இனிக்கும் விஷம் (தீபாஸ்)
அத்தியாயம் 11
வகுலாவுடன் மெரீனா
கடற்கரை சாலையல், வி.ஐ.பி கள் வந்து போகும் பார் வசதியுடன் கூடிய பப்பிற்கு
வந்திருந்தாள் நட்சத்திரா.
வகுலா வேலை
பார்க்கும், புது படத்தின் டான்ஸ் மாஸ்டருக்கு இன்று பிறந்தநாள். அதில்
கலந்துகொள்ள வந்த வகுலா, நட்சத்திராவையும் உடன் அழைத்து வந்திருந்தாள்.
அது வி.ஐ.பி
கள் அதிகம் வந்து போகும் இடம். ஆதலால் மிகவும் ஆடம்பரமாக இருந்தது. வி,ஐ.பி
கஷ்டமர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்க ஆங்காகே பவுன்சர்ஸ் நின்றுக்கொண்டிருந்தார்கள்.
அந்த பப்புக்குள்
அரசியல் பெரிய பதவியில் இருப்பவர்கள், அவர்களின் வாரிசு, சினிமாத் துறையினர்,
வி.ஐ.பி மதிப்புள்ள பிஸ்னெஸ் சர்கில்ஸ் மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இதுபோல ஏதாவது
பார்ட்டி அரேஜ் செய்திருந்தால், பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யும் பெருந்தனக்காரர்கள்
வரவழைக்கும் விருந்தினர்களுக்கு என்ட்ரி பாஸ் குறிப்பிட்ட அளவு மட்டும
அனுமதிக்கப்டுவதுண்டு.
அவ்வாறான
என்ட்ரி பாஸ் இருந்தால் மட்டுமே வகுலாவுடன் நட்சத்திராவையும் அனுமதித்தார்கள், என்ட்ரி பாஸ்
வைத்திருப்பவர்கள் உடன் ஒருவரை மட்டும் அழைத்து வரலாம் என்ற கட்டுப்பாடு
நிலவியதால் வகுலாவால் நட்சத்திராவை உடன் அழைத்து வர முடிந்தது.
அவர்கள்
இருவரும், அந்த பிரமாண்டமான பார்ட்டி ஹாலுக்குள் நுழைந்ததும் இரு கண்கள் அவர்களை
பின் தொடர்ந்தது.
அக்கண்களுக்குச்
சொந்தக்காரன் வண்ணன் தான். வண்ணனுக்கும் நட்சத்திராவுக்கும் இடையில் இருந்த தூரம் அதிகம்
என்றாலும் அவளை அவனால் நன்றாக அடையாளம் கண்டுக்கொள்ள முடிந்தது.
காலையில் அவள்
உடுத்தி இருந்த அதே உடையில் இருந்தவளை அவன் கண்டுக்கொள்ளாமல் இருந்தால் தான்
ஆச்சர்யம்.
தான் கனித்தது
போல உதித்தைத் தேடி பப்புக்கே அவள் வந்துவிட்டதை கண்டவன் தனக்குள் ‘அவளை மிஸ்
பண்ணக் கூடாது’ என்று முணுமுணுத்துக் கொண்டான். அத்தோடு உதித்தைப் அவள் பார்த்துப்
பேசுவதற்குள் மடக்கணும், அவளைப் பற்றிய அத்தனை விஷயத்தையும் தெரிந்துக்கொள்ள
வேண்டும்’ என்றும் நினைத்தான்.
அவளின் மீது
இருந்த கண்ணை விலக்காமல் பார்த்தபடி, தனது மொபைலில் இருந்து உதித்தோடு இருக்கும் ரீட்டாவை
அழைத்தான்.
ரீட்டா
வண்ணனின் வேலையாள், உதித் சென்னைக்கு வந்த அன்றே அவனை பின் தொடர ஆரம்பித்திருந்தான்,
அவன் இந்த பப்புக்கு வருவதை கண்டு ஃபாலோ செய்து வந்தான். உதித்தொடு ரீட்டாவை பழகவிடும்
நோக்குடன் உடன் அழைத்து வந்தான்.
தன்னுடைய
வி.ஐ.பி அடையாளத்தை பயன்படுத்தி அவளோடு உள் நுழைந்தவன் உதித்தை அவளிடம் கைகாட்டிவிட்டு
விலகி நின்று வேடிக்கை பார்த்தான்.
உதித்துக்கு
இங்கு நண்பர்கள் கிடையாது... சென்னைக்கு அவனின் அம்மா இஷானியின் வற்புறுத்தலுக்காக
வந்தவன், பொழுதை போக்க மும்பை நண்பர்களிடம் கேட்டுத் தெரிந்து இங்கு வந்து போக
ஆரம்பித்தான்.
தனியாக
இருக்கும் அவனை அங்கு பிடித்து வைக்க வண்ணன் அனுப்பிய ரீட்டாவோ பேச்சில் கில்லாடி, மெல்லமெல்ல
உதித்துடன் பேச்சுக் கொடுத்து அவனின் தனிமைக்கு ஒரு துணையாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள்.
அதன் பின்பு
உதித்தே கடந்து இரண்டு தடவையாக இங்கு வரும் முன் ரீட்டாவையும் வரச்சொல்லி மொபைலில்
அழைத்து, அவனே பிக்கப் செய்து இங்கு நேரம் செலவிட மது போதையுடன் மங்கையின்
போதைக்காக ரீட்டாவுடன் இணைத்துக்கொண்டான்.
அவள் ஒரு
மாடல் அழகி மட்டும் அல்ல, கால்கேளும் கூட. அதுவும் ஹாய் டெக் கார்ல் கேர்ள்.
வண்ணன் இக்கட்டான நிலையில் அவளுக்கு உதவி இருந்ததால் டிடைக்டிவ் வேலைக்கு அவனுக்கு
தேவையான உதவிகளை சம்பளம் வாங்கிக்கொண்டு செய்து வந்தாள்.
பாட்டிலில்
இருந்த அந்த விலை உயர்ந்த மதுபானத்தை அழகிய கண்ணாடிக் குவளையில் ஊற்றி உதித்துக்குக்
கொடுத்துக்கொண்டிருக்கும் போது வண்ணனிடம் இருந்து அழைப்பு வந்ததால் போ பேச அவனை
விட்டு தள்ளி சில எட்டுக்கள் எடுத்து வைத்தவள் அழைப்பை ஏற்று, “ம்.. சொல்லுங்க
சார்” என்றதும்.
“உதித்தை அங்க
இருந்து ஓரமா கூட்டிட்டுப் போய் உட்காரவை ரீட்டா, ஒரு பொண்ணு அவனைத் தேடி இங்க வந்துருக்கா,
அவளும் அவனும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கக்கூடாது, பேசக்கூடாது” என்றான்.
“ம்... ஓகே
சார், நான் அவரை ஓரமா கூட்டிட்டுப் போய் மறைவாய் உட்கார வச்சிடுறேன்”
எனச்சொல்லிவிட்டு வந்தவள் உதித்தின் முன்பு அமர்ந்து தான் அணிந்திருந்த சட்டையின்
மேல் இரு பட்டன்களை மட்டும் கலட்டி விரட்டு அவனை டெம்ட் பண்ணினாள்.
உதித்துக்கு
மது போதாயுடன் மங்கையின் போதையும் சேர்ந்துக்கொள்ள அவளை தொட்டுப் பார்க்க ஆசைத்
துளிர்த்து. அவனின் ஆசையை மேச்சல் பார்வையில் கண்டுகொண்ட ரீட்டா அங்கிருந்து
கண்களால் தூண்டில் இட்டபடி ஓரமாக சென்றாள். எனவே ரீட்டா இழுத்த இழுவைக்கு அவனும்
சென்றான்.
ஜன நடமாட்டம்
அதிகம் இல்லாத இடத்திற்கு அவனை அழைத்துச் சென்ற ரீட்டா, மற்றவர்களின் பார்வையில்
இருந்து தங்களை மறைத்துக்கொண்டு அவனின் கைகளை தனது மேனியில் அலையவிட அனுமதித்தாள்.
நடப்பது
எதையும் அறியாத நட்சத்திராவோ அங்கு நிலவிய சூழலை கண்டு ‘வகுலா என்னடீ...? டெல்லி பரவால்ல போல... இப்படி
ஜோடி ஜோடியா அங்கங்க குளோசா உட்கார்ந்து இருக்காங்க...!?” என்றதும்,
“இங்க இப்படி
இருக்கிறதெல்லாம் யாருன்னு நெனச்ச...?” என்று ஆங்காங்கே அமர்ந்திருந்த சினிமா
பிரபலங்களையும், அரசியல்வாதிகளின் வாரிசுகளையும் கை நீட்டி சுட்டிக்காட்டாமல்... நேக்காக
கண்களால் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டினாள்.
நட்சத்திராவும்
அவர்களை உற்றுப் பார்த்து வகுலாவின் வார்த்தைகளை உறுதிப் படுத்திகொண்டவள் ஆச்சர்யமாய்
கண்களை அகல விரித்து...
“ம்... ஆமாடி..,
இவங்க இப்படி பாட்டிலும் கையுமா... நெருக்கமா... பப்ளிக்கா இருக்கிறது சோசியல்
மீடியால யாராவது போட்டோ, வீடியோனு எடுத்து அப்லோடு பண்ணிட்டா என்னடீ பண்ணுவாங்க?”
எனக் கேட்டவளின் காதிற்கு அருகில் சென்று ரகசிய குரலில்,
இங்க உள்ள
எந்த இடத்திலும் கேமரா இருக்காது, உள்ளுக்குள் என்ன நடந்தாலும் வெளிய லீக் ஆகாது.
அதோட மொபைலில் யாராவது அடுத்தவங்களை படம் பிடிச்சா அங்கங்க நின்னுக்கிட்டு
இருக்கிற பவுன்சர்ஸ் வந்து, யாரா இருந்தாலும் கேள்வியே இல்லாம மொபைலை
பிடிங்கிடுவாங்க,” என்று அங்கிருக்கும் நிலைமையை எடுத்துச் சொன்னாள்.
அப்பொழுது
பிறந்தநாள் நாயகன் கேக் கட்பண்ண ரெடியாக நட்சத்திராவை கூட்டிக்கொண்டு கூட்டத்தோடு
போய் நின்றாள் வகுலா. அங்கே ஆரவாரமாக பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் ஒலிக்க, சுற்றி
இருந்தவர் உற்சாகக் குரலுக்கு இடையில் அந்த பிரபலமான டான்ஸ் மாஸ்டர் தனது
லவ்வருடன் நின்று கேக் கட் பண்ணிக்கொண்டிருந்த வேளையில்,
“ஹேய் வகுலா...”
என்றபடி அவர்களின் அருகே இளம் தயாரிப்பாளர் ஷியாம் வந்து நின்றான்.
தன்னிடம் வழிய
வந்து அவன் பேசவும் சந்தோசத்தில் அதிர்ந்தாள் வகுலா, “ஹாய்...” என்ற சொல்லுக்கு
மேல் வார்த்தை பேச வராமல் திக்கி திணறி அவரைப் பார்த்தவளிடம்.
“ரிலாக்ஸ்
வகுலா, என்னோட அடுத்த படத்துக்கு செகென்ட் ஹீரோயின் ரோலுக்கு, நீ ஆப்ட்டா இருப்பனு
தோனுச்சு, இந்தா என் விசிட்டிங் கார்ட் இஷ்டம்னா எனக்கு கால் பண்ணு” என்றதும்.
“சார்,
உண்மையாவா சார்...? இது எவ்வளவு பெரிய ஆபர், நான் ரெடிசார்” என்றதும்.
“ஹா... ஹா...
ஹா... என்று சிரித்துவிட்டு, வித் பிளசர்” என்றவன்,
“இவங்க யாரு...? இதுவரை நான் பார்த்தது இல்லையே..?”
என்று நட்சத்திராவை பார்த்துக்கேட்டான்.
“இது என்
ஃப்ரெண்டு நட்சத்திரா.. இவளுக்கும் சினி இன்டஸ்ரிக்குள்ள நுழையணும்னு ஆசை. அதுதான்
கூட கூட்டிகிட்டு சுத்துறேன்” என்றதும்.
“இஸ் இட்,
குட்.” என்றவன், இருவருக்கும் பொதுவாக, “வாங்களேன் அப்படி ஓரமாய் உட்கார்ந்து
பேசலாம்” என்று அழைத்தான்.
“ஸ்யூர்,
என்றபடி வகுலா அவனின் பின்பு நட்சத்திராவையும் இழுத்துக்கொண்டு நடந்தாள். தனக்கு
அவனின் படத்தில் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சி அவளின் துள்ளலான நடையில் தெரிந்தது.
நட்சத்திரா
அந்த சூழலை சமாளிக்க கொஞ்சம் திணறித்தான் போனாள். அவள் அங்கு வந்த காரணம் உதித்
அல்லவா... அவளின் கண்கள் சுற்றும் முற்றும் சுழன்று உதித் அங்கு எங்கும்
தென்படுகிறானா என்று தேடியது. மேலும் அந்த இளம் தயாரிப்பாளரின் பார்வை தன்னை உச்சி
முதல் பாதம் வரை அளவிடுவதை கண்டவளுக்கு ‘இதென்னடா சோதனை’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள்.
அவனின்
பார்வையை தவிர்க்க நினைத்தாள், எனவே அவளின் கண்கள் மறுபடி அந்த ஹாலை சுற்றி வளம்
வந்தது. அப்பொழுது அவளின் பார்வையில் காலையில் தன்னை ஃபாலோ பண்ணிய கருப்பு வண்டிக்காரன்
தட்டுபட்டான்.
“இவன்...
இவன்.. கலையில என்னைய அங்க வச்சு துரத்திப் பிடிக்க வந்தவன் தானே..? என்ற
கேள்வியுடன் மறுபடியும் தனது யூகம் சரிதானா என்று கண்டறிய வண்ணனை பார்த்த இடத்தில்
மறுபடி திரும்பிப் பார்த்தாள், ஆனால் அங்கு அவன் இல்லை. அவன் நின்றிருந்த இடம்
வெற்றிடமாக இருந்தது.
அவளை பயம்
கவ்விக் கொண்டது. வகுலாவின் கையை இறுக்கமாக பிடித்தபடி தன்னை நோக்கி இழுத்து
காதிற்குள் “வகுலா காலையில என்னைய ஒருத்தன் ஃபாலோ பண்ணி வந்ததா சொன்னேனே.. அவனை
இங்கப் பார்த்தேன்” என்றாள்.
“எங்க
டால்,...?” என்றபடி அவளும் கண்களை சுழலவிட்டதும், “நம்மளுக்கு ரைட் சைட்ல மூனாவதா
இருக்கிற டேபிள் கிட்ட நின்னுக்கிட்டு இருந்தான், இப்போ காணோம்” என்று குசு
குசுவென பேசிக்கொண்டே சென்றவர்களை திரும்பிப் பார்த்த அந்த டைரக்டர் ஷியாம்
“என்னாச்சு..?
எதுவோ ரகசியா பேசுறீங்க, யாரைப் பத்தி பேசுறீங்க, என்னைப் பத்தியா...?” என்றதும்.
“இல்ல... இல்ல..
சும்மா அது வேற எங்களுக்குள்ள” என்று சொன்னவள் நட்சத்திராவே தான்.
“ஹப்பாடா
பேசிட்டீங்க என்கிட்ட, நான் கூட உங்களுக்கு பேசவே வராதோனு பயந்துட்டேன்” என்றவன்.
“சொல்லுங்க கேர்ல்ஸ்
என்ன சாப்பிடுறீங்க...? ஏதாவது சிப் பண்ணிட்டே பேசலாம்” என்றபடி வட்ட மேஜையின்
அருகில் கிடந்த இருக்கைகளில் அமர்ந்து அவர்களையும் அமருமாறு சொன்னதும். வகுலா
ஆர்வமாக அமர்ந்தாள்.
நட்சத்திராதான்
ஒரு வகை அவஷ்தையுடனும் அமர்ந்தாள். அவளின் கண்கள் அந்த கருப்பு வண்டிக்காரன்
எங்கிருக்கிறான் என்று அலைபாய்ந்தது.
அப்பொழுது
அவளின் பின் வந்து நின்ற வண்ணன் “ஹலோ ஷியாம்” என்றபடி அந்த இளம் தயாரிப்பாளரை
பார்த்து நட்பாக கை நீட்டினான்.
அவனின் குரல்
கேட்டு அதிர்ந்து திரும்பிய நட்சத்திராவை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு நிமிர்ந்தவன்,
தன்னை நோக்கி ஆர்வமாக நீண்ட ஷியாமின் கரத்தைப் பற்றிக் குலுக்கினான்.,
கடவுளை
பார்த்தது போல பக்தியுடன், “ஹலோ மிஸ்டர் வண்ண முகிலன்” என்ற அந்த டைரக்டரின்
வார்த்தையை உள்வாங்கி அதிர்ந்து நின்றாள் நட்சத்திரா.
அவளின் மீது ஆர்வமாக
இருந்த சியாமின் கவனம் வண்ணனின் பக்கம் திரும்பியது.
அவன் “வண்ண முகில்”
என்று சொன்னதுமே, அப்போ இவன் உதித் அண்ணனா...? அச்சோ மாட்டிக்கிட்டேனா..?’ என்று
அதிர்ந்து விழித்தாள்.
---தொடரும்---
No comments:
Post a Comment