anti - piracy

Post Page Advertisement [Top]

 உதிர்ந்தும் துளிர்த்தேன் உன்னால் (தீபாஸ்)



அத்தியாயம் 10

 துர்க்கா காலையில் கண் விழிக்கும் போதே தன் மீது , பாரத்தை உணர்ந்தாள். ஆதலால் சட்டென தன்னுணர்வு வந்தவளுக்கு ஒரு நிமிடத்தில் தான் இருக்கும் கோலம் மண்டையில் உறைத்து திக்கென்றது.

 அத்துடன் தலைவலி வின் வின்னென தெறிக்கவும் கை கால்களை தன்மேல் போட்டு படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த விக்னேஷை ஒதுக்கிவிட்டு எழுந்து அமர்ந்தவளுக்கு இரவில் அவனுடன் கூடியதற்கான அடையாளங்களை உணர்ந்து ஐயோ என்று ஆனது.

 தான் காதலித்ததே தப்புன்னு சொல்லி ஒதுக்கி வச்சிருக்க தன் வீட்டுல.... இப்பிடி கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பு பண்ணிட்டேனு தெரிஞ்சா என்னை காலத்துக்கும் மொத்தமா அவமானமா நினைச்சு ஒதுக்கிடுவாங்களே...

 இல்ல.. இல்ல.. யாருக்கும் இது தெரியக் கூடாது. ஐயோ... நேத்து பப்ல இருந்து விக்கி கூட நிதானமே இல்லாம வந்துருக்கேன். பப்புக்கு வந்திருந்த கூட வேலை பார்க்கிறவங்களும் பார்த்திருப்பாங்களே... அப்போ இவர் ரூம்ல அப்படி ஒரு நிலையில் வந்து ஒண்ணா தங்குனது எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்குமோ...

 குடிச்சுட்டு நிதானம் இல்லாம செய்யக்கூடாத தப்பை எல்லாம் செஞ்சுட்டு உட்கார்ந்திருகேனே... எனப் புலம்பியவளுக்கு இத்தனைக்கும் காரணம் விக்னேஷ் தான் என்ற கோபம் உண்டானது.

 விக்னேஷும் பக்கத்தில் அசைவு உணர்ந்து விழித்தான் அருகில் அரைகுறையாக போர்த்தி உடல் வனப்பை முழுவதுமாக மறைக்காத கோலத்தில் அமர்ந்திருந்தவளை கண்டு மோகத்துடன், “ஹேய்... அதுக்குள்ள முழிச்சிட்டியா...? இன்னைக்கு ஆபீஸ் லீவ் போட்டுறலாம் தூங்குஎனச்சொல்லிக்கொண்டே அவளின் இடுப்பில் கை கோர்த்து இழுத்துப் படுக்க வைக்க முயன்றான்.

 ஆனால் அவனின் இழுப்புக்கு ஒத்துழைக்காமல் முரண்டு பண்ணி... அவளின் மீதிருந்த அவனின் கைகளை விலக்கியவள் முழுவதுமாக போர்வையைக் கொண்டு தன்னை சுற்றிக்கொண்டாள். முட்டியில் முகம் பதித்து எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தாள்.

 அவளின் மெளனமே நடந்ததை அவள் விரும்பவில்லை. ஆதலால் அவள் வருத்தமும் கோபமும் கொண்டு இருக்கிறாள் என்பதை உணந்தான்.

 விக்னேஷ் மனதில் இவள்ட்ட sorry கேட்டு நடந்ததை தப்புனு ஏத்துக்கிட்டா அதற்கு பிறகு இருவரும் ஒரே வீட்டில் ஒரே படுக்கையில் படுத்து தூங்கி எழும் வாய்ப்பு நழுவி விடும்என்பதை முன்பே யோசித்து வைத்திருந்ததான். ஆதலால் அவள் தனது கையை ஒதுக்கி விட்டதும் கோபமாக

 ஹேய்.. இப்போ என்ன ஆச்சுன்னு இப்படி உட்கார்ந்து இருக்க...? நமக்குள்ள நடந்ததை அசிங்கமா நீ நினைக்கிறயா...? அப்போ நீ என்னை உன் ஆளா நினைக்கலையா...?” என்றான்.

 அவன் அவ்வாறு கேட்டதும் பதறிவிட்டாள் என்ன விக்கி இப்படி பேசுறீங்க...? யாரோ ஒருத்தரா நினைச்சிருந்தா இந்நேரம் இப்படி ஆனதுக்கு செத்தே போயிருப்பேன்.

 என் வீட்டில மாமாகூட கல்யாண ஏற்பாடு பண்ணியதும் உங்களுக்காக சண்டை போட்டு வந்துருக்கேன்...

 அதுக்காக கல்யாணத்துக்கு முன்னாடி இப்படி நாம இருந்தது தப்பு தானே...? எல்லாத்துக்கு காரணம் நீங்கதான்என்று பதட்டத்துடன் பேச ஆரம்பித்தவள் அவன்மீது குற்றம் சாட்டி முடித்தாள்.

 அவளை சமாதானப் படுத்தும் நோக்கத்துடன் சரசத்துடன் என்னால மட்டும்தான் உன்கிட்ட தப்புப் பண்ண முடியும். ஆனா அது ஒன்னும் உனக்கு பிடிக்காத தப்பு போல தெரியலையே பேப்... நீயும் எனக்கு நல்லாவே கம்பெனி கொடுத்த தெரியுமா...?”என்றான்.

 சீ... போங்க விக்கி. நான் நிதானத்துல இருந்தா கட்டாயம் இப்படி எல்லாம் நடக்க அலோவ் பண்ணி இருக்க மாட்டேன்....

 ஒரு நாள் மட்டும்னு சொல்லி என்னை குடிக்க வச்சதாலத்தான் என்னை மறந்து இப்படி ஆகிடுச்சேனு எனக்கு கில்டியா இருக்கு...

 இப்படி நடந்துக்கு உங்களுக்கு கொஞ்சம் உறுத்தலா இல்லையா...? என்னால நாம இப்படி இருந்ததை டைஜிஸ்ட் பண்ணவே முடியலை..என்றாள் 

இங்கபாரு துர்க்கா இதுல வருத்தப்பட என்ன இருக்கு... என்னதான் குடிச்சு இருந்தாலும் இந்நேரம் என் இடத்தில் வேற ஒருத்தன் இருந்திருந்தா அத்தனை போதையிலும் நீ அவனை அவாய்ட் தான் பண்ணி இருப்ப....

நாம ரெண்டுபோரும் லவ்வர்ஸ் அதனால நமக்குள்ள இதெல்லாம் சகஜம்தான். கல்யாணம்றது இந்த உலகத்துக்காகத்தான்.

தாலி கட்டினாலும் கட்டாட்டாலும் நீ தான் என்னுடைய வொய்ப் அதனால எனக்கு இது தப்பாத் தெரியலைஎன்றான்.

அவன் அவ்வாறு பேசவும் தன்னை கைவிட்டுவிட மாட்டான். என் மேல் உள்ள காதலில் நான் அவளுக்கானவள் என்ற உரிமையில் மொத்தமா எடுத்துக்கிட்டான்.

ஆனா இனிமே இதை கல்யாணம் ஆகும்வரை தொடர விடக் கூடாது. அதேபோல இனி கல்யாணத்தை தள்ளிப் போடவும் கூடாது. வீட்டில் சம்மதம் வாங்கித்தான் பிறகு எல்லாம் என்ற ஸ்டேஜை கடந்துட்டோம்என்று முடிவெடுத்தவள். 

விக்கி உங்களால எவ்வளவு சீக்கிரம் நம்ம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணா முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஏற்பாடு பண்ணுங்க..என்றாள். 

அவள் சொன்னதும் மனதுக்குள் குதூகலம் அடைந்தான். இருந்தாலும் எனக்கு உடனே கல்யாணம் செய்ய ஆசைதான் ஆனால் நீதான் எங்க வீட்டுலயும் உங்க வீட்டுலயும் சம்மதம் வாங்கினாத்தான் கல்யாணம் பண்ணனும்னு சொல்றியே...என்றான். 

இனிமேல் சம்மதம் வாங்கி புதுசாவா நாம வாழ்கையை தொடங்கப் போறோம்...? சம்மதிக்கிறதுக்குள்ளயே நீங்க என்கிட்ட மனைவியாய் உரிமை எடுத்துகிட்டீக்களே...என்றாள். 

அவள் அவ்வாறு சொன்னதும் உல்லாசமாய் சிரிப்பை உதிர்த்தவன் குறும்புடன் அவளை பின்னால் இருந்து அணைத்துக்கொண்டு, “வாடி என் பொண்டாட்டி இப்போ இருந்தே கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ண ஆரம்பிக்கிறேன். ஆனா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு துர்க்காஎன்றான்.

கண்டிஷன..? என்ன பண்ணனும்...?” என்று யோசனையுடன் கேட்டவளிடம் 

இன்னும் ஒரு மாசத்தில் நமக்கு கல்யாணம் அதுக்கு வேண்டிய ஏற்பாட்டை எல்லாம் பண்ண எனக்கு டைம் வேணும். அதுக்கு நாம ரெண்டுபேரும் இப்போ இருந்து ஒரே வீட்டில் தங்கணும். இனி நீ தனியா ஹாஸ்டலிலும் நான் இந்த வீட்டிலும் இருக்க எனக்கு இஷ்ட்டம் இல்ல... நாம ரெண்டுபேரும் சேர்ந்தே நம்ம மேரேஜுக்கு எல்லாம் ஏற்பாடு செய்யலாம். ஓகே வா..?” என்றான். 

அவன் ஒரு கண்டிஷன் என்று சொன்னதுமே மனதுக்குள் காரணமே இல்லாமல் ஒரு படபடப்பு அவளுக்கு உண்டானது. அவன் கூடவே தங்கி இருவரும் சேர்ந்து கல்யாண ஏற்பாட்டை செய்வோம் எனச் சொன்னதும் ஆசுவாசம் அடைந்தாள். 

கல்யாணத்துக்கு முன்னாடி கூட தங்கமாட்டேன் இதுதப்பு என்று எதுவும் பேசி வாக்குவாதம் வந்து கல்யாணத்துக்கு முன்பு மனஸ்தாபம் வந்து பிரிஞ்சிட்ட...? முன்னாடி போல என்றால் போடானு போயிடலாம். ஆனா இப்படி எல்லாம் நடந்ததுக்குப் பிறகு அப்படி விலகிப் போகுறது ஈசி கிடையாதுஎன்று நினைத்தவள். 

ம்...ஓகேஎன்று அரைகுறை மனதுடன் தலையை ஆட்டினாள்.

 *****

அழகு மலர் கல்லூரி வளாகத்துள் காலேஜ் பஸ்ஸில் வந்து இறங்கினாள். முன்னடியில் இருக்கும் ஆபீஸ் அறையின் முன் வரிசையாக நான்கு விலை உயர்ந்த கார்கள் நின்றுகொண்டிருந்தது.

கல்லூரி வளாகமே கொஞ்சம்பரபரப்பாக இருந்தது. உடன் பஸ்ஸில் இருந்து இறங்கிய தேன்மொழியிடம் யார் டி வந்திருக்காங்க...? அபீஸ் ரூமே ஒரே பரபரப்பா இருக்குது..?” என்றாள். 

ஏய் அந்தக் காரைப் பார்த்தாலே தெரியலையா? நம்ம காலேஜ் சேர்மேன் வந்திருக்காருஎன்றாள்

அவர் தான் அப்போ அப்ப வருவாரே.. ஆனா அதை தவிர இன்னும் மூணு கார் நிக்குது பாரு. யாரோ வி..பி வந்துருக்காங்க போல" 

அப்பொழுது ஆபீஸ் உள்ளிருந்து பரபரப்பாக வந்த அவர்களின் ராஜி மிஸ் அழகு மலர், தேன்மொழி ரெண்டு பெரும் கிலாஸ் ரூமில் பேக்கை வச்சிட்டு கூட இன்னும் ரெண்டு ஸ்டூடென்சை கூட்டிட்டு வாங்க, நம்ம லாபில மீட்டிங் அரேஜ் பண்ணணும்என்றதும். 

ஓகே மிஸ், யாரு மிஸ் வந்துருக்காங்க..?” 

நம்ம காலேஜ் சேர்மன் மகன் பூபதி ராஜா வந்துருக்கார். அவர் தான் இனி காலேஜ் இன்சார்ஜ் எடுத்துக்கப் போறாருன்னு பேச்சு அடிபடுது. அதை இன்பார்ம் பண்ணத்தான் இந்த மீட்டிங் ஏற்பாடு நடக்குதுன்னு நினைக்கிறேன்என்று லோ... வாய்சில் அவர்களிடம் சொன்னாள். 

... ஓகே மிஸ் இதோ வந்துருறோம்...என்ற அழகி தேன்மொழியை இழுத்துக்கொண்டு நகர முற்பட்டாள். அவளோ ஆர்வமுடன் அவர் லண்டன்ல இருக்கிறதா தானே சொன்னாங்க மிஸ்என்றதும். 

யேய் அதிகப் பிரசங்கி, ராஜிமிஸ் நம்மகிட்ட பிரண்ட்லியா இருக்காங்கன்றதுக்காக ஓவரா அட்வான்டேஜ் எடுத்துக்காதஎன்று அதட்டினாள். 

ஆமா... அழகி இவளுக்கு வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சு...என்றார்.

ஐயோ... மிஸ் ஒரு ஆர்வத்தில் கேட்டுட்டேன்என்று அசட்டு சிரிப்புடன் சொன்னாள் தேன்மொழி. 

இங்க பாருங்க பிள்ளைகளா ஏற்கனவே ..டி நளாயினி, உங்களுக்கு நான் ரொம்ப இடம்கொடுக்கிறதா சொல்லிகிட்டு இருக்காங்க. நீங்க நல்லா படிக்கிற பிள்ளைங்க அதனால சமாளிக்க முடியுது. இருந்தாலும் தேவையில்லாம மேலிடத்து விஷயம் பத்தி நாம பேசுறோம்னு மாட்டி விட்டுட்டா நீங்களாவது ஸ்டூட்டேன்ஸ்னு விட்டுருவாங்க. என் பாடுதான் திண்டாட்டம்என்றாள். 

ஸாரி மிஸ், இவள் அப்படித்தான். ஆனா நீங்க எங்களுக்கு லெச்சரர் மட்டும் இல்லாம, ஃப்ரெண்ட்ஸ் பீல் கொடுக்கிறதால இந்த லூசு கொஞ்சம் ஓவரா போயிட்டா... ஆனா உங்களுக்கு பிரச்சனை உண்டாகுறது போல நாங்க வெளியில் எந்த பேச்சும் வச்சுக்க மாட்டோம். எங்க ராஜி மிஸ்க்கு தலைகுனிவு வருறமாதிரி நடக்க மாட்டோம். பிராமிஸ் மிஸ்என்றாள் அழகி. 

சரி.. சரி.. பேசிக்கிட்டே நிக்காம வேகமா போய் ரெண்டுபேரை கூட கூட்டிட்டு வாங்கஎன்று அதிகபடியாக அவர்களுடன் பேசுவதை யாரும் கவனித்துவிடுவார்களோ என்ற படபடப்பில் இருவரையும் அவசரப்படுத்திவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிட்டாள். 

வகுப்பறையை நோக்கி வேகமாக நடந்துகொண்டிருக்கும் போது தேன்மொழியோ ஆர்வத்தை அடக்க முடியாமல், 

ஏய் நம்ம காலேஜ் சேர்மேன் மகனுக்கு இன்னும் கல்யாணம் ஆகலை. பார்க்க ரொம்ப ஸ்மார்ட்டா அழகா இருப்பாருன்னு கேள்விப்பட்டிருக்கேன். அவர் பொறுப்பு ஏடுத்தா அடிக்கடி காலேஜ் வருவாருல்ல... நல்லா சைட் அடிக்கலாம்லஎன்றாள். 

ஏய், சி அடங்குடீ, அவரே பாரின்ல இருந்து வருறாரு ஒரே இங்கிலீஷ்ல பேசி கடுப்பாக்கப் போறார் பாருஎன்றாள் அழகி. 

ம்... ஆமாடி. நம்ம கிளாசில் இருக்கிற மேகலாவைத்தான் அப்போ முன்னாடி நிறுத்துவாங்க. அவள் ஏற்கனவே அலப்பறை புடிச்சவ, நம்ம புது யங் சேர்மேன் கிட்டக்க நின்னு பார்த்து பேசி சைட் அடிக்க அவளுக்குத்தான் லக்கு இருக்குது...என்றாள் 

வேணும்னா நீயும் இங்கிலீஸ்ல ஸ்பீச் கொடுத்து அவரை கிட்ட நின்னு சைட் அடி. எதுக்குத் தேவையில்லாம அவள் மேல பொறாமைப் படுற...? இங்கிலீஸ் புலூயண்டா பேசுறதுக்கு அவளுக்கு திறமை இருக்கு அதனால அவளை வருற கெஸ்ட்கிட்ட பேச முன்னாடி நிற்க சொல்றாங்கஎன்றாள். 

இங்கபாரு டி. நாம எல்லாரும் கவர்மென்ட் ஸ்கூல் தமிழ் மீடியத்துல படிச்சவங்க. நம்மளுக்கு செகேன்ட் லாங்க்வேஜ்ல ஒரு சப்ஜெக்ட் மட்டும்தான் இங்கிலீஸ். அதை மட்டும் மொட்ட மனப்பாடம் பண்ணி பரிச்சை பேப்பரில் கக்கி வச்சு ஏதோ பன்னெண்டு வரை தத்தி தத்தி பாஸ் பண்ணிட்டேன். 

நம்ம வேளை, பி.காம் செமஸ்டர் எல்லாம் தமிழில் எழுத ஆப்ஷன் இருந்ததால பாஸ் ஆகிட்டேன். இப்போத்தான் கொஞ்சம் இங்கிலீஸ் புரிஞ்சு வாசிச்சு படிக்க பழகி இருக்கேன், என்னைய மட்டும் மேகலா வீட்டுல படிக்க வச்சது போல ஊட்டி காண்வென்டில் படிக்க வச்சிருந்தா அவளைவிட நான் இங்கிலீஸ்ல பேசி பிச்சு உதறி இருப்பேன்என்றாள்.

சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து கிராமங்கக்ளில் இருந்தும் வரும் பெண்களே அந்த கல்லூரியில் பெரும்பாலும் படித்து வந்தனர். 

பள்ளிகூட்டத்துக்கும் இந்த கல்லூரிக்கும் உள்ள வேறுபாடு. தினமும் சீருடை அணியவேண்டாம் என்பதே ஆகும். இங்கு சேலை, சுடிதார் என்று விதவிதமாக போடலாம். 

ஆனாலும் காலக் கொடுமையாக காலேஜ் யூனிபார்ம் என்று ஒன்றும் உண்டு. கல்லூரியில் சிறப்பு தினங்களில் அதை உடுத்தி வர வேண்டும் என்ற கட்டளையும் அங்குண்டு. 

பள்ளிக்கும் கல்லூரிக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லாத சூழலில் தான் அவள் படித்துக்கொண்டிருந்தாள்.

பொதுவாக அந்த கல்லூரியில் நன்கு படித்த அவுட் கோயிங் சீனியர் மாணவர்களே குறைந்த சம்பளத்தில் வேலையில் சேர்ந்துவிடும் வழக்கம் இருந்தது. 

சுற்றிலும் உள்ள கிராமங்களில் தமிழ்வழி பள்ளியில் படித்த மாணவிகளே அந்த கல்லூரியில் பயில்வதால் பொதுவாக அங்கே வேலைபார்க்கும் விரிவுரையாளர்களுக்கு கூட ஆங்கிலத்தில் சரளமாக பேச தெரிந்திருக்கவேண்டிய அவசியம் இல்லை.

பாடம் நடத்த தேவையான, சப்ஜெக்ட்டை ஆங்கில வழியில் விரிவாக சொல்ல தெரிந்திருந்தால் போதும், மேலும் அங்கே பாடம் எடுக்க வேலையில் சேர்ந்துவிட தகுந்த மதிப்பெண் பெற்றிருந்தால் ஆசிரியராக பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டும். 

ஆங்கில பாடத்தை புரிந்து அதை தமிழ்வழி பாடத்தில் பயின்று அக்கல்லூரியில் பயில வந்திருக்கும் பெரும்பான்மையான தமிழ் வழி கல்வி பயின்ற மாணவிகளுக்கு புரியும் விதத்தில் சப்ஜெக்டுகளை விளக்கிச் சொல்ல தெரிந்து இருக்கும் வகையில் ஆங்கில புலமை இருந்தால் போதும் என்ற நிலை உள்ள கல்லூரி அது. 

அழகிக்கும் படித்துவிட்டு அந்த கல்லூரியிலேயே விரிவுரையாளராக பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வமுடன் படித்து வந்தாள். 

யூ.ஜி முடித்துவிட்டு அங்கேயே ஆசிரியராக வேண்டும் என்ற லச்சியத்துடன் இருப்பவள். 

ஆனால் வந்திருக்கும் புது சேர்மேன் மகன் பூபதிராஜா படித்தது மில்லினியர்கள் படிக்கும் பிரபலமான பள்ளியில். கல்லூரி படிப்பை லண்டனில் முடித்தவன். அங்கேயே தொழில் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தவன். 

அவன் வாழ்கையில் ஏற்பட்ட ஒரு பெரும் சறுக்களின் காரணமாக தொய்ந்து போனவனை மீட்டெடுக்க பெற்றவர்கள் மகனை தங்களின் கூட்டுக்குள் உள்ளூரில் கொண்டுவந்து கட்டிபோட நினைத்தனர். 

ஊருக்குள் இருக்கும் தங்களின் கல்லூரி நிர்வாகத்தையும் நகைகடை மற்றும் பாரம்பரிய தொழிற்கூடங்களையும் அவனின் பொறுப்பில் கொடுத்து இங்கே கட்டிபோட நினைத்து முதல் அடியை அவனின் அம்மா தாட்சாயினி மகனை அழுது புரண்டு இங்கே அழைத்து வந்திருந்தாள்.

 மேல்தட்டு மக்களின் வாழ்க்கை முறைக்கு பழக்கப்பட்ட நுனிநாக்கில் ஆங்கிலம் பேசும் பழக்கம் உள்ள பூபதிக்கு கல்லூரி என்றால் இப்படித்தான் இருக்குமென்ற கணிப்புக்கும் எதிர்ப்பதமாக இருந்த அங்கிருந்த பிரின்சிபாலின் உடைந்த ஆங்கிலமே அவனை எரிச்சல் படுத்தியது.

 ஏற்கனவே அழகு மலரை கல்யாணம் செய்கிறேன் என்ற பேரில் சந்திந்த அல்ட்ரா மாடல் டைப்பில் இருந்த விக்னேஷின் குணத்தைக் கொண்டு அதைவிட டிரிபிள் மடங்கு அல்ட்ரா மாடல் கொண்ட பணக்கார வர்க்கத்தினனான பூபதி ராஜாவின் குணத்தை எடைபோட்டவளுக்கு காரணமே இல்லாமல் இவன் மேல் வெறுப்பு உண்டாகியது.

 ---தொடரும்---

 

 

 

 

x

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]

| Designed by Colorlib