தங்களுடைய தேடுதல் வேட்டையை தொடர்கிறார்கள்.

 

என்னுடைய நடிப்பினை முதலில் அவர்கள் நம்பவில்லை என்னிடம் இருந்து விஷயத்தை கறக்க அவர்கள் என் பைத்தியத்தை தெளியவைக்க டிரீட்மென்ட் கொடுக்கிறேன் என்ற பேரில் என்னை ரணகளமாக்கினர்.

 

என் நாட்டிற்காக என் தமிழ்க்குடியின் நலத்துக்காக நான் அதை பொறுத்துக்கொள்ள முயன்று மூர்ச்சையானேன். அதில் என் கைவிரல்கள் நான்கு துண்டிக்கப்பட்டது என்று அவரின் விரலில்லா இடதுகையை காண்பித்தார்.

 

அதை பார்த்தவர்களுக்கு கண்ணீர் பெருகியது அவர்களின் ரணசித்ரவதையை தாங்காத என் உடல் மூர்ச்சையடைந்தது. நான் இறந்துவிட்டதாக நினைத்தவர்கள் என்னை குப்பை குடோனில் எரிப்பதற்கான குப்பைகளோடு குப்பையாக போட்டுச் சென்றுவிட்டனர்.

 

அவர்களின் பின்னாலேயே வந்த என் அசிஸ்டென்ட் மிஸ் நீரஜா மற்றவர்களுக்குத் தெரியாமல் தனியாக என்னை இழுத்துக்கொண்டு அவளின் காரில் ஏற்றிக்கொண்டுபோய் வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்தார்.

 

ஆனால் அங்கே நான் இறக்காமல் உயிருடன் இருக்கும் விஷயத்தை எப்படியோ தெரிந்துகொண்டு என்னை கொல்லவந்தபோது தன்னுயிரைக் கொடுத்து என்னை நீரஜா காப்பாற்றி தப்பிக்க வைத்தாள்.

 

என்னை அறிந்தவர்கள் எனக்கு உதவி செய்பவர்கள் எல்லோரும் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற என் யூகத்தால் யாரிடமும் என்னால் உதவி கேட்க முடியவில்லை.

 

என் அடையாளங்களை மறைத்து கிழிந்த அழுக்கான உடையில் உண்மையான பைத்தியமாகமாறி கோவில் பஸ்டாண்டுகளில் பிச்சைகாரர்களுடன் பைத்தியகாரனாக சுற்ற ஆரம்பித்தேன்.

 

மீதத்தை நான் சொல்கிறேன் என்று தீரன் ஆரம்பித்தான். நான் இங்கு வருவதற்கு மூன்று மாதத்திற்கு முன் என் அம்மா இறந்தார்கள். அவர்கள் இறக்கும் நாளில் சி.என்.ஜி நிறுவனத்தின் இந்த ப்ராஜெட்டுக்காக பொருளாதார அடியாளாக என்னை இந்தியா போகும்படி கேட்டுக் கொண்டிருந்தான்.

 

நான் இதுவரை நேரடியாக எந்த நாட்டிற்கும் இது போன்று அடியாளாக சென்றதில்லை. நான் பிராங்குடன் தேர்ந்தெடுக்கும் அடியாட்களை அங்கு அனுப்பவும், அங்கு அவர்கள் என்னென்ன செய்யவேண்டும் என்ற திட்டம் போட்டு கைடன்ஸ் பண்ணும் வேலையை மட்டும்தான் செய்வேன்.

 

நான் பிறந்து வளர்ந்த அமெரிக்காவின் வளத்தை மேம்படுத்தவே இதை செய்கிறேன். என் அமெரிக்க நாட்டிற்கு நான் செய்யும் சேவகமாக இரு இதுபோன்ற ப்ராஜெட்டுக்கு நான் பிளான் போட்டுக் கொடுத்துள்ளேன்.

 

அப்போது பொருளாதார அடியாளாக அனுப்பியவன் அந்நாட்டிற்குள் சென்றபோது எடுத்து அனுப்பிய புகைப்படத்துடன் அந்நாட்டின் இயற்கை காட்சி இருந்த அழகையும் செழிப்பையும் நிலைமையையும் வர்ணித்து கூறியிருந்தான்.

 

அவன் பணி நிறைவுற்று அதன் பின் சில வருடங்கள் கழித்து அங்கிருந்து வந்தபோது நான் போட்டுவைத்த புள்ளியில் அவன் அரங்கேற்றியிருந்த கோர தாண்டவத்தால் சிதைக்கப்பட்ட அவலட்சனமான அந்நாட்டின் வர்ணத்தை வீடியோ மற்றும் போட்டோ பதிவுகள் பார்த்து நான் அதிர்ச்சியானேன்.

 

தன்னை போன்ற பொருளாதார அடியாட்களின் ஏகாதிபத்தியத்திற்கு கீழ்க் கொண்டுவரப்படும் அத்தனை நாடுகளின் கதியும் இதுதான் என்பது தெரிந்த எனக்கு நான் செய்துக்கொண்டிருக்கும் பணியின்மேல் அதை செய்ய உதவிய என் மேல் எனக்கே அருவருப்பாக வந்தது.

 

ஆனால் நான் பிடித்திருப்பது சிங்கத்தின் வால் என்பது எனக்கு அப்போது புரிந்தது. நான் அந்த பணம் விழுங்கிகளின் செயலுக்கு மூளையாக இருக்கும் வரைதான் அவர்கள் என்னை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவார்கள்.

 

அவர்களிடம் வேலைக்கு செல்பவர்களால் அவர்களின் வாழ்கையில் கடைசிவரை அதை உதறிக்கொண்டு வெளியேவர முடியாது. அவ்வாறு முயன்றால் அவர்களின் உயிர் அதன் பின் அரை நாள் கூட அவர்களின் உடலில் தங்காது என்ற நிதர்சனம் எனக்கு புரிந்தது.

 

எனவே அவர்களிடம் நான் நட்பாகவே இருப்பதுபோல் நடித்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு ப்ராஜெட்டுக்கும் இடையே குறைந்தது மூன்று ஆண்டுகளில் இருந்து பத்து ஆண்டுகள் கூட இடைவெளி இருக்கும்.

 

இந்த நிலையில் தான் நான் எனக்கென்று தொழில் ஆரம்பித்து இதில் இருந்து எப்படி விலகுவது என்று யோசித்து கொண்டு அவர்களை எதிர்ப்பதற்கு பணத்தையும் என்னை போன்றே கருத்துள்ளவர்களையும் கார்பரேட்டர்களின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்டவர்களில் திறமையுள்ள அவர்களுக்கு எதிராக சிந்தனை கொண்டவர்களை இணைய தளத்தின் மூலம் தேடி என்னோடு ஒரு குழுவை உருவாக்க ஆரம்பித்துக் கொண்டிருந்தேன்.

 

அவ்வாறு நான் செய்துக்கொண்டிருப்பது யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக செயல் படுத்திக்கொண்டிருந்தேன். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு புது ப்ராஜெக்ட் செய்யணும் அதுவும் இந்தியாவில் செய்யனும் அதுவும் நானே பொருளாதார அடியாளாக அந்த நாட்டிற்கே போகணும் என்று பிராங்கால் கட்டாயப்படுத்தப்பட்டேன்.

 

இந்த ப்ராஜெக்ட் பற்றி கேட்டதும் இது மிகப்பெரிய அளவில் இதுவரை நான் செய்திருப்பதை விட யாருமே எதிர்பார்க்கமுடியாத, உலகையே மிரளச்செய்யும் அளவு பணம், கார்பரேட்டர்களின் வசமாக இந்த ப்ராஜெக்ட் இருக்கும் என்று அவன் கூறியதில் இருந்தே தெரிந்துக்கொண்டேன்.

 

அப்போ இதற்கு ஸ்பான்சர் மிக அதிகளவில் கிடைக்கணுமே என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அந்த தொகையை கைப்பற்றினால் மட்டுமே நானும் நான் திரட்டி வைத்திருக்கும் கூட்டமும் கார்பரேட்டர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஆயுதத்தை கையில் எடுக்க பொருளாதார வளம் கிடைக்கும் என்று புரிந்தது.

 

மேலும் இந்தியா வருவதன் மூலம் அவர்களின் கண்பார்ப்வையையிலும் கண்காணிப்பிலிருந்தும் என்னை சற்று மறைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் விலகி இருக்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கும் என்று பிளான் செய்து திட்டம் போட்டு காய் நகர்த்தினேன்.


 

அத்தியாயம்-24

 

தமிழ்நாட்டில் தோரியம் இருப்பதாக அதுவும் பெரும் அளவில் இருப்பதாகவும் என்னிடம் பிராங் கூறி காட்டிய அந்த மேப்பில் பர்டிக்குலராக எங்கெங்கு இருக்கு என்ற டீடெய்ல்ஸ் மிஸ்ஸிங் ஆகியிருப்பதை நான் கவனித்தேன் எனவே அதுபற்றி பிராங்கிடம் கேட்டேன்.

 

அப்பொழுதுதான் பிராங் நம்ம சைண்டிஸ்ட் தன்வந்திரியை பற்றி என்னிடம் கூறினான். அவர்தான் தோரியம் தமிழ்நாட்டில் இருப்பதை சேட்டிலைட்டில் இருந்து வந்த சிக்னல் மூலம் அறிந்துக்கொண்டு இன்போர்ம் செய்தது தெரியவந்தது.

 

அதனைத் தொடர்ந்து அந்த லொக்கேசன் மேப்பை அவரிடம் இருந்து பெற முயன்ற போது அவர் பைத்தியமானது போல் நடந்துக்கொண்டதாக கூறப்பட்டது. எனவே அவரிடம் இருந்து அந்த குறிப்பை பெற மேற்க்கொண்ட சித்ரவதையில் அவர் மூர்ச்சையானார்.

 

எனவே பிராங்கின் ஆட்கள் அவர் செத்ததுபோல் நம்பியதாக காண்பித்து அவரை குப்பைகிடங்கில் போட்டுவிட்டு வந்து அதன் பின் அவரை பாலோ செய்தனர்.

 

அப்போது அவரின் விசுவாசியான அசிஸ்டென்ட் நீரஜா அவரை மீட்டு தன்னிடம் அழைத்து சென்று அவரை நலமாக்கியதுவரை கண்காணித்து அவர் பைத்தியம் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை உறுதி செய்துக்கொண்டு திரும்ப பிராங்கின் ஆட்கள் கஸ்டடிக்கு எடுத்துவர முயன்றபோது அந்த நீரஜா அவளின் உயிரைக் கொடுத்து தன்வந்திரியை தப்பிக்க வைத்துவிட்டதாகவும் அவன் கூறினான்.

 

மேலும் அவரை பிராங்கின் ஆட்கள் தேடிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவரை நான் இந்தியா போவதற்குள் கண்டுபிடித்து பிராங்கின் கஸ்டடிக்கு கொண்டுவந்து அந்த டீடைல்சை அவரிடம் இருந்து கறந்துவிடுவோம் என்று என்னிடம் பிராங் கூறினான்.

 

அவன் அவ்வாறு என்னிடம் கூறியதும் பிராங்கின் ஆட்கள் சைண்டிஸ்ட் தன்வந்திரியை கண்டுபிடித்து கஸ்டடிக்கு எடுப்பதற்குள் நான் முந்திக்கொண்டு நம்மிடம் சைன்டிஸ்டை கொண்டுவர முடிவெடுத்தேன்.

 

அதனை தொடர்ந்து சைண்டிஸ்ட் தன்வந்திரியை தேடும் பிராங்கின் ஆட்களை என் டீம் ஆட்டகளை வைத்து பாலோ செய்தேன்.

 

பிராங்கின் ஆட்கள் தன்வந்திரி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து நெருங்கும் நேரம் என்னுடைய ஆட்கள் பிராங்கின் ஆட்களை முந்திக்கொண்டு நம் இடத்திற்கு கொண்டுவந்து விட்டார்கள். இதோ இப்போ அவரும் என் டீமில் ஒருத்தராக இணைந்திருக்கிறார்.

 

இந்தியாவில் என்னுடைய இச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய நண்பரான நியூடெக் சி.இ.ஓ மகேஷ் மல்கோத்ரா தான் என்று அங்கு இருந்த மகேஷ் மல்கோத்ராவையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தினான் தீரன்.

 

இவர் இல்லாவிட்டால் நான் நினைத்தக் காரியத்தை அவ்வளவு எளிதாக இங்கு செய்திருக்க முடியாது இவரை போன்ற ஒருவரின் நட்பு எனக்கு கிடைத்தது என் அதிர்ஷ்டம் என்று கூறினான் தீரன்.

 

அவன் அவ்வாறு கூறுவதை கேட்ட மகேஷ் மல்கோத்ரா எனக்கும் தீரனின் நட்பு கிடைத்தது பெரும் வரம்தான். நான் உலக அளவில் சிறந்த தொழில் அதிபராக திகழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் தீரனுடன் சேர்ந்து நான் என் நியூடெக் மொமன்ஸ் உருவாக்க சந்தர்பம் அமைந்ததால்தான்.

 

அவரின் செயல்திறமை, பணிசெய்யும் விதம், திட்டமிடும் அவரின் கூர் மூளை இதற்கெல்லாம் நான் பரம விசிறி. இப்படிப்பட்ட ஒருவருக்கு உதவமுடிவது எனது பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என்றார்.

 

மேலும் நான் பெருசா ஒன்றும் அவருக்கு உதவியும் செய்ய வில்லை. அவருக்கு நான் செய்த உதவிக்கெல்லாம் எதிர்பார்க்காத அளவு அவர் லாபம் எனக்கு கிடைக்க செய்திருக்கிறார் என்றார் மல்கோத்ரா.

 

ஆம் இந்தியாவின் கருப்புச் சந்தையின் மூலம் ஆயுதங்களை தீரன் பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மகேஷ் மல்கோத்ரா மூலம்தான்.

 

எனவே சத்தம் வெளியில் தெரியாமல் இங்கே இவ்வளவு பெரிய ராணுவப் பாதுகாப்பு தளம் போன்ற ஒரு பாதுகாப்பு உபகரங்களுடன் தீரனால் உருவாக்க முடிந்தது.

 

இத்தனையும் செய்யவதற்கு பெரும் பணம் தேவைப்பட்டது தீரனுக்கு. அதற்காகவே பிராங்கின் கணக்கில் இருந்த அவனின் இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்துவதற்கான பணத்தை யாழிசை மூலம் தீரன் கையகப் படுத்தியிருந்தான்.

 

அவன் கூறுவதை கேட்டதும் யாழிசை ஒருநிமிடம் பிரமிப்பில் நின்றுவிட்டாள். தன்னை பெரும் சிக்கலில் தீரன் மாட்டிவிட்டிருக்கிறான்தான். அவளுக்கே தெரியாமல் அவளின் அனுமதியில்லாமல் தன்னை ரிஸ்கில் தீரன் தள்ளியிருகிறான்தான். அதற்கெல்லாம் தீரனின் மேல் யாழிசைக்கு பயங்கர கோபம் இன்னும் இருக்கிறது என்றபோதிலும், இப்போது அவன் கூறியதில் இருந்து தன் பூமியை அழிக்கும் நாசவேலைக்கு எதிரான யுத்தத்தில் தன்னை அவன் ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறான் என்பது தெளிவாக புரிந்தது யாழிசைக்கு.

 

ஏற்கனவே அவனின் தோரணை மற்றும் கம்பீரத்தில் கொஞ்சம் மிரண்டும் ஐயாவின் மகன் என்ற புரிதலில் கொஞ்சம் எட்டிப்பார்த்த அன்பும் அவனின் காதல் வார்த்தையில் லேசான அவனின்மேல் சரிந்த மனதை, யாழிசை தனது பூமியை அழிக்க சி.என்.ஜி சார்பில் வந்திருக்கும் அரக்கன் என்ற செய்தியில் அவனை முற்றிலும் வெறுக்கவே முயன்றாள்.

 

ஆனால் அவனை தான் வெறுத்ததற்கான காரணம் இப்போ ஆட்டம் கண்டுவிட்டதை கண்டவள் உள்ளம் அவனின் மேல் காதல் வயப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கொண்டது.

 

என்னதான் அவன் செய்கின்ற காரியத்திற்கு விளக்கம் கொடுத்தாலும், அதை செய்வதற்கு அவன் மேற்க்கொண்டுள்ள நெட் பேங்கிங் கொள்ளை, சட்டத்துக்கு புறம்பானது. ஆயுதமேந்திய அந்நிய தேசத்தவருடனான கூட்டத்தின் பாஸ் என்ற அவனின் தோரணை, களங்கமில்லாத தனது வாழ்வை புயலாக சுழற்றி மிரட்டி அவனின் ஆயுதமாக யாழிசையை யூஸ் செய்துகொண்ட செயல், முதலியன அவளுக்கு அவனின் மேல் அச்சத்தை கொடுத்தது.

 

அவனை சுற்றியும் உள்ள ஆபத்து சூழலும் அவனின் நிலைமையும் அவளை மிகவும் அச்சுறுத்தியது. அவனின் மேல் வெறுப்போடு இருந்தபோது அவர்களுக்கு இடையே நடந்தது அக்ரீமன்ட் என்கேஜ்மென்ட் என்று நினைத்து அவனை தள்ளிவைக்க முடிவெடுத்த அவளால் அவன் மனித வடிவில் வாழும் கார்பரேட் அசுரர்களுக்கு எதிரான வீரமிக்க போராளியாக கண்டதால் அவனின் ஹீரோ இமேஜின் மேல் காதல் உண்டானது.

 

இப்படி பூகம்பமாய் உள்ளவனுடன் தனது வாழ்க்கையை இணைந்துவிட்டதை நினைத்தவளுக்கு தன்னால் அவனின் இந்த அதிரடியான சூழலில் தாக்குபிடிக்க முடியுமா? என்ற ஐயம் எழுந்தது.

 

ஒவ்வொருதடவை அவன் வெளியில் போய்விட்டு வரும்போது உருப்படியாக வந்து சேருவானோ மாட்டானோ என்று பயத்தில் தவித்துக்கொண்டு தன்னால் இருக்கமுடியுமா? என்ற பயம் உண்டானது.

 

அவன் கூறுவதை பார்த்தால் அவனின் வாழ்கையில் தென்றலின் இதம் தீண்டவே போவதில்லை என்ற உண்மை புரிந்த அவளால் அதை ஏற்றுகொள்ளவே இயலவில்லை.

 

காதலுக்கும் காதலனின் இயல்பிற்குமிடையே பூப்போன்ற உள்ளம் கொண்டவள் உழன்று வாடி வதங்கினாள்.

 

“பேபி, யாழி பேபி” என்று தன்னை பிடித்து தீரன் அசைத்தபோதுதான் தன்னிலையடைந்தாள் யாழிசை.

 

“மிஸ்டர் சத்தியமூர்த்தி உன்கிட்ட போய்வருகிறேனு சொல்றார் பார்” என்று தீரன் கூறியதை கேட்டபின்பே தனக்குள்ளேயே குழப்பத்தில் மூழ்கி சுற்றி நடக்கும் விசயங்களை கூட கருத்தில் பதியாமல் தான் இருப்பதை உணர்ந்து மலங்க மலங்க முழித்தால் யாழிசை.

 

சத்தியமூர்த்திக்கு யாழிசையை பார்த்து பாவமாக இருந்தது. அவளை அவர் வானவராயர் வீட்டிற்கு செல்லும் சிலநேரங்களில் பார்த்ததுண்டு ஆழமாக அவளை கவனித்து பார்க்கவில்லை என்றாலும் பிருந்தாவுடன் சிறுபிள்ளையாக தோட்டத்திலும் வீட்டிலும் அவள் சிறுபிள்ளையோடு சிறுபிள்ளையாக விளையாடிக் கொண்டிருந்த பொழுதுகளில்தான் பார்த்திருந்தார்.

 

முயல்குட்டி போன்ற யாழிசைக்கு சிங்கம்போன்ற தீரனுடன் முடிச்சு அமைந்துவிட்டதை நினைத்து இந்தப்புள்ள இப்படிப் போய் மாட்டிகிடுச்சே. என்று தான் அவருக்கு எண்ணத் தோன்றியது.

 

இருந்தாலும் அதை கூறாமல் “பயப்படாம இரும்மா. நான் உன் அப்பாவிடம் வானவராயர் ஐயாவின் மகனுடன்தான் உனக்கு கல்யாணம் ஆகியிருக்கிறது என்றதை சொல்லி ஐயாவோடு உன் அப்பாவையும் கூட்டிக் கொண்டு வந்து உன்னைப் பார்கிறேன். தம்பி சொல்பேச்சு கேட்டு கவனமா நடந்துக்கோ” என்று கூறிய மறுநொடி,

 

“நோ மிஸ்டர் சத்தியமூர்த்தி, இப்போதைக்கு நான் வானவராயர் மகன்ற விஷயம் வானவராயருக்கு தவிர வேற யாருக்கும் தெரிய வேண்டாம். நான் இப்போ என்னை என் டாடியிடம் வெளிபடுத்த நினைப்பதே சி.என்.ஜிக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து செல்வதில் பெரும் பங்கு என் அப்பாவுக்கும் இருப்பதால் தான்.

 

என் ஆலோசனைப்படி அவர் இந்த விஷயத்தை அணுகனும் என்றும் அம்மா அவரிடம் ஒப்படைக்க சொன்ன நகைக்காகவும்தான். என்னை அவரின் மகன் என்று அவரிடம் கூட வெளிபடுத்துறேன். ஆனால் அதை ரகசியமாக வெளியில் தெரியாமல் வச்சிருக்கணும்.

 

சி.என்.ஜி அலை தமிழ்நாட்டில் ஓய்ந்தது என்ற நிச்சயத்திற்கு பிறகு என்னை அவரின் மகன் என்று வெளிபடுத்தவே நினைக்கிறேன் அதுவே அவர்களின் பாதுகாப்பும் கூட”

 

“தீரன், உன் அப்பாவை பற்றி உனக்கு தெரியாது. நீ மகன்ற காரணத்திற்காக நீ சொல்வதற்கெல்லாம் சரின்னு  சொல்வார்னு நினைக்காத. அவர் என்னைக்குமே எதையும் சட்டப்படியும், நேர்வழியிலுமே செய்யணும்னு நினைகிறவர். உன்னை போல இப்படி பதுங்கி பணத்தாலும், ஆயுதத்தாலும் தாக்கும் கொள்கையோடு அவர் ஒத்துபோவார்னு எனக்குத் தோனலை அடுத்து என்ன செய்யலாம்ன்றதை அவரை சந்தித்தபிறகு முடிவு செய்யலாம்.

 

என்று கூறியவர் மிதுனனிடம் திரும்பி, “இப்போ மிஸ்டர் தீரன் சொல்வதுபோல் உனக்கு வெளியில் ஆபத்து நிறைய இருகிறதால இங்கேயே விட்டுட்டுப் போறேன் மிதுனா” என்றார்.

 

மிதுனன் தீரனின் பேச்சையும் அவனின் அதிரடி நடவடிக்கையையும் சைண்டிஸ்ட் தன்வந்திரி கூறியதை பார்த்ததும் அவனின் ஹீரோயிசத்தில் ஈரக்கப்பட்டான்.

 

அவனுக்கு கீழே இணைந்து பணிபுரிய உள்ளத்தில் அவ்வளவு ஆசை பெருகியது. கார்பரேட் போன்ற மிகச்சக்திவாய்ந்த எதிரிகளை வீழ்த்த தீரமிகுந்தன் போன்ற ஒரு ஆளால் தான் முடியும் என்ற நிதர்சனம் அவனுக்கு உரைத்தது.

 

எனவே அவன் பெரியப்பாவை, “ஐயாவிடம் எப்படியாவது அவர் மகனாகிய மிஸ்டர் தீரமிகுந்தனுடன் இணைந்து சி.என்.ஜி எதிர்ப்பு திட்டத்தை செய்ய ஒத்துக்கொள்ள வைங்கப்பா. கண்முன்னால் பார்க்க முடிந்த எதிரிகளுடன் வேண்டுமானால் நம்மால் நேர்மையாக மோதி ஜெயிக்க முடியும்.

 

உலகின் ஓர் மூலையில் இருந்துகொண்டு பணம் மற்றும் தந்திரத்தின் மூலம் இங்குள்ளவர்களையே நமக்கு எதிராக ஏவிவிடும் கார்பரேட்காரர்களை போன்ற தந்திரக்கார நரிகளுடன் மோத அவர்களை போன்றே யோசிக்கும் அவர்களுக்கு நிகரான மிஸ்டர் தீரமிகுந்தனுடன் சேர்ந்து செயல்படுவதே புத்திசாலித்தனமாக இருக்கும்”

 

“உனக்கு இள ரத்தமில்லையா! அதனால்தான் இப்படியெல்லாம் உன்னால் நினைக்க முடியுது. இதுபோன்ற வழிகளில் இறங்கி விட்டால் திரும்ப நார்மல் வாழ்க்கைக்குள் நம்மால் திரும்ப முடியாது. சட்டப்படியும் நேர்மையாகவும் ஒளிவு மறைவில்லாத அணுகுமுறையை கடை பிடிப்பவர்களால் தான் போராட்டம், வாழ்க்கை இரண்டிலும் இயல்பாக ஈடுபட்டு வாழமுடியும். ஐயாவோடு கலந்து பேசிட்டு என்ன செய்யலாம்னு முடிவெடுக்கலாம்.

 

என்றபடி அவனிடம் விடை பெற்று வெளியேறியவரின் பின்னேயே யாழிசையை கைபிடித்து தன்னுடன் அழைத்து வந்தவன் மாதவனிடம் சென்று சத்தியமூர்த்தியை சாப்பிடவைத்து அவரை அவரின் வீட்டில் விட்டுவிடுமாறு கூறிவிட்டு தன்னுடைய அறைக்கு யாழிசையுடன் சென்றான்.

 

என்னவோ இதுவரை அவனின் அருகாமை தராத படபடப்பு இப்பொழுது யாழிசைக்கு எழுந்தது. இன்று காலையில் கூட அவளின் கையோடு கைகோர்ந்து தோளோடு தோளுரசத்தான் இருவரும் பார்டியில் காட்சியளித்தனர்.

 

அப்பொழுது அவளுக்கு இது தேவையா? என்ற குழப்பமும் அவனின் பியான்சியாக சம்மதித்தது சரிதானா? என்ற கேள்வியும் அத்துடன் அவனின் சீண்டலுக்கான கோபமே அவளிடம் நிறைந்திருந்ததால் அவனுடன் இணைந்து நின்றாலும் அவளுக்கு கடுகடுப்பே நிறைந்திருந்தது.

 

ஆனால் தன்னவனின் திறனும், தன்மையும் உணர்ந்தவளுக்கு இப்பொழுது அவனின் அருகாமை படபடப்பை உண்டு பண்ணியது. அவனின் ஹீரோயிசத்தின் மீது அவளுக்கு அளவுகடந்த பிரமிப்பு உண்டானது அப்படிபட்டவனுடன் ஜோடியாக கைகோர்த்து நடப்பது பரவசத்தை கொடுத்தது.

 

அக்ரீமென்ட் கல்யாணத்தை உண்மையாக ஆக்கிவிடுவோமா! என்ற ஆவல் உண்டானது. முதலில் அவனின் அதிரடியில் ஏற்பட்ட பயம் அவனின் நெருக்கத்தில் விலக ஆரம்பித்தது.

 

நிஜ என்கேஜ்மன்டோ! கல்யாணமோ! எதுவென்றாலும், தனது வாழ்கையில் ஒருவனுடன் தன்னை சம்மந்தபடுத்தி ஒரு சபையில் தானும் மறுப்பு கூறாமல் நின்றபின் இனி மற்றொருவனுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியுமா?

 

வேறொருவனுக்கு தன்னுடைய தூய்மையை பரிசோதித்து காண்பிப்பது தன்னால் முடியாது. எனவே என்னுடைய நடிப்பும் இவனே என்னுடைய நிஜமும் இவனே இவன் கூட இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதுதான் தனது வாழ்வென முடிவு பண்ணியிருந்தாள். இந்நிலையில் தன்னவன் நல்லவன், நாட்டிற்கு நலம்புரிய வந்தவன் என்று கேட்டதன்பின் அவனின் மீது தன்னவன் என்ற மயக்கம் உண்டானது. தன் மனம் போகும் பாதையை கண்டவள் திடுக்கிட்டாள்.

 

அச்சோ அச்சோ அக்ரீமென்ட் என்பதற்கு சம்மதித்துவிட்டு இப்போ போய் அவனிடம் நான் மயங்கி ஜொள்ளு விட்டு திரிவதை அவன் கவனித்துவிட்டால் தன்னை பற்றி என்ன நினைப்பான்? ஏற்கனவே ஹாலிவுட் ஹீரோ ரேஞ்சுக்கு இருப்பவன் கிட்ட தமிழ் சீரியல் ஆக்டர் மாதிரி பொருத்தமே இல்லாமல் நான் இருந்துகிட்டு நான் ஜொள்ளு வேற விடுவதை அவன் பார்த்துவிட்டால் அவ்வளவுதான்.

 

கெத்தா இருந்துக்கோ யாழி அவன் உன்னைய கட்டாயத்தில் நிற்கவைத்து கடத்திக் கொண்டுவந்து வச்சு செய்திருக்கிறான். அதனால் நீ அவனின் மேல் கோவமாக இருக்கிற அந்த கோபத்தை பறக்கவிடாமல் பிடிச்சு நிறுத்திகோடீ என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டாள்.

 

அவளை தனது அறைக்குள் கூட்டிகொண்டுவந்தவன் கதவடைத்து, தன்னருகில் நின்றுகொண்டு அறையின் அலங்காரத்தைக் கண்டு கண்களை சாசர்போல் விரிந்த நிலையில் நின்றவளைக் கண்டவன் உதட்டில் புன்னகை விரிந்தது.

 

ஆம் அந்த அறை முழுவதும் ஒருவித ரோஜாவின் வாசம் மிதந்தது. வெள்ளைப்படுக்கையில் இதயவடிவில் சிகப்பு ரோஜா இதழ்களால் அலங்கரிகப்பட்டிருந்தது. கதவிலிருந்து கட்டில் அருகில்வரை கார்பட் விரிப்புபோல் பூக்களால் நடந்துசெல்ல பூப்பாதைபோடப்பட்டிருந்தது.

 

தன்னைமறந்து நின்றவளை கைகளில் தீரன் ஏந்தியவுடனே தன்னிலை அடைந்து “என்ன பண்றீங்க விடுங்க என்னை” என்று துள்ளியவளை சிறுகுழந்தையைபோல் அடக்கி கட்டிலில் விட்டவன், “பேபி ஹனிமூன் காட்டேஜ் செமையா இருக்குள்ள” என்று அவளிடம் வம்புக்கிழுக்க கூறினான்.

 

“என்னது ஹனிமூனா?” என்று அவனை முறைத்தபடி அவள்கேட்டதும், “ஹஹஹா பயந்துட்டீயா? அக்ரீமன்ட் நம்ம ரெண்டுபேருக்கு மட்டுமே தெரியும். மற்ற யாருக்கும் தெரியாது இல்லையா?!

 

அதனால்தான் என் friends இந்த ஏற்பாடு செய்துவிட்டார்கள். ஐ ஆம் சோ டையர்ட் நான் ஷவர் செய்திட்டு வந்துடுறேன் பேபி” என்றவன் அந்த ரூமிற்கு சைடில் இருந்த வழியில் சென்று மறைந்தான்.

 

அவன் அருகில் இருந்தவரை தன்னுடைய படபடப்பை மறைத்துக்கொண்டு இருந்தவள் அவன் விலகிச்சென்றதும் அப்பாடா என்று மூச்சு விட்டாள்.

 

அச்சோ இவனோடு எப்படி ஒரே அறையில் தங்குவது? அவனுக்கு நான் அருகில் இருப்பது எந்த சலனத்தையும் தரலை போல, எனக்குத்தான் அவன் கிட்ட விளையாட்டா நெருங்கினால் கூட என்னவோ மாதிரி இருக்கு. “கெத்த விட்டுட கூடாது யாழி பி ஸ்டாங்” என்று அவளுக்கு அவளே சொல்லியபடி அமர்ந்திருந்தாள்.

 

அப்பொழுது குளித்துவிட்டு வெறும் டவலை மட்டும் கட்டிக்கொண்டு தலையில் ஈரம் வழிய வந்தவனை பார்த்தவள் வேகமாக திரும்பி அமர்ந்து, “அச்சோ! அச்சோ! கருமம், கருமம். இப்படி அரைகுறையாய் வர உங்களுக்கு வெட்கமாய் இல்லையா?

 

அவளின் இத்தகைய பேச்சும் நடவடிக்கையும் சுவாரஸ்யமாக இருந்தது தீரனுக்கு. எனவே “என்னோட பெட்ரூம் நான் எப்படியும் இருப்பேன். உனக்கு பார்க்க ஒருமாதிரி இருந்தா கண்ணமூடிக்கோ உனக்காகவெல்லாம் என்னுடைய ப்ரீடெம்மை குறைத்துக் கொள்ளமுடியாது. வேண்டுமென்றால் பதிலுக்கு பதில் நீயும் என்னை மாதிரி ஃப்ரீ இருந்துக்கோ நான் ஒண்ணும் உன்னையப் போல அச்சோ அச்சோன்னு கண்ணை மூடிட்டு திரும்ப மாட்டேன்பா.

 

அவன் நின்றுக்கொண்டிருந்த கோலம் மறந்து “என்ன சொன்னீங்க. நானு, அதுவும் உங்க முன்னாடி ஃப்ரீ இருந்துக்கிடணுமா? என்னையப் பார்த்து எப்படி அப்படி சொல்லலாம்?”, அவன் சொன்னதை நினைத்து கூச்சம் மற்றும் கோபம் கொண்டு “உங்கள” என்று கோபத்தில் அங்கிருந்த தலையணையை அவனின் மேல் தூக்கி எறிந்தாள்.

 

அவன் ஹேர் டிரையரை கொண்டு ட்ரஸ்சிங் டேபிளின் முன் நின்று தன் தலையை உலர்த்திக் கொண்டிருந்தவனின் கையில் தலையணை பட்டதும் ஹேர்டிரையர் அவனின் மண்டையில் இடித்துக் கொண்டது. அதில் லேசாக வலி எடுத்ததை வேண்டுமென்றே மிகவும் வலித்ததுபோல “ஸ்ஆ” என்ற சத்தத்துடன் அந்த இடத்தை தேய்த்தான்.

 

அவனுக்கு உண்மையாகவே பலமாக இடித்துவிட்டதோ என்ற பதற்றத்தில் வேகமாக அவனின் அருகில் வந்தவள் இடித்த இடத்தில் காயம் எதுவும் வந்துவிட்டதோ என்ற பதட்டத்தில் அவன் தேய்த்துக்கொண்டிருந்த இடத்தை பார்பதற்காக அருகில் வந்து, “அச்சோ அச்சோ ஸாரி ஏங்க பலமா பட்டுடுச்சா?! காயம் ஆகிடுச்சா?!” என்று அவனின் முன் நின்று அவனின் தலையை இழுத்து அவன் தேய்த்துக்கொண்டிருந்த இடத்தை பார்த்தாள்.

 

இதில் இருவரும் மிக நெருங்கியதை யாழிசை கவனிக்க மறந்தாள். ஆனால் இவ்வளவு நேரம் அவளின் அருகாமையால் விளைந்த அவளின் மீதான தாபத்தை கட்டுபடுத்திக் கொண்டிருந்தவனுக்கு தன் முகத்தை இழுத்து யாழிசை முகம் நிமிர்த்தி அவனின் முன் நெற்றியை ஆராய்ந்தவளின் நெருக்கமும் அவளின் சிவந்த இதழ்களும் அவனின் இளமைத் தாபத்தை தூண்டிவிட்டது.

 

முதல் முறை அவளை பார்த்தபோதே முத்தமிட தூண்டிய அவளின் கொவ்வை உதடுகள் அவனை இப்பொழுதும் காந்தமென இழுக்க அன்று கிட்டிய ஏமாற்றம் அதன்பின் காரினில் கிட்டிய அவளின் முதல் முத்தம் யாவும் அவன் நெஞ்சில் விரிந்து அவன் கட்டுப்பாட்டை உடைத்து காயம் எதுவும் இல்லை என்று விலக முயன்ற அவளை விலகவிடாமல் பிடித்து அவளின் உதட்டோடு தனது உதட்டை பதித்தான்.

 

முதலில் அதிர்ந்து பின் அவனிடம் இருந்து விடுபட முயன்ற யாழிசையை அடக்குவதற்காக அவளை அவனுடன் சேர்த்து ஒருகையால் இழுத்து நகரவிடாமல் அனைத்து மறுகையால் அவளின் பின்னங்கழுத்தில் அழுத்தம் கொடுத்து அவளின் இதழுக்கும் தனது இதழுக்கும் அழுத்தம் கொடுத்து முத்தயுத்தம் நடத்தத் துவங்கினான் தீரன்.


                      ----தொடரும்----

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib